Monday, May 9, 2011

அடையாளம் வாரம் - 11‏

சரக் சரக் என்ற சத்தத்துடன் வந்த ஒரு மிடுக்கான அலுவலர், மாறனின் கைது செய்யும் ஓலையை நீட்டினார். அந்த சிரிப்பில் எதிரியும் வீழ்வானே...அதே புன்முறுவலுடன் சொன்னார்.. ""ஒரு பதினைந்து நிமிடங்கள் கொடுத்தால், என் வேலையை முடித்துவிடுவேன், அதன் பின் நானே உங்களுடன் வருகிறேன், ஒன்றும் பயப்பட வேண்டாம்"" ஏற இறங்க, சுற்றும் முற்றும் நோக்கியபின் தலை அசைத்தார். ஒலி, ஒளிப்பதிவு தொடர்ந்தது... ""இன்னும் சில நிமிடங்களில் நான் கைது செய்யப்படப்போகிறேன், நான் மீண்டும் உயிருடன் வருவேனா அல்லது விதைக்கபடுவேனா என்பது எனக்கே தெரியாது, அல்லது காலவரை இன்றி ஏதேனும் ஒரு கடுஞ்சிறையில் அடைக்கப்படலாம்... எதுவாக இருந்தாலும்., இது போர்...விதைப்பதும், முளைப்பதும் கண்டு ஆவேசப்படாமல் தொடர்ந்து போராடுவோம்.... இறப்பதும், பிறப்பதும் இயல்பு, இதற்கிடையில் நம் இனத்திற்காக, சிறு விதையையோ, பெரும் போரையோ நான் அல்லது என் செயல்கள் செய்திருக்குமென்றால், மக்களாகிய நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நான் சொல்வதற்கில்லை. இருந்தாலும், பெரும்பாடுபட்டு உருவாக்கிய தனித்தமிழகம் தொடர்ந்து இயங்குவதற்காக, நான் இல்லாத போது யார் யார் எந்த பொறுப்பில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்க்கனவே சொல்லியிருக்கிறோம், எனவே அவர்களுக்கு உங்கள் ஆதரவை எனக்கு கொடுத்தது போல் தர வேண்டுகிறேன். நான் உயிருடன் மீண்டும் சந்தித்தால் தனிதமிழகத்தில் மட்டுமே. நன்றி"" சரியாக பதினான்கு நிமிடத்தில் முடித்துவிட்டு கைது செய்ய பணித்தார். அதே நேரத்தில் கக்கன், தீலீபன், குமரன் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கும்பம் மாதம் பிறந்த தனித்தமிழகம், பிறந்து ஒரு சில வாரங்களிலேயே தன் தலைவனை சிறைக்கு தள்ளியது. மீனம் முதல் நாளில் தேர்தலை நடத்தி வெற்றிபெற்றுவிட்டால், ஐ.நா. வையும் உலக நாடுகளையும் ஒத்துகொள்ளவைப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது என்று நன்பிக்கை கொண்ட மாறன், சிறையிலிடப்பட்டார். இதுவும் எதிர்பார்த்ததுவே. அனைத்து கட்டுபாடுகளையும் சில மணி நேரங்களுக்குள் விக்ரம் சிங் கைக்குள் கொண்டுவந்தான்.

பெங்களூர்:
மிகவும் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமண கூடத்தில் கூட்டம் நடந்தது. அரிமாவேந்தன் (தேர்தல் ஒருங்கிணைப்பாளர்) தலைமையில், தமிழ்ச்செல்வன் (தற்காலிக தலைவர்) முன்னிலையில், பால். புகழேந்தி (மூத்த கட்டளை தளபதி-பொறுப்பு), நடேசன் செல்வா (கட்டளை தளபதி-பொறுப்பு) ஆகியோர்கள் இருக்க காலை எட்டு மணிக்கே தொடங்கியது அந்த மிக முக்கிய கூட்டம். மேலும் நானூறு தலைகள் காணப்பட்டன. அனைவர் கையிலும் மடிக்கனினி, முதலில் அரிமா பேசினார். ""வணக்கம், மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் இப்பொழுது இருக்கிறோம் என்பது நாம் அனைவரும் தெரிந்த உண்மை, எனினும் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வரங்களே இருக்கும் இவ்வேளையில், இரண்டு செயல் திட்டங்கள் குறித்து நான் பேச இருக்கிறேன் . முதலில், மாறன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடர் பேரணி, தினமும் எல்லா இடங்களிலும் நடக்கவேண்டும், அதைவிட முக்கியம் தேர்தல் ஏற்பாடுகள். முதல் பொறுப்பு நடேசன் தலைமையில் நடக்கும், இரண்டாம் பொறுப்பு புகழேந்தி தலைமையில் நடக்கும், இருவரும் தங்கள் செயல் திட்டங்களை இப்பொழுது விளக்குவார்கள்.

நடேசன் செல்வா:
இந்திய படைகள் குழுமியிருக்கும் இத்தருணத்தில் பேரணி நடத்துவது சிரமமாக இருந்தாலும், என் திட்டம் இதுதான்.
1. முதலில் மாறனின் பேச்சை அனைத்து இடங்களிலும் காண்பிப்பது, இதனால் பொதுமக்கள் சிலர் கூட்டத்திற்கு வர வாய்ப்புண்டு.
2.  கல்லூரிகள், பள்ளி மாணவர்களிடம் அவரவர் மாணவர் தலைவர்களிடம் பேசி பேரணிக்கு வரவழைப்பது, இதன் முடிவை நன்றாக இருக்கும் என நண்பிக்கையாக இருக்கிறேன். எனக்கு தெரிந்து அனைத்து மாணவர்களும் வருவார்கள். நமக்கு எப்பொழுதும் மாணவர்கள் செல்வாக்கு உண்டு. மாணவர்கள் பெரும் தொகையாக வந்தால், அவர்களை பின் தொடர்ந்து பொதுமக்கள் நிறைய பேர் வருவார்கள் என்பதும் நம் கணிப்பு.
3. அனைத்து பேரணிகளும் நேரலை மூலமாக இணையத்திற்கு அனுப்பப்படும், நம் தொலைகாட்சி, துணைக்கோள்கள் அனைத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துகொள்ளப்பட்டதால், நாம் இணைத்தை மட்டுமே நம்பி உள்ளோம்.
துணைக்கேள்வி: இணையமும் துண்டிக்கப்பட்டால் என்ன செய்யப்போகிறீர்கள்?
பதில்: இணையம் துண்டிக்கும் சாத்தியம் மிகவும் குறைவு, ஏனென்றால் ஏதேனும் ஒரு ஐ.பேட் இருந்தாலே போதும்.

பால். புகழேந்தி:
தேர்தல் ஏற்பாடுகள் சாத்தியமே. ஒன்றும் குழப்பம் வராது. யாரும் பீதி அடையவேண்டாம். முதலில் தேர்தல் மீனம் முதல் தேதி என்பது அனைவருக்கும் சென்றடையவேண்டும்.இதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்று நம்புகிறேன். தேர்தல் பாதுகாப்பாக நடக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். எப்படி பாதுகாப்பை உறுதி செய்யப்போகிறோம் என்பதுபற்றி நான் இங்கே முழுமையாக சொல்லமுடியாது. அதற்காக பணிக்கப்பட்ட நபர்களிடமும், தமிழ்ச்செல்வனிடமும் அதற்க்கான வரைவு சமர்பிக்கப்பட்டு, அனுமதியும் வாங்கப்பட்டுவிட்டது. எனவே,
1 . தேர்தல் தேதி மக்களிடம் சென்றடையவேண்டும்
2 . வாக்குப்பெட்டி கையில் கிடைத்ததும், ஒரு மணி நேரத்திற்குள் சின்னங்கள் உள்செலுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும். அதற்க்கான பொறியாளர்களை தேர்வுசெய்யும் பனி முடுக்கிவிடப்பட்டுவிட்டது.
துணைக்கேள்வி: பொறியாளர்கள் தவறு செய்யும் பட்சத்தில் மொத்தம் தவராகிவிடக்கூடும், எப்படி இதை உறுதி செய்யப்போகிறீர்கள்?
பதில்: நன்று. இதற்கான மென்பொருள் பதிவுக்குசியில் இறக்கப்பட்டு பத்துநிமிடங்களில் செயல்படதொடங்கிவிடும். எனவே மிகப்பெரிய தொழில்நுட்பவாதிகள் தேவை இல்லை.

Saturday, April 23, 2011

அடையாளம் வாரம் - 10‏

தேர்தல் அறிவிப்பு:
தலைவர் வெற்றிமாறனின் அறிவுறுத்தலுக்கிணங்க, கட்சியின் தகவல் செயலாளராகிய நான், குமரன் வாசிக்கும் முறைப்படியான தேர்தல் அறிவிப்பு.

வருகின்ற மீனம் மாதம் முதல் நாள் தனி தமிழகத்தின் முதல் தேர்தல் நடைபெறும். நாம் இதுவரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து இந்திய கட்சிகளுக்கு வாக்களித்துக்கொண்டிருந்தோம், நாமும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்து, தமிழக மாநிலத்தின் தலைவராக வெற்றிமாறன் இருந்து வந்தார்கள். இனி அதற்க்கு அவசியம் இல்லாததால், நாம் நமக்கென்று ஒரு கட்சியை உருவாக்கியுள்ளோம். தமிழ் குடியரசு கட்சி என்ற பெயருடன், புலி சின்னத்துடன், சிவப்பு வண்ணத்தில் நடுவில் சீரிய புலியுடன் கொடியை கொண்டு இருக்கும். நமது கட்சி மட்டுமல்லாது, மக்களாட்சி தத்துவத்தில் இயங்கும் அனைவரும் தேர்ததில் கலந்துகொள்ள வரவேற்க்கப்படுகிறார்கள். இது முதல் தேர்தல் என்பதால், சில இந்திய கட்சிகள் களத்தில் நிற்க விரும்பும் வேளையில், அவர்களும் தேர்தலில் நிற்க அனுமதிக்க படுவார்கள். தேர்தல் தமிழ் குடியரசு கட்சியை காட்டிலும் இருபது விகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பெரும் நிலையில், இந்திய கட்சிகள் அடுத்த தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப்படுவார்கள். ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் நாள் வாக்கு தினமாக இருக்கும். தேர்தல் ஒருங்கிணைப்பாளராக அரிமாவேந்தன் இருப்பார், தேர்தல் முறைப்படி, நேர்மையான முறையில், மக்களாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில் நடைபெறுவதை உறுதி செய்வதன் பொருட்டு ஐ.நா. சபையின் உறுப்பினர் ஒருவரின்மேற்பார்வையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், ஐ.நா. சபை உறுப்பினர்கள் வர விருப்பமில்லாத பட்சத்தில், நோர்வே, சுவீடன், சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து சமூக ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களது மேற்ப்பார்வையில் நேர்மையான தேர்தல் நடத்த ஏற்ப்பாடு செய்யப்படும். சில அவசியமான கட்டுபாடுகள் தமிழக தேர்தலில் கடைபிடிக்கப்பட வேண்டும். அவற்றில் சில இங்கே வாசிக்கிறேன், முழுமையான விவரங்கள் தேர்தல் ஆணையத்திடமிருந்து வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

1. கூட்டணி கட்சிகள், தேர்தலுக்கு பின்பும் அதே கூட்டணியில் நிலைக்கவேண்டும்.
2. இலவச அறிப்பிவிப்புகள் தடை செய்யப்படுகின்றன
3. வேட்பாளர்கள், தலைவர்கள், கட்சிகள் தத்தம் சொத்து விபரங்களை தெரிவிக்கவேண்டும். விபரங்கள் தவறாக இருப்பின், நிரூபிக்கபட்டால் மீண்டும் தேர்தலில்
    நிற்கமுடியாது.
4. சுவரொட்டிகள், படவெட்டுகள், கூப்பாடுகள் தடைசெய்யப்படும். 
ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தேர்தல் கூட்டங்கள் நடத்தவேண்டும்.

இந்தியாவும், இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தலை தவிர்க்கும் பட்சத்தில், தனித்தமிழகதிற்கு புலிச்சின்னமும் இந்திய ஆதரவு கட்சிகளுக்காக இந்திய அரசின் சின்னமாக அசோக சின்னமும் வாக்கு இயந்திரத்தில் பொறிக்கபட்டிருக்கும். இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விரும்புபவர்கள் அசோக சின்னத்திற்கு வாக்களிக்கலாம். வாக்குகள் கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு அனைத்து நாடுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் அனுப்பிவைக்கப்படும். நாளை  வெற்றிமாறன் அவர்கள் தொலைக்கட்சியில் உரைநிகழ்த்துவார்கள், இதில் அரசின் நோக்கங்களும், கோட்பாடுகளும், அடங்கும்.

மாறன் வீடு:புற்களும், பூக்களும் கூட ஆழ்ந்து தூங்கும் இரவு மணி மூன்று. ஒரு காவலர் அவசரமணி பொத்தானை அழுத்தினார், அனைவரும் துப்பாக்கியை நேர்முனைபடுத்தி விறைத்து  நின்றனர். இந்தியபடையனியினர் சூழ்ந்தனர்...ஒரே ஒரு காவலதிகாரி பேசினார் "என்ன வேண்டும்? ஏன் இந்த நேரத்தில் உங்கள் முயற்சி? காலையில் பேசலாம், இந்திய படையணியினர் எதையும் கேட்கவில்லை, உட்புக முனைந்தனர்.... கொஞ்சம் பொறுக்கவும் நாங்களே கூப்பிடுகிறோம். ஒரு அதிகாரி கூப்பிட்ட அடுத்த பத்து மணித்துளியில் வந்தார் மாறன். கிட்டத்தட்ட இதே நிலைதான் திலீபன், கக்கன், குமரன் மற்றும் உயர் மட்ட தலைவர்கள் அனைவரின் வீட்டிலும். காவலர்களின் எந்தவித எதிர்ப்பையும் சந்திக்காமல், இந்திய படையணியினர் கைது ஏற்பாட்டை முடித்தனர்.
மாறன் கொண்டுசெல்லப்ப்படும்போது, வாகனம் சட்டென்று நின்றது, ஒரு அதிகாரி வந்து, மாறனின் முகத்தில் பளேரென்று அறைந்தார், "யார் நீ" முகத்தை கிள்ளி திரை கிளிக்கப்பட்டது, எங்கே மாறன்? வந்தவன் வாய் திறக்கவில்லை. திலீபன், கக்கன், குமரன் மூவரும் ஆள்மாறாட்டம் செய்திருந்தனர்.

காலை அவசர கூட்டம்:
திலீபனும், கக்கனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர கூட்டத்தில் யாருக்கும் தெரியாத சிலரும் கலந்து கொண்டனர். இன்னும் ஆறு மணி நேரம் நாம் அவசர நிலையை சமாளிக்கலாம். அதன்பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கூட்டமே இது. கூட்டத்தில் சில திட்டங்கள் பற்றி பேசினார். கூட்டத்தில் 800 பேர் இருந்தனர். இவர்களில் தமிழகம் அதிகம் பார்க்காத அழகிய, சிரித்த முகத்துடன் ஒருவர் அடிக்கடி பேசினார், அவர் பெயர் தமிழ்ச்செல்வன் என்றும், மாறன், திலீபன், கக்கன் இல்லாத போது அல்லது கைது செய்யபட்டால் கட்சியின் தற்காலிக தலைவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்ச்செல்வன், வயது 52, படித்தது சேதமுறா சோதனை துறையில், பட்டமேற்படிப்பு, அணு ஆராய்ச்சியில் முனைவர் பட்டம், கட்சியில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாதவர், முப்பது நாடுகளில் பெரிய பொறுப்புகளில் வேலைசெய்த அனுபவசாலி, ஆங்கிலம், ரஷ்ய மொழி, பிரஞ்சு மொழி நன்றாக பேசக்கூடியவர். மேடை பேச்சில் அவ்வளவு திறம் இல்லாவிட்டாலும், ஆலோசனை கூட்டம், மாநாடு, கலந்துரையாடல் போன்றவற்றை வழிநடத்தும் திறமை பெற்றவர். எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் சிரித்துக்கொண்டே சமாளிக்கும் பக்குவம் கொண்டவர், 
தமிழக அரசின் பொறியியல் கல்வி ஆணையகத்தில், திட்ட மேம்பாட்டு பிரிவில் தலைவராக வேலை செய்துகொண்டிருக்கிறார். பொறியியல் துறை மறுசீரைமைப்பு கொள்கை வகுப்பாளராக மாறனுக்கு துணை புரிபவர். இப்பொழுது அணுமின் கொள்கை மற்றும் பாதுகாப்பு பற்றி தீவிரமாக ஆய்வு செய்து மாறனுக்கு அறிக்கை செய்ய இருக்கும் வேளையில் தான், இப்பொழுது புதிய பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது.
அடுத்து பால்.புகழேந்தி. கல்வித்துறையில் இருப்போர் மட்டும் தெரிந்த முகம். அனைத்து பல்கலைகழகங்களின் வேந்தர், அண்ணா பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப்பபிரிவின் ஆலோசகர். வயது 44. கட்டுமான துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் கட்டுமானத்துறை - இரும்பியல் துறையில் முனைவர் பட்டம், ஆழிப்பேரலையை தாங்கு திறன் கொண்ட எக்கிரும்புகள், நிலநடுக்கம் தாங்கும் திறன்கொண்ட கட்டுமானங்கள் போன்றவை இவர் ஆராய்ச்சியினால் சொல்லிகொள்ளதக்கது, மாறனுக்கு கட்டுமானத்துறையில் செய்யவேண்டிய சீரமைப்புகளை இவர்தான் ஆலோசனை வழங்குவார். திலீபன் கைது செய்யப்பட்டால் அவரது பொறுப்பை தற்காலிகமாக எடுத்துக்கொள்வார். தற்காலிக கட்டளை தளபதி (நிர்வாகம், சட்டம், தேர்தல், கூட்டங்கள், காவல் துறை மற்றும் சில).

நடேசன் செல்வா. வயது 38. பொருளாதார நிர்வாகம் துறையில் பட்ட மேல்படிப்பு. பொருளாதார அடிக்கட்டமைப்புகள், உள்நாட்டு பொருளாதாரம், விவசாய பொருளாதாரம், வெளிநாட்டு முதலீடுகள் போன்றவற்றில் மாறனுக்கு உதவி செய்தவர். புதிய அரசின் பொருளாதார கொள்கை வகுக்கும் செயல் திட்டத்தை  அமுலாக்கும் தொட்டு அனைத்து அறிக்கைகள், திட்டங்கள் தயாராக வைத்திருப்பவர். இளங்கன்று, கொதிக்கும் ரத்தம் கொண்டவர், கக்கன் கைது செய்யும் பட்சத்தில், நடேசன் செல்வா., அவரது கட்டளை பணிகளை தொடர்வார்.

தொலைக்காட்சி நிலையம்:
மாறன் தன தேர்தல் அறிக்கையை பதிவு செய்துகொண்டிருந்தனர். இந்திய படையணியினர் நுழைந்து கொண்டிருந்தனர்....

தொடர்வோம்...

Sunday, April 10, 2011

அடையாளம் வாரம் - 9

அன்புடன் வெற்றிமாறன்,
மீண்டும் மீண்டும் பெயரை உச்சரித்து பார்த்துக்கொண்டாள்..கொஞ்சம் ஆசையாய் இருந்தது....பெயரை சொல்லிப்பார்க்க, பார்க்காமலே இருந்திருக்கலாம்..ஏன் பார்த்தோம் என்றிருந்தது. அப்பாட எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டனவே!!! அந்த கடிதம் இல்லை அந்த கவிதை...""என் பார்வைகளை முடியாவிட்டாலும் தவிர்த்துக்கொள்கிறேன்""""" தவிர்த்துவிட்டேன் என நினைத்துகொண்டாயடா  இன்றும்..பாவி... அதனால்தான் நாம் சேர்ந்திருந்தால் எப்படி இருப்போமோ அதைவிட தனித்தனியாக நன்றாக இருக்கிறோம் என உள்வார்த்தை கொண்டு பேசினாயா... அழுதாள்...புலம்பினாள். அந்த மனுசனுக்கும் பால் ஊத்தியாச்சு நேத்தே..அவரும் சொல்லாமலே செத்துபோனாரா? யாருடா சொல்வா? என ஆதங்கத்தை... நானே சொல்லி உன்னை அழவைக்கவும் மனசில்ல... அத நினைக்ககூட முடியல மாறா!! நா அழுதா நீ தாங்குவியாடா? தவிச்சுபோயிருவ...உனக்கு தெரியாமலே என மனசு  மண்ணுக்குள் போகட்டும் அந்த பெரியமனுசன்கூடவே... அந்த ஆளை இந்த ஊரே கொண்டாடுது!! என்கூட அரைமணிநேரம் பேசினே.. இப்ப வந்து பேசு பாக்கலாம்....குழிக்குள்ள அமுக்கியாச்சு ஒன்ன.. நீ எப்படி பேசுவ..

தூற்றினாள் தாமரைக்கண்ணனை... இவள் ஒருவள் மட்டுமே தூற்றினாள் தன காதலை கருக்கிவிட்டதாக நினைத்து. ஆனால், அன்று மாறன் காதல் பின் போயிருந்தால் ஒரு இனமே பல நூற்றாண்டுகளுக்கு பின்னல்லவா இருந்திருக்கும். தமிழில் தலைவன் என்று எழுத ஆளில்லாமல் அல்லவா போயிருக்கும். காதலும், மனைவியும், பிள்ளைகளும் என்று இருந்திருந்தால் ஒரு தலைமுறை மட்டுமே என்று போயிருக்கும். இன்று எத்தனை பிள்ளைகள், எத்தனை மனைவிகள், எத்தனை காதல்கள் வாழப்போகின்றன. இதுவல்லவா வாழ்க்கை. இதற்காக படைக்கப்பட்டவன், பிறந்தவன் இவனல்லவா. நல்லதோர் வீணை செய்தே நலங்கெடபுழுதியில் எறிவதுண்டோ - பாரதி கோவித்துக்கொள்வானடி பதரே என்றிருப்பார் தாமரைக்கண்ணன் இருந்திருந்தால்.

சென்னை:
வீறுகொண்டு கத்தினான் விக்ரம் சிங். சாலே...சாம்பார்வாலா!! உதயகுமார். இனிமேல் பேசி பயனில்லை. அதிரடியாக ஏதாவது செய்யவேண்டும். உடனே தொலைபேசினான். டில்லி ஒத்துக்கொண்டது. படையணி தளபதி கார்த்திகேயன் நாயரை பணித்தான். இளித்த நாயருக்கு சாயா கொடுத்தது போல் உலார்ந்த ஆனந்தம்.. இதற்க்காகத்தானே காத்திருந்தேன் என்பதுபோல் ஓடோடி வந்தார். எனக்கு அதிரடியா ஏதாவது செய்யனும்... சாம்பார்க்காரன் பாக்கணும். குள்ளநரி வேலை என்றாலே மலையாளிகளுக்கு பல்த்தெரியும்...அதிலும் தமிழனுக்கு எதிரா என்றால் சொல்லவா வேண்டும். ஒரு யோசனை சொன்னான். சுமார் ஒரு கோடிக்கும் மேல் பள்ளிகளிலும், மண்டபங்களிலும் அடைத்துவைத்திருக்கும் மலையாளிகள், தெலுங்கர்கள், வடவர்கள் பற்றி நீங்கள் யோசிக்கவே இல்லை. அவர்களில் பெரும்பாலும் பெரிய! மனிதர்கள்.. எல்லாம் வியாபாரிகள், தொழிலதிபர்கள். எனவே அவர்களை மீட்க அதிரடியாக செல்வோம். அப்பத்தான் மாறனின் அடுத்த நடவடிக்கை தெரியும்.

முதலில் 300 இடங்களை தெரிவு செய்தார்கள். அம்முன்னூறு இடங்களிலும் ஒரே நேரத்தில் சென்று பெருந்த்தாக்குதல் மூலம் பிணைக்கைதிகளை விடுவிப்பது. ரமேஷ் ராவ் காவல் துறை அதிகாரி தலைமையில் திட்டம் தீட்டப்பட்டது. ஆங்காங்கே நிலைகொண்டிருக்கும் படையணிகளை அப்படியே பயன்படுத்திகொள்வது - இதுதான் திட்டம். தகவல்,  நிலைகளுக்கு காதும் காதும் வைத்தாற்போல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 3 .30  மணிக்கெல்லாம் படையணிகள் பூனைபோல் சத்தமில்லாமல் சென்றது, படையணிகள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உட்புகுந்தார்கள்... புகுந்ததும் அறிவித்தார்கள்..."நாங்கள் இந்திய படையினர், உங்களை விடுவிக்க வந்துள்ளோம், யாரும் பயப்பட வேண்டாம்""" யாரங்கே மாறனின் காவல் துறை ஆட்கள்... சொல்லிமுடித்த அடுத்த வினாடி ஆட்களுக்குள் ஆட்களாக நிலைகொண்டிருக்கும் காவல் துறை படைகள், துப்பாக்கி விரித்தன... யாரும் சத்தம் போடவேண்டாம்.... நாங்கள் மாறனின் படையணிகள்.... பிணைக்கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்தனர். வணக்கம் இந்திய படையணியினரே.. உங்கள் துப்பாகிகளை கீழே போடுங்கள்... அனைத்து படையணியினரும் பினைபிடிக்கப்பட்டு, துப்பாக்கிகள் கையகபடுத்தப்பட்டன. கிட்டத்தட்ட முன்னூறு இடங்களிலும் இதே கதிதான். சுமார் பத்தாயிரம் வீரர்கள் பினைபிடிக்கப்பட்டனர், நூறு உலங்கூர்திகள், பல ஆயிரக்கணக்கான நவீனரக துப்பாக்கிகள், எரிபடைகள், படைஊர்திகள் கையகப்படுத்தபட்டன. சிறப்பு செய்தியாக, பத்து படைத்தளபதிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

தஞ்சை மாநகரம்:
இவை அனைத்தும் காலை பத்துமணி அளவில் முடிந்துவிட்டது. மூத்த கட்டளை தளபதி தீலிபன் அவசர செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்திய கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் சிங் அவர்கட்கு, மீண்டும் மீண்டும் ஏதாவது ஒன்றை தப்பும் தவறுமாக செய்து உங்கள் அதீத புத்திசாலிதனத்தை நிரூபிக்கவேண்டாம். வெற்றிமாறனின் அறிவுறுத்தலுக்கிணங்க பினைபிடிக்கபட்ட மக்களில் பெரும்பான்மையானோர் விடுவிக்கப்படுவர். மேலும் சந்தேகப்பட்டியலில் இருக்கும் சில தொழிலதிபர்கள், இந்திய அரசு அதிகாரிகள், உளவுத்துறை அலுவலர்கள், வட்டிக்கடை நடத்தும் சேட்டுக்கள், பொதுமக்களுக்கு ஊருவிளைவிக்ககூடிய சில குண்டர்கள் என பட்டியல் போடப்பட்டவர்கள் மட்டும் தமிழக அரசின் மேற்ப்பார்வையில் கண்காணிக்கப்படுவார்கள் அல்லது கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இது பற்றிய நீண்ட செயலறிக்கையை மாறனின் தகவல் செயலாளர் குமரன் படிப்பார்.

வணக்கம். மாண்புமிகு தலைவர் வெற்றிமாறனின் அறிவுறுத்தலின் படி, இந்த செய்தி வாசிக்கபடுகிறது.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
அனைத்து விவசாய நிலங்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும், அதன் விலையை இருதரப்பு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம். "யார் தமிழர்கள்" என்ற கேள்வி எழும் நிலையில் அவரவர் குலம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இடத்தின் தாய்ப்பத்திரம் முக்கிய ஆதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்படும். இதுபற்றிய புரிந்துணர்வு அறிக்கையை கூடிய விரைவில் அரசு சமர்ப்பிக்கும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தமிழகத்தின் அடிப்படை ஆதார வளங்கள் (நீர், நிலக்கரி, சுன்னாம்புத்தாது, பெட்ரொலியம் போன்ற) சார்ந்த தொழில்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும், மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம். இதில் வங்கிகள் அடங்கும்.

அனைத்து பொதுத்துறை/இந்திய அரசு நிறுவனங்கள் தமிழக அரசிற்கு சொந்தமாகும். இதில் அணு/நீர்/அதிவெப்ப மின் நிலையங்களும் அடங்கும். இது பற்றி பேச இந்திய அரசின் ஆணையர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு ஒன்று விடப்படும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு கீழ்: அனைத்து நிறுவங்களிலும் தமிழக அரசு குறைந்தது ஐம்பது பங்குகளை வைத்திருக்கு விரும்புகிறது. மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு மேல்: அனைத்து நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதற்கு தமிழக அரசு விரும்புகிறது. குறைந்தது முப்பது பங்குகளை அரசு கொள்வளவு செய்ய விரும்புகிறது. தலைமை நிர்வாக அதிகாரிகள் திரு. திலீபனை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
அரை ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் மணை நிலங்கள், தரிசு நிலங்கள் அனைத்தையும் தமிழக அரசு கையகப்படுத்தும். மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம்.


இவை அனைத்தும் புதிய அரசின் பொருளாதார கொள்கையின் அடிப்படையில் வகுத்த முடிவுகளாகும். இதன் தொடர்ச்சி நேரம்/நிலைமை இரண்டும் கருத்தில் கொண்டு அவ்வப்போது அரசின் கொள்கைகள் வெளிவரும். அயலார் இந்த மண்ணை விட்டு துரத்தி அடிக்கபடுவார்கள் என்ற பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை. இங்கே அனைவரும் வாழ வழிவகுக்கப்படும், ஆனால் யாரும் எங்கள் மண்ணை கொள்ளைகொண்டு போக அனுமதிக்கமாட்டோம். இந்த கொள்கைகளை இனப்பாடு பார்க்கும் அரசு/தாலிபான் போன்ற அரசு/அனைத்துலக நாடுகளுக்கு எதிரான அரசு என வர்ணித்து உலக நாடுகளிருந்து தனிமைப்படுத்த இந்தியா முயலும்/முயன்றும் வருகிறது. இது மலேசியா, சிங்கப்பூர், ரஷ்ய குடியரசு, வளைகுடா நாடுகள், புருனே, போன்ற நாடுகளில் இருப்பது போல் ""மண்ணின் மைந்தர்கள்" கொள்கை வடிவிலிருக்கும், எனவே நாங்கள் அனைத்துலக நாடுகளுக்கு எதிரான அரசு அல்ல என கூறி, இதுபற்றி இறுதியான அறிக்கை தனிதமிழகத்தின் முதல் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும். இதன் அடிப்படையிலே நாடு இயங்கும். எங்கள் கொள்கை வகுப்பாளர்கள் தேர்தல் முடிந்தவுடன் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்தது முறைப்படி எங்கள் கொள்கைகளையும், சிக்கல்களையும் வெளிப்படுத்துவோம். அதன்மூலம், அனைத்துலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறுவோம். தேர்தல் அறிவிப்பு முறைப்படி அடுத்தவாரம் வெளியிடப்படும்.

தொடர்வோம்....

Tuesday, April 5, 2011

அடையாளம் வாரம் - 8‏

அய்யம்பாளையம் பேரூராட்சி:
தாமரைக்கண்ணன் பறையர் குலத்தை சேர்ந்தவர். அப்பா கனகசுப்புரத்தினம்,  தமிழக காவல்த்துறையில் கண்ணியமாக வேலைசெய்த தொப்பை இல்லாத அலுவலர், பணிமுடியும் தருவாயில் மாவட்ட கண்காணிப்பாளராக வேலை செய்தவர், வேலை செய்த மாவட்டம் திண்டுக்கல். அய்யம்பாளயத்திலிருந்து ஒருமணி நேரபயனம்தான். அப்பா தனித்தமிழக கோட்பாடுகள் மீது நன்பிக்கை கொண்டவர். அவருடன் வேலை செய்த நண்பர் சாலமன் ஆரோக்கியசாமி, நெல்லைக்கருகில் முக்கூடல் பேரூராட்சியில் பிறந்து வளர்ந்தவர். சாலமன் ஆரோக்கியசாமி குடும்ப நண்பர். அவர்தான் கனகசுப்புரதினத்திற்கு தமிழ் தேசியம் சொல்லிக்கொடுத்தவர். சாலமன் ஆரோக்கியசாமியின் மகன் சாலமன் மாணிக்கம், தாமரைக்கன்னனின் நெருங்கிய நண்பரானவர், அவரும் சாகும் வரை தமிழக தனிநாடு குறித்து பல கட்டுரைகள் எழுதியவர். இவர் வெற்றிமாறனின் தாத்தாவுடன் படித்தவர். இதுவரை சங்கிலிப்பினைப்புகள் போதுமென நினைக்கிறேன். இந்த பிணைப்புகளை பற்றி மற்றுமொரு தனி ஒரு பதிப்பில் பார்க்கலாம். இந்த பிணைப்புகளை நீட்டிசென்று பார்த்தோமானால், பொன்னம்பலம், தோமையர், மை.பா, அரிமாவளவன் மற்றும் அறிஞர் குணா வரை நீள்கிறது. அய்யம்பாளையம் ஒரு நல்லாசிரியரை இழந்த ஊர். அரசியலில் தீவிரமாக இறங்கியபின் இப்பொழுதுதான் வெற்றிமாறன் இரவை இங்கு கழிக்கிறார், இந்தபுன்னிய மண்ணில். தான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அம்மாவும், அப்பாவும் தன்னை தாமரைக்கன்னனுக்கும், தமிழகத்திற்கும் தத்து கொடுத்துவிட்டு பழநியிலிருக்கும் நூர்ப்பாலையை கவனிக்க சென்றபின் வாடிப்பட்டி தாண்டி வந்து வாழ்ந்த ஊர். வாடிபட்டியிலிருந்து சில மைல்கள் தான் என்பதால் தன் மண்ணை விட்டுவிட்டு வந்தோம் என்ற நினைப்பே இல்லாமல் போனது மாறனுக்கு. தன் கண்கள் பார்த்து மூலையில் பதிவு செய்தவை அய்யம்பாளையம், மருதாநதி மற்றும் சுற்றியிருக்கும் மலைகளும், மலை சார்ந்த தென்னந்தோப்புகளும், பச்சை வெளிகளும்.

இந்த மண்ணில் காதல் பிறப்பது ஒன்றும் ஆச்சர்யமானது அல்ல.இந்த ஊரில் வாழ்ந்துவிட்டு காதலிக்காமல் போனால்தான் குற்றம். கவிதை எழுதுவதற்காக நதி ஒன்று தவழ்கிறது என்றால் அது மருதாநதியாகத்தான் இருக்கவேண்டும். இடுக்கில் ஓடும் நீரோடை, வெள்ளைப்பூக்கள் போல நீரலை, காலிடுக்கில் கடிக்கும் குட்டி குட்டி மீன்கள், வார்த்தைகளாக அள்ளித்தரும் துள்ளல் ஓசைகள். இந்த ஆற்றங்கரைதான் மாறனுக்கு கவிதை எழுத சொல்லிக்கொடுத்தது.

அய்யம்பாளயத்தின் தென்கோடியில் இருப்பது குட்டிகரடு. சத்தமில்லாத குட்டிமலை, மருதாநதியின் வாய்க்கால் அதனருகில் ஓடியதற்கு சான்றாக கோடு போட்டாற்போல் ஒரு தடமிருக்கும் இன்றும். குட்டிகரட்டிலிருந்து பார்த்தால் தெரியும் மூன்றாம் வீடுதான், தாமரைக்கண்ணனின் வீடு. யாரவது ஒருவர் அங்கே ஏதாவது ஒரு பாடம் கற்றுகொண்டிருப்பார்கள் எப்பொழுதும், அது அரசியலோ, தமிழோ, அல்லது தமிழரின் வரலாறோ. வீட்டின் முதல்மாடம் பெரியது, அங்கே பிள்ளைகள் படிப்பது வழக்கம். வீட்டின் முற்றம் அதன்பின் அழகிய தோட்டம், அங்கே சிலருக்கு மட்டும் அனுமதி உண்டு. அதில் முதலாமாவன் வெற்றிமாறன். வகுப்பு முடிந்ததும் வெண்ணிலாவுடன் பேசுவதும் அங்கேதான். தோட்டத்தின் தென்கிழக்கு மூலையில் ஒரு கொய்யா மரமுண்டு, இப்பொழுது....அங்கே உட்கார்ந்திருந்தார் மாறன். "கொஞ்ச நேரம் பேசணும்" பதினைந்து வருடமிருக்கும் அந்த குரலை கேட்டு "நல்ல இருக்கியா வெண்ணிலா?" இருக்கேன்... நீ?... நீங்கள்? தடுமாறினாள். ரெம்ப பிரச்சினையா இருக்குன்னு கேள்விபட்டேன்... எங்க வீட்ல சொன்னாக! பாத்து இரு மாறா..அந்தப்பிள்ள எப்பிடி இருக்கு?நல்லா.. வச்சிகிறையா? எல்லோரும் நல்லா இருக்கோம்... நம் ரெண்டுபேருக்கும் திருமணம் நடந்திருந்தா எப்படி இருப்போமோ தெரியல? ஆனா, இப்ப ரெண்டு பேருமே நல்லா இருக்கோம். அந்த நேரத்தில் வந்த வெண்மதி, வெண்ணிலா இருவரும் நலம் விசாரித்துவிட்டு மாறன் வீட்டில் அனைவரும் கிளம்பினார்கள்.


செங்கல்ப்பட்டு அரசு மேனிலைப்பள்ளி:

துப்பக்கிக்காரனின் கைபேசி அழைத்தது. கக்கன், கட்டளைத்தளபதி பேசியது. கைபேசி உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டது. வணக்கம் தம்பி. நல்லா இருக்கீங்களா? நல்லா பாத்துக்கிட்டங்களா பசங்க? நம்ப பசங்க தான்... ஒன்னும் செய்ய வேண்டாமுன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். நடிப்பு வேலைய விட்டுட்டு வேற ஏதோ செய்றதா கேள்விப்பட்டேன்... அதேன்... செங்கல்ப்பட்டில் காபி சாபிட்டுட்டு போவீங்கன்னு இறக்க சொல்லியிருந்தேன்.... காபி சாப்பிட்டாச்சா? உதயகுமாரின் கை லேசாக நடுங்கியது. ஒன்னும் பிரச்சினை இல்ல... அந்த துப்பாகித்தம்பி ஒரு கடுதாசி குடுப்பாப்பில... அதுல இருப்பது போல கூட்டத்துல பேசுங்க....எல்லாம் சரியாகிவிடும்.

உதயகுமாருடன் சென்னையிலிருந்த வந்த காவலர்கள் அங்கேயே விடப்பட்டு கக்கனின் ஆட்களுடன் விருத்தாச்சலம் புறப்பட்டது உலங்கூர்தி. கூட்டம் அலைமோதியது. என் இனிய தமிழ் மக்களே... எல்லோருக்கும் சோதனை காலம் வரும், போகும். நமக்கும் வரும்... அது பனிபோல விலகிவிடும். உளறினான். பின், பேசினான்... இல்லை படித்தான். தனித்தமிழகம் என்பது நம் இனத்தின் விடுதலை., இது தெரியாமல் நம்மிடம் இந்தியா விளையாடுகிறது. நான் பேட்டி கொடுத்தது ஒரு தற்பாதுகாப்புக்காகத்தான் என்பது என்னை சுற்றி நெருங்கி இருக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்... துப்பாக்கிமுனையில் என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டித்தான் இந்தியா என்னை அந்த பேட்டி கொடுக்கச்சொன்னது., நானும் வேறு வழி இல்லாமல் பேசிவிட்டேன். நீங்கள் போட்ட பிச்சைதான் என் வாழ்க்கை, நான் உங்களுக்கு துரோகம் செய்வேனா? நீங்கள் என் படம் பார்த்து என்னை ரசித்தற்க்காக நான் கடன்பட்டுள்ளேன், மும்பையிலிருந்து வந்த என்னை உயரே உட்கார வைத்து அழகு பார்த்தவர்கள் தமிழர்கள், உங்களுக்கு நல்லது என்றால் நான் துணை நிற்ப்பேனே தவிர எதிர்ப்பேனா?

எனவே, என் ரசிக சிங்கங்களே...உங்களால் முடிந்த அளவுக்கு தலைவர் வெற்றி மாறனுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என கேட்கவே நான் இந்த கூட்டத்திற்கு வந்தேன். மேலும் அறிவித்தபடி அனைத்து கூட்டங்களிலும் நான் வெற்றிமாறனுக்கு ஆதரவாக பேச முடிவுசெய்துள்ளேன். மீண்டும் நாம் மதுரை கூடத்தில் சந்திப்போம்.

தொடர்வோம்....

Tuesday, March 22, 2011

அடையாளம் வாரம் - 7‏

தாமரைக்கண்ணன் வீடு:
வீறுகொண்டு எழுந்த இனம் இன்று இலவு வீட்டில் உட்காந்திருக்கிறது. இலவு விசாரிப்பதும், ஒப்பாரி பாட்டு பாடுவதும் நம் மரபு. எதிரியின் வீடாயினும் சாவு என்று வந்துவிட்டால், போகவேண்டும் என்பது எழுதபடாத சட்டம். தாமரைக்கண்ணன் முதல் கடைக்குடிமகன் வரை நாடே வந்திருந்து, மரியாதை செலுத்தியது. பள்ளிகூட ஆசிரியர் மரணத்தின் மூலம் மக்களின் பேராசியர் ஆனார். மக்களை மனதை வென்றார். புலிக்கொடியுடன் ஆட்டம், பாட்டம், கூத்து, கரகம், புலியாட்டம், ஒயிலாட்டம் என ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைக்கன்னனின் மூத்தமகனார் இடங்கையில் மண்ணை புறம்தள்ள, தாமரைக்கண்ணனின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.


சென்னை மாநகரம்:
திரைப்படமொன்றில் விறு விறு நடித்துத்கொண்டிருந்த உதயகுமாரின் கைபேசி சிணுங்கியது. வணக்கம் என்றான்., டில்லியிலிருந்து அழைப்பு. அடுத்த பத்து நிமிடங்களில் அழகிய விடுதிக்கு கூட்டிசெல்லப்பட்டான், அங்கிருந்தது விக்ரம் சிங். டில்லியிலிருந்து அனுப்பப்பட்ட கூடுதல் தலைமை செயலாளர். தமிழக நடவடிக்கைகளை கட்டுபடுத்த அனுப்பப்பட்டவர். நாங்க எல்லாத்தையும் பார்த்துகொள்கிறோம், நீங்கள் கட்சியின் தலைவராக முதலில் நியமிக்கபடுவீர்கள், கட்சியை உடைப்போம், உங்களுக்குப்பின் வருபவர்களை வைத்து அரசியல் செய்யனும். உங்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் பின் வருவார்கள், உங்கள் பேச்சை கேட்பார்கள். தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றால்... கொஞ்சம் யோசித்துபாருங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால்... மேலும் டில்லியை பகைத்துகொள்ளவேண்டாம். ஆனால், வெற்றிமாறனை பகைத்துக்கொள்வது    சிரமம்.... பாதுகாப்பு? என்றான் உதயகுமார். அதை இந்திய அரசு பார்த்துகொள்ளும்... உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் உடனடியாக கூடுதல் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும். கவலைப்படவேண்டாம். ஈயென இழித்தான் உதயகுமார்.


உதயகுமாரை பற்றி சில வரிகள் சொல்லவேண்டும். இன்றைய நாட்களில் கூடுதல் வசூல் கொடுக்கும் நடிகன் இவர்தான். அம்மா மலையாளி, அப்பா மராட்டியர். மும்பையிலிருந்து பிழைக்க வந்த குடும்பம். ஆறடி உயரம், பளிசென்ற மேனியில் கொஞ்சம் வெண்ணை தடவினார்போன்ற நிறம், கொள்ளைகொள்ளும் கண்கள், நீண்ட புருவம், செதுக்கிய மீசை, பளீரென பேசும் பக்குவம்... மொத்தத்தில் நடிக்க சிறந்தவன், தெரிந்தவன். திரையில் தோன்றினாலே சத்தம் வின்னைபிளக்கும் ரசிகர்கள், உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் கூட்டம். பணத்தை கொட்டி செலவழிக்க தயாராக இருக்கும் பணமுதலைகள்.


அன்றைய மாலை செய்திகளில் அழகிய சிரிப்புடன் கொட்டை செய்தியில் தோன்றினான். வெற்றிமாறனின் அதே கட்சிக்கு டில்லியிலிருந்து அறிவிக்கப்பட்ட தலைவனானான். முதல் பேட்டி கொடுத்தான். வணக்கம். என் இனிய தமிழ் மக்களே... உங்களை இந்த பதவியில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்னை வெறும் நடிகனாக மட்டுமே பார்த்திருந்த நீங்கள் தலைவனாக பார்க்கபோகிறீர்கள். பதவிக்காக தலைவர் பதவியில் இருக்காமல், உங்களுக்கு சேவகனாக இருக்கப்போகிறேன். அதற்காக, நான் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன். நாளை காலை என் மேலாளர் அட்டவணை வெளியிடுவார். அதன்படி தமிழகத்தின் பட்டி, தொட்டிகளிலெல்லாம் பேச இருக்கிறேன். நன்றாக ஆட்சி செய்துகொண்டிருந்த வெற்றிமாறன் எதனால் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என எல்லோருக்கும் பெரும் வியப்பாக இருக்கிறது. எனக்கு தெரிந்து ஏதோ ஒரு வெளிநாட்டு சதியாகவே இருக்கும் என நம்புகிறோம். எங்களுக்கு கிடைத்த உளவுத்துறையின் தகவலின் படி இது சீனாவின் திட்டமாகவே இருக்கும். மேலும், சுவிஸ் வங்கியில் சீனா பெரும்தொகை ஒன்றை மாறனின் பெயரிலும், அவர் மனைவியின் பெயரிலும் போடபட்டிருக்கிறது என்றும் அதன் நகல் இன்றோ நாளையோ நாங்கள் வெளியிடுவோம் என்றும் கூறினான்.


மேலும் பேசியதாவது, இந்தியா ஒரு மாபெரும் வல்லரசு. இதைவிட்டு மாறன் உங்களை திசை திருப்பி எங்கோ கூட்டிச் செல்கிறார் என்றும், இந்தியாவின் பலத்திற்கு முன் யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றும் பேசினான். தனியாக சென்றால், தமிழகம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்றும், பசியிலும், பட்டினியிலும் இருக்கவேண்டியிருக்கும் எனவும். முதலீடுகளுக்கு பணம் இல்லாமல் போவதால் வேலை இல்லா தின்டாட்டம் தலைவிரித்தாடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் எனவும் பேசினான். இன்னும் நான்கு மாதத்தில் பொது தேர்தல் அறிவிக்கப்படும், அதில் இந்தியாவின் சார்பாளர்களே வெல்வர், தனித்தமிழக கோரிக்கை மாறனின் தனிப்பட்ட கருத்து அதற்க்கு மக்களின் ஆதரவு என்றும் இருக்காது. எனவே தனித்தமிழக கூப்பாட்டிற்கு பின் செல்பவர்கள் சிறிது யோசித்துக்கொள்ளுங்கள்... நாளை இந்திய சார்பாளர்கள் வென்றபின் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்காது எனவும் எச்சரித்தான். இப்பொழுதே, அவர்கள் உளவுத்துறையால் ரகசியமாக கவனிக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு, பட்டியல் தயாரிப்பதாகவும்... அந்த பட்டியல் நபர்கள் நாளை களை எடுக்கப்படுவார்கள் எனவும் அச்சுறுத்தப்பட்டது. அரசுத்துறை, பொதுத்துறை நிறுவங்களில் வேலை செய்பவர்களின் வேலை போவது உறுதி, தனியார் நிறுவனங்களுக்கு அரசிடமிருந்து ஓலை அனுப்பபோவதாகவும், தனித்தமிழக ஆதரவு தொழிலாளர்களை நீக்க அரசு பரிந்துரைக்கும் எனவும், கடைபிடிக்காத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


முதல்கூட்டம் விருத்தாச்சலத்தில் என அறிவிக்கப்பட்டது. சுவரொட்டிகள், விண்ணைத்தொடும் படவெட்டுகள் என களைகட்டியது. இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் தருணத்தில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். நாளைய முதல்வர், தேசபற்றுத்தங்கம், பாரதமாதா ஈன்றெடுத்த தவப்புதல்வன், இந்திய ஒற்றுமையின் இலக்கணம் என பாட்டங்கள் பல வாங்கினான். சாலைகள் வண்ணமயமாயின. இந்திய படையணியினர் களமிறங்கி வேலை செய்தனர். விசிலடித்தான் குஞ்சுகள் கர்ச்சித்தன. பாலபிசேகம், சிறப்பு வழிப்பாடு கோவில்களில் செய்யப்பட்டது.


நேராக உதயகுமார் வீட்டிலிருந்து உலங்குவிமானம் விருத்தாச்சலத்தில் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உலங்குவிமானத்தில் பதினைந்து பாதுகாப்பு காவலர்கள், அனைவரிடமும் அதிநவீன துப்பாக்கிகள். மின்னும் வெள்ளைவேட்டியில் பளீரென வந்தான் உதயகுமார். வீட்டுவாசலில் பாதுகாப்பிற்காக சுமார் ஆயிரம் படையினர். பட்டென பறந்து சென்றது உலங்குவிமானம். வானில் பறக்கும்போது விமானி விமானம் பழுது என பள்ளிளித்தான். உடனடியாக இறங்கவேண்டும் இல்லையென்றால் ஆபத்து என்றான், இன்னும் சில நிமிடங்களே பறக்கமுடியும் என்றான் விமானி. நண்பிக்கையில்லாத பாதுகாவலர்கள், கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டார்கள். ஒன்னும் பழுதில்லையே, நல்ல விமானம் தானே கொடுத்தோம் என்றனர். ஐயா அது உங்கள் விருப்பம், நீங்கள் சொல்வது போல் கேட்கிறேன்., போ என்றால் போகிறேன். எனக்கு தானியங்கி காற்றுமிதப்பான் இருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறது... ஆனால் சரியான பயிற்சி இல்லாமல் பறப்பது கடினம். சீக்கிரம் சொல்லுங்கள் என்ன செய்வதென்று என கேட்டான் விமானி, ஐயா, அருகில் செங்கல்பட்டில் இறங்கலாம். சீக்கிரம் சொல்லுங்கள். அதன்படி செங்கல்பட்டு அரசினர் மேனிலைப்பள்ளி விளையாட்டுத்திடலில் உலங்குவிமானம் இறங்கியது. இன்னும் சரியாக ஒரு மணி நேரந்தான் இருக்கிறது, மேடையில் உதயகுமார் முழங்க. அவசர அவசரமாக அடுத்த உலங்கூர்தி ஏற்பாடு செய்யப்பட்டு, வந்து கொண்டிருந்தது. அது வர இன்னும் முப்பது நிமிடங்கள் பிடிக்கும், எனவே ஆசிரியரின் அறை கொடுக்கப்பட்டு அமரவைக்கப்பட்டான். உதயகுமார் வந்த உலங்கூர்தி பழுடைந்துவிட்டதால், அரைமணி நேரம் தாமதமாக கூட்டம் தொடங்கும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர் விருத்தாச்சலத்தில்.

ஐம்பது துப்பாக்கியினர் உதயகுமார் இருந்த அறைக்குள் புகுந்தனர், மின்னல் வேகத்தில் பதினைந்து படையினர் மற்றும் உதயகுமார் நெற்றியில்.....

Saturday, March 19, 2011

அடையாளம் வாரம் - 6‏

தஞ்சை ஆட்சி நகரம்:
சட்டமன்றத்திற்கு முன் இருக்கும் ஆகப்பெரிய கொடித்திடல். குறைந்தது மூன்றே கால் லட்சம் மக்கள் குழுமியிருந்து பார்க்கும்படி வடிவைமைக்கப்பட்ட திறந்தவெளி திடல். காலை ஒன்பது மணி அளவில் வெற்றிமாறன் புலிக்கொடி ஏற்றுகிறார். பத்துபேர் மரத்தடியில் நின்றாலே ஒரே சல சலவென்று இருக்கும்.... மூன்றை லட்சம் மக்களும் மாறன் சொல்லும் வணக்கத்திற்காக மூச்சு கூட விடாமல் உட்கார்திருந்தார்கள். பேசினார்.... இன்று நாம் தனியாக இருக்கிறோம். இதுவரை எந்த நாடும் நம்மை அங்கீகரிக்கவில்லை..... இந்திய படைகள் சூழ்ந்துள்ளன. படைகளை கண்டு யாரும் அஞ்சவேண்டாம்...இந்திய படைகளின் ஒரே ஒரு தோட்டா கூட செலவழிக்காமல் நாம் அந்நிய நாடுகளால் அங்கீகரிக்கப்படுவோம். நம்பிக்கை கொள்ளுங்கள். இதுவரை நாம் நம் அடையாளங்களை இழந்து நூற்றைம்பது கோடியில் ஒருவராக வாழ்ந்தோம்... நம் செல்வங்கள் சுரண்டப்பட்டன... வஞ்சிக்கப்பட்டோம்... எள்ளி நகையாடப்பட்டோம்.... நம் எல்லைகளை மாற்றான் கொள்ளைகொண்டான்.... நம் சொந்தங்களை முள்வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள்.....  கட்ச தீவை யாருக்கோ தாரைவார்த்து கொடுத்தார்கள்... நன்றிக்கு மாறாக மீனவர்களை இழந்தோம்...விவசாயம் செய்ய வேண்டிய விழை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாற்றப்பட்டு மார்வாரிகளும், வடவர்களும், மாற்றான் மக்களும் அபகரித்தனர்....ஏன் தண்ணீர் இல்லை? எங்கே நம் நீர் உரிமை? ஆபத்தான அணு உலைகளும், தாமிர உருக்கு ஆலைகளும் நம் மண்ணில் கட்டினார்கள்.

இன்று நாம், நமது என்றிருக்கப்போகிறோம். இது தமிழ் மண். இது பதினைந்து கோடி தமிழன் எந்த நாட்டில், எந்த நாடுடைய குடியுரிமை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு இந்த மண் சொந்தம். இங்கே மாற்றான் நிலம் வாங்க முடியாது. ஆனால் குடியிருக்க அனுமதி உண்டு. யாரும் வாழலாம்... ஆனால் தமிழன் மட்டுமே ஆள்வான். உலகின் எந்த மூலையில் சென்றாலும் தமிழன் அடிபடுவான் என்பது நாம் தினந்தோறும் கேட்கும் செய்தி. இன்று முதல் ஏன் என்று கேட்க ஒரு அரசு, மாபெரும் தற்காப்பு படைகள் இருக்கிறது. நம் முதல் திட்டமாக அனைவருக்கும் அடையாள அட்டை மாற்றப்படும். புலிக்கொடி ஏந்திய அட்டையில் இனம் என்ற இடத்தில் "தமிழர்" என்றும் பிற இன மக்களுக்கு அவரவர் இனம் அச்சிடப்பற்றிருக்கும்.

இந்த அரசு "குலப்பாகுபாடு" (வடமொழியில் ஜாதி என்று சொல்வார்களே) பார்க்கும் அரசு அல்ல. அதேநேரத்தில், தன குலம் யாரென்று மழுங்கசெய்யும் அரசும் அல்ல. குலம் நமது அடையாளங்களில் அடிப்படையான ஒன்று. குலம் தெரியாத காரணத்தினால் யார் யாரோ தமிழில் பேசி நம் இனம் மொத்தத்தையும் அழித்துவிட்ட வரலாறு ஏராளம். அதற்க்கு எடுத்துக்காட்டுதான், சுமார் நானூற்றி ஐம்பது ஆண்டுகளாக இந்த மண் அயலானால் ஆளப்பட்டது. அதனாலேயே.. நம் இனம் சுவடு தெரியாமல் குட்டி தீவில் குழிபறிக்கப்பட்டது. நமக்கு அந்த நிலை வருமுன் நாமே நம் காலில் நின்றுவிடுவோம். நாமே நம்மை ஆட்சிகொள்வோம்.

உலகின் மூத்தமொழிகளுள் முதன்மையானது தமிழ். உலகிற்கு இலக்கணம் கற்றுகொடுதது தொல்காப்பியம். முதன் முதலில் ஆற்றின் குறுக்கே அணை கட்டி வாய்க்கால் பாசன முறை கற்றுகொடுத்தவன். கட்டுமரம் கட்டி கடுலகை எப்படி ஆளவேண்டும் என்று காட்டிக்கொடுத்தவன். ஆதிதமிழன் தான் முதலில் கடலில் பயணித்தவர்கள். வெறும் மாட்டுக்கறியை வெந்நீரில் அவித்து சாப்பிட்டுகொண்டிருக்கையில், சமையற்கலையை உலகிற்கு கற்றுகொடுத்தவன் தமிழன். உலகமே மரத்தில் வீடு கட்டியிருக்கையில், சுட்ட சுண்ணாம்பையும், கற்களையும் கலந்து (சிமிண்டில்) காரைவீடு கட்டி வாழ்ந்தவன். ஏன் தமிழன் உலகிருக்கு அருளிய பெருமைகள் எல்லாம் திட்டமிட்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படாமல் இருந்தன. உணவே மருந்து மருந்தே உணவு என பாட்டி வைத்தியம், கைவைத்தியம் கற்றுகொடுத்தவன். நட்சத்திரங்களையும், வானத்தையும், பாடும் பறவைகளின் ஒலியின் மூலம் வான் குறிபார்த்து கதைத்தவர்கள் முன்கூட்டியே. எங்கே நாம் மறந்தோம். இல்லை மறைக்கப்பட்டோம். இனி நாம் அடையாளங்களுடன், பெருமைகளுடன் வாழ்வோம்.

வெறும் அடையாளங்களுக்காகவும், பெருமைகளுக்காகவுமா நாம் வெளியேறினோம். ஆம். இன்னும் ஐநூறு ஆண்டுகள் கழித்து நாம் பிள்ளைகள் எப்படி பேசும். தமிழிலா... ஆங்கிலத்திலா... இந்தியிலா... நமக்கே தெரியாது. நாம் மொழி இழந்து நிற்ப்போம். இன்று எத்தனையோ நாடுகளில் வாழும் ஆதிகுடிகள் தங்கள் மொழி அடையாளத்தை இழந்து நிற்கிறார்கள். அவர்கள் யார் என்று தங்களை அறிமுகபடுத்திகொள்வார்கள். மொழியும், இனமும் மட்டுமே மனித அடையாளங்கள். இவைகள் இழக்கப்படும்போது அவர்கள் வெறும் விலங்கினங்களே என்றால் மிகை ஒன்றும் ஆகாது. அதனால் நாம் இந்த முடிவிற்கு வந்தோம்.


இப்பொழுதும் நாம் ஆயத்தமாக இருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்க. ஆனால், ஒரு கேள்வி. உங்களுடன் சேர்ந்து இருக்க ஒரே ஒரு சரியான காரணம் மட்டும் சொல்லுங்கள். என்ன சொல்லப்போகிறீர்கள். நாம் எல்லோரும் ஒருவர். நாமெல்லாம் இந்தியர்...என்றா? நங்கள் உரக்க சொல்கிறோம். நாங்கள் இந்தியர் அல்லர். நாங்கள் தமிழர். எல்லோரும் ஓரினம் என்றால்.... ஏன் இத்தனை நாடுகள்... இத்தனை போர்கள்... ஏன் சோவியத் உடைந்தது....மொழியும், இனமும் அல்லாத ஒரு காரணம் சொல்ல முடியுமா? ஏன் கொசோவா தனியா சென்றது? செக் என்றும் சுலோவாக்கியா என்றும் ஏன் பிரிந்தன? மொழி, இனம் என்பதல்லாது வேறு ஒரு காரணம் உண்டா? ஏன் கிழக்கு, மேற்கு ஜெர்மனி ஒன்றாக இணைந்தது..ஏன் யூதர்கள் ஓடினார்கள்..... இஸ்ரேல் ஏன் பிறந்தது? நாமெல்லாம் இந்துக்கள். ஒரே நாட்டில் வாழ்வோம். நன்று. அப்படியானால், வளைகுடா நாடுகள் என்ற ஒரே நாடுதான் இருந்திருக்கவேண்டும். ரோமன் கத்தோலிக்கம் என்று இன்னொரு நாடு இருந்திருக்கவேண்டும். இரண்டுமே இல்லை. ஏன்............... அது மனித இயல்பு அல்ல. மனித இயல்பு அவணன் மொழியினருடனும், இனத்தவரிடமும் சேர்ந்திருப்பது. மதத்தவரிடம் அல்ல. மனித இயல்பு தாண்டி நாம் மனமற்றம் செய்யப்பட்டிருக்கிறோம். அது 1947 ஆண்டு தொட்டு செய்யப்பட்ட மூளைச்சலவை. மனிதனாக வாழ மொழி, இனம்  மிக அவசியம். இனமும், மொழியும் வாழ தனிநாடு அதைவிட அவசியம்.

எனவே என் இனமே... என் இன மக்களே. உங்கள் ஆதரவும், நண்பிக்கையும் தான் நாம் இனத்தை அடுத்து வரும் நாம் சந்ததியினருக்கு அடையாளத்தை எடுத்துச்செல்லப்போகிறது. நீங்கள் துப்பாக்கி எடுத்து சண்டையிட வேண்டும் என நான் கோரவில்லை. அண்ணன் வேலுப்பிள்ளை பிராபகரன் சுட்ட சூடு இன்னும் பத்து தலைமுறைக்கு நம் நம்பிக்கையை உடனிருத்தும். அவரின் கோபவார்த்தைகள், ரத்தத்தினால் எழுதிய சுவடுகள் நாம் வீழ்ந்தாலும் நம் இனத்தை தூக்கிநிறுத்தி தனிநாடு வாங்கச்செய்யும். நான் இதுவரை கோடிட்டு காட்டிய வாசகங்கள் அண்ணன் பேசிய மிச்சங்கள். எனவே, நான் உங்களிடம் நான் கேட்பது உங்கள் ஒத்துழைப்பு. இந்திய படைகள் எந்த காவல் நிலையத்தையும், எந்த நிறுவனத்தையும், நாம் பாதுகாத்து வந்த கட்டமைப்பையும் கட்டுக்குள் கொண்டுவந்துகொள்ளட்டும். உங்கள் ஆதரவும், நண்பிக்கையும், ஒத்துழைப்பும் இருந்தால் இன்னும் மூன்றே மாதங்களில் அனைத்து நாடுகளும் தமிழகத்தை அங்கீகரிக்க செய்ய வைப்போம். அதுதான் எங்கள் குறிக்கோள்.

இத்துடன் என் உரையை முடித்துக்கொண்டு விடைபெறுகிறேன். மீண்டும் சந்திப்போம்.

வாழ்க தமிழகம்.
மூன்றை லட்சம் மக்கள் ஒரே குரலில் ஆர்ப்பரித்தனர். "வாழ்க தமிழகம்".

ஆர்ப்பரித்து அடங்குமுன் ஓர் தள்ளாத வயது பெரியவர். மயங்கி விழுந்தார். அங்கிருந்த ஒருவர் அடையாளம் கண்டு சொன்னார். அவர் தாமரைக்கண்ணன் என்று. அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இனி நான் செத்துவிட ஆயத்தமாகிவிட்டேன்...வாழ்க தமிழகம் என்றார்.. புலிக்கொடியை கீழே விட மறுத்தார்.... அரற்றினார். படுக்கையை விட்டு எழுந்து நின்று சத்தமிட்டார். ஒவென்று அழுதார்... கண்ணீர் மழ்க சத்தமிட்டு சிரித்தார். நான் வாழ்ந்தது போதும் கருப்பா... என்ன கூட்டிட்டுபோடா என்று கட்டளையிட்டார். இந்த நிலவரம் நன்றாக அறிந்த ஒரு வாலிபபென் அதை படமாக்கினாள். என்னை பலியிட்டு உங்கள் வாழ்வை தொடங்குங்கள் என்றார். சொல்லிக்கொண்டே.. சரேலென்று கத்தியை எடுத்து தன இடது கையின் மணிக்கட்டில் கீறி ரத்தம் வரவழைத்து வலது பெருவிரலில் தொட்டு பக்கத்தில் ஒரு சிறுவன் வெற்றிமாறனின் படத்தை வைத்திருந்தான், அதை பிடுங்கி படத்திற்கு வெற்றி திலகமிட்டார். இவை அனைத்தும் சொடுக்குபோடும் நேரத்தில் முடித்துவிட்டு மீண்டும் மயங்கினார். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது..ஆனால் அவர் முகம் மல்லிகையாய் மலர்ந்திருந்தது. மாறனை பார்க்காமல் உயிர் போகாது போலும்... வந்தார் மாறன். பெரியவரின் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டார். மிச்சமிருந்த குருதியில் மாறனுக்கு வெற்றிதிலகமிட்டார். போதுண்டா... மாறா... நா போறேன்.. நீ பாத்துக்கப்பா... பத்துகோடிப்பேர் டா... இன்னும் நெறைய தலைமுறைக வாழனுமைய்யா...பயபுள்ளைக... சினிமா பார்க்குற பய மக்க...வேற ஏதாவது செஞ்சு தொலக்குறதுக்குள்ள... ... வார்த்தை மங்கியது... தழுதழுத்தது..விம்மி புடைத்தார்.... மூச்சிழுத்தார்...புலிக்கொடியை மட்டும் விடவே இல்லை. உயிர் பிரிந்தது. மாறனின் கண்கள் குளமாகின. அழுதுவிடவா.. அடக்கிக்கொள்ளவா. முதன்முதலில் அழுதார்

நூற்றைம்பது ஆண்டுக்குமுன், முப்பது வயது முத்துகுமார் இறந்தபோது செய்யாத ஒரு மாற்றத்தையா இந்த வயதான சாவு செய்துவிடும். மாறன் ஏதும் அரசுபூர்வ மரணமென்று அறிவிக்கவில்லை. ஆனால், தமிழகம் வெகுண்டெழுந்தது மாபெரும் வரலாறு. இந்த மரணத்திற்கா இவ்வளவு ஓலம், இவ்வளவு  ஒப்பாரி. இது ஒப்பாரி இல்லை, ஓலம் இல்லை. இது ஒரு அறைக்கூவல், தமிழன் துயிழெலும் கொக்கரக்கோ. தூங்கிய தமிழர்கள் தெருவுக்கு வந்தனர். அனைவர் கையிலும் புலிக்கொடி, மாறனின் படம். தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல.... அடிக்கடி கூறும் மாறன் பார்த்த முதல் குருதி. மக்கள் சபையில் அந்தப்பெண் எடுத்த ஒளிப்படம் மீண்டும் மீண்டும் காண்பிக்கப்பட்டது. தாமரைக்கண்ணன் எடுத்த கத்தியும், குருதியும் மக்கள் மனதில் பேரெழுச்சியை உண்டுபண்ணியது. பெருமதிப்பை பெற்றுத்தந்தது. ஆசிரியர் தாமரைக்கண்ணன் மரணம் அறிவிக்கப்படாத அரச மரணமாக அங்கீகரிக்கப்பட்டது. அவர் பூதஉடல் மக்கள் இறுதிமரியாதை செலுத்த வைக்கப்பட்டது. மக்கள் வெள்ளமாக வந்து மரியாதை செலுத்தினர். இந்தியா தன் விளையாட்டை ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது. அவர்களுக்கு கிடைத்த கோடாரிகாம்பன் "உதயகுமார்".

தொடர்வோம்......

Wednesday, March 9, 2011

அடையாளம் வாரம் - 5‏

இன்றைய இளம்பெண்களில், காதலிக்கபடாதவர்கள் மட்டுமே தாவணி கட்டாமல் இருந்திருப்பார்கள் என்பது காதல் மரபு. இதில் வெண்ணிலா ஒன்றும் விதிவிலக்கல்ல. இன்று இந்த நிலவுக்கு பிறந்தநாள். ஆம் இந்த மலர் பிறந்து இன்றுடன் பதினேழு ஆண்டுகள் முடிந்துவிட்டன., இனி எத்தனை பையன்கள் தேர்வில் கோட்டை விடபோகிறார்களோ! தாவணியும், நெற்றிக்குருக்கத்தில் வைத்திருந்த வைத்திருந்த பச்சைநிற குட்டி பொட்டும் அழகாய் இருந்தது. பச்சை பொட்டு, தாவணிக்கு நன்றி சொன்னது. இல்லாவிட்டால் சிவப்போ, மஞ்சள் பொட்டோ அவள் இட்டிருந்த்திறுப்பாள். எல்லோருக்கும் இனிப்பு வழங்கினாள், வெற்றியும் அங்குதானிருந்தான். அதுவரை சிரித்து சிரித்து வாழ்த்துக்களை பெற்றுகொண்டவள், இவனை கண்டதும் இனிப்பை கொடுத்துவிட்டு சிறிது மௌனித்திருந்தாள்.. சில வினாடிகள் காத்திருந்தாள், அவன் சொல்லப்போகும் வாழ்த்தின் ஒவ்வொரு எழுத்தின் மாத்திரைகளையும் அப்படியே மனதுக்குள் பிடித்துக்கொள்வதற்காக. காதல் வந்துவிட்டால் எழுத்தும், மாத்திரைகளும் அதன் உச்சரிப்புகளும் எத்தனை சிறப்பு பங்கு வகிக்கின்றன. அவன் அவள் பெயரை சொல்லும் அழகே அழகுதான்.... வெண்ணிலா... என்பதில் தவறியும் வல்லின உச்சரிப்பு வந்துவிடக்கூடாது என்று நாக்கை லாவகமாக்கி காற்றுக்கே வலிக்காமல் மென்மையாக சொல்பவன். இருவரும் கண்களால் சந்தித்துகொண்டது இந்த மணித்துளியில்தான். ""நீ ரெம்ப நாளைக்கு இதேமாதிரி அழகாவே இருக்கணும், வாழ்த்துக்கள்"" இப்படியும் வாழ்த்து சொல்வார்களா? நன்றி, நீங்க இது மாறி எத்தன வருஷம் சொல்வீங்க? ளுக்கு வேலை இல்லாமல் கண்களில் சிறிதே சிரித்து நகர்ந்தாள். வெற்றிக்கு சென்றவுடன் முதன்முறையாக கண்ணாடி பார்த்தான், உற்று நோக்கினான்... ச..ச்சே.. கொஞ்சம் நல்லா சட்டையை தேய்த்து போட்டிருக்கலாமோ... உதட்டுக்கு கீழே ஒரே ஒரு மீசைமுடி நீண்டுகொண்டிருக்கிறதே... கவனிச்சிருக்கலாம்..... நாடிக்கு கீழே இடது பக்கம் கொஞ்சம் சரியாக மழித்திருக்கலாம்...சென்றவன்... திரும்பி தன் பின்புறம் நோக்கினான்... இடது தோள்பட்டையின் கீழ்... அவள் கொடுத்த இனிப்புக்கலவையின் கரை பட்டிருந்தது. மனதின் வேறுக்குள் எதற்கோ மகிழ்ச்சி பானம் சுருக்கென்றது கிள்ளியது. அவள் கேள்வி புரியவில்லையா இல்லை நம்பமுடியவில்லையா? பசித்தது... சாப்பிட்டான்.. பசித்தது, தூக்கம் வந்தது படுத்தான்... தூக்கம் வரவில்லை..(குறிப்பு: இங்கே எழுத்துப்பிழையோ அல்லது பொருள்பிழையோ இல்லை... சரியாகத்தான் எழுதுகிறேன்...பசித்தது... சாப்பிட்டான்.. பசித்தது, தூக்கம் வந்தது படுத்தான்... தூக்கம் வரவில்லை..) புதிய உணர்வாக பட்டது.... நான் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்..கல்லூரிக்கு போறதுக்கு முன்னால அவள பாத்திரனும்... என்ன சட்ட போடலாம்... என்ன பேசலாம்... வெண்ணிலா.. ரெம்ப பிடிச்சிருக்கு..... இல்ல இல்ல உனக்கு பிடிச்சிருக்கா.. ம்..ம் இல்ல நேத்து என்ன சொன்ன சரியா புரியல மறுபடியும் கேட்கணும் போல இருந்துச்சு... இல்லேனா கவிதையா சொல்வோமா... ""நான் ஏறும் ஒவ்வாரு படிக்கட்டிலும் நீ தோளுக்கருகே இருக்கவேண்டும்... """" கவிதை எழுதவேண்டுமென தோன்றியது. இயந்திரவிலும், தாமரைக்கண்ணனின் வரலாறும் கசந்து தமிழும், இலக்கியமும் படிக்கவேண்டும்போல தோணியது வெற்றிமாறனுக்கு.

தனிம மூலக்கூறுகள் பூக்களால் பின்னப்பட்டதுபோல்...
கணினி கண் சிமிட்டியதுபோல்...
வரைபடங்கள் வாழ்த்துமடலானதுபோல்...
பொறியியல் வாய்பாடுகள்
புள்ளியில்லா கோலமிட்டதுபோல்....
பாதி பழுதான மகிழுந்துபோல்....
என் மனம் மாற்றமடைந்துவிட்டது!!

எனக்கு தெரிந்ததெல்லாம் வேதிவினை மாற்றங்கள் மட்டுமே
தெரியாத வினையூக்கி ஒன்று
அமிலத்தில் புகுந்து வினைமாற்றம்
செய்துவிட்டதைபோன்ற ஒரு குழப்பம்.

இதயக்குழியில்
மின்காந்த அலைகள் கோர்த்துக்கொண்ட உணர்வு

புவியின் மொத்த ஈர்ப்புவிசையும்
உன் கண் நோக்கி இழுத்த சக்தி

இதுதான் காதலின் விளைவுகளா?- இல்லை
காதலின் இயற்ப்பன்புகளா?

என்ன இருந்தாலும்
மனதின் மையத்தில் மகிழ்ச்சி


உண்மையில் எனக்கு இது புது உணர்வு, முற்றிலும் நான் பார்க்காதது. எனக்கு புரியவில்லை நன்மைக்கா... என்று. எப்படி இருந்தாலும் உன்னுடன் பேசணும் போல இருக்கு... உன்ன பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு. உன் கூடவே வாழ்க்கையின் எச்சம் வரை இருக்கணும் போல இருக்கு. என்னை உனக்கு பிடித்திருந்தால்...நாளைவரும்போது கருநீல பச்சை ஒன்று அடிக்கடி உடுத்துவாயே.. அதை உடுத்திக்கொண்டு வா. இல்லையென்றால்...உன் விருப்பங்களில் என் பார்வைகளை முடியாவிட்டாலும் தவிர்த்துக்கொள்கிறேன்.

அன்புடன்,

வெற்றிமாறன்.

நான்குமுறை கிழித்தெறிந்து ஐந்தாவது முறை வடிவமைத்த கடிதம். பில் கேட்ஸ் மகள் கூட தன் காதலை வெளிப்படுத்த மைக்ரோசாப்டின் இத்தனை
செயற்க
லை பயன்படுத்தியிருக்க மாட்டாள். சேவல் கூவிவிட்டது. வெற்றி இப்போதுதான் தூங்கினான்.

தஞ்சை மாநகரம்:

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - இது ஏன் இப்பொழுது என் மனதில் ஓட வேண்டும். வெற்றிமாறன் சிறிதே சிரமப்பட்டார்... நான் எடுத்த முடியால் என் மக்களுக்கு ஏதும் துயரம் வந்துவிடுமோ என்று விசனப்பட்டார். தான் கும்பிடும் காவல் தெய்வத்தை மணிக்கு நூறுமுறை கூப்பிட்டார்.... காவலுக்கு வருவானா கருப்பசாமி.

கொச்சியிலிருந்து புறப்பட்டால், நூறு கடல்மைல் வேகத்தில் வந்தாலும் இந்தியாவின் INS வகை விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் தமிழக கரையை இன்னும் ஆறு மணி நேரத்தில் தொட்டுவிடும். அதன்பின் ஒவ்வொரு வினாடியும் மரணத்தின் விளிம்பை விட்டு விட்டு தொடும் நிகழ்வுகள்தான். தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல.....என்ற வரிகளை அடிக்கடி ஞாபகபடுத்திகொண்டார்.


கக்கன், திலீபன் இருவரையும் கூப்பிட்டு உடனடியாக தனித்தமிழக வெற்றிவிழாவை கொண்டாட மக்களை அவரவர் ஊர்களிலும், நகரங்களிலும் கூடுமாறு அழைப்பு விட்டார். அதிகாலை எட்டுமணிக்கே அனைவரையும் திரட்டுமாறு பணித்தார்.

அதிகாலை ஊடகங்களிடையே பேசினார்...

வணக்கம். கடந்த தினங்களில் ஊடகங்களின் வாய் பூட்டபட்டதற்க்கு மன்னிக்கவும். என் முடிவுகளை நீண்ட எதிர்ப்புகள் இல்லாமல் தாங்கிகொண்டதற்கு நன்றிகள். உங்களில் சிலர் இந்திய ஆதரவு கூட்டங்கள் இருக்கும் என தெரியும். இருந்தாலும் உங்கள் உணர்வுகளை தரமுடன் எழுத வாழ்த்துக்கள். எனக்கு என் மீதும் என் மக்கள் மீதும் நன்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் ""உரிமைகள் எப்பொழுதும் பொறுப்புகளுடன் கொடுக்கப்படும்"" நீங்கள் உங்கள் பொறுப்புகளையும், நீதியின் எல்லையை தாண்டும்போது வெற்றிமாறன் தன் அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும் என்ற சிறிய எச்சரிக்கையுடன் ஊடகங்களை திறந்துவிட்டார்.


அனைவரும் எதிர்பார்த்தது போல் இந்திய போர்ப்படைகள் INS ரக போர்விமானங்களின் மூலம் கிழக்குகரை வழியாக தமிழகத்திற்குள் புகுந்தார்கள். மாறனின் படைகள் எந்தவித எதிர்ப்புமின்றி வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது. எளிதாக மைல் மைலாக நகர்ந்தார்கள். காலை எட்டுமணி அளவில், இந்திய போர்ப்படைகள் முன் வெற்றி கொண்டாட்டங்கள் நடந்தன. மக்கள் திரளாக வந்தனர். ஒவ்வொருவரின் கையிலும் மாறனின் படமும், புலிக்கொடியும் ஏந்தியிருந்தார்கள். ஆங்காங்கே வைக்கபட்டிருந்த தொலைதிரையில் மாறன் உரையாற்றிகொண்டிருந்தார். தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல.....என்ற வரிகளை அடிக்கடி தொலைத்திரையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் வடமொழியில் ஓடவிட்டிருந்தார்கள். இந்நிகழ்வு உலகம் முழுதும் உள்ள தொலைகாட்சியில் அவசர செய்தியாக அறிவிக்கப்பட்டது.


இந்தியப்படைகள் யாரை சுடவேண்டும் என்ற உத்தரவிற்காக காத்துக்கொண்டிருந்தது. ஆனால் தில்லியோ, அனைத்து தமிழகமும் தங்கள் கட்டுபாட்டில் வந்துவிட்டதாக செய்தி சொன்னது. கூடிய விரைவில், ஆளுநரும், உயர் செயலாளரும் டில்லியிலிருந்து அனுப்பபடுவார்கள் என்று அறிவித்ததது. அமெரிக்காவும், மேற்க்கத்திய அடிவருடிகளும் ஆமாம் நல்லது என்று தலை ஆட்டியது. அடுத்த அரைமணி நேரத்தில் ஊருக்கு ஒரு புலிக்கொடி உயரப்பறந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் ஒவ்வவொரு ஊரிலும், நகரத்திலும், பெருநகரத்திலும், மாவட்ட தலைநகரிலும் ஒருவர் மாறனின் சார்பாக   உயர் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். அனைத்து நிர்வாகங்களும் அவரின் நிழற்குடையின் கீழ் வர பணிக்கப்பட்டது.


பகல் நேர இடைவேளையின் போது மாறன் பேசினார். இன்னும் சில நாட்களில் அனைத்து நிர்வாக அலுவலங்களிலும் ஊழியர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதே அலுவலகங்கள், அதே அதிகாரிகள், அதே ஊழியர்கள். கட்டுப்பாடு மட்டும் வேறுவிதமாக இருக்கும். இந்திய படைகளுக்கோ, அலுவலர்களுக்கோ ஆதரவாக அல்லது இணக்கமாக செயல்படும் மக்கள் இனம் காணப்பட்டு தற்காலிகமாக தடுத்துவைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்திய படைகள் யாரையும் துன்புறுத்தும் நோக்கில், அல்லது வக்கிரமாக, கொடூரமாக, கடினமாக நடந்து கொள்ளும் வேளையில் பொதுமக்கள் உடனுக்குடன் 999 ஐ தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.


இந்திய செய்தி ஒன்று அவசர அவசரமாக வெளியிடப்பட்டது. வெற்றிமாறன் உடனடியாக கட்டுப்பாட்டை "விக்ரம் சிங்" என்பவரிடம் ஒப்படைக்குமாறும், தவறினால் அவரின் கீழ் இருக்கும் இந்திய படைகள் வேறு வழியின்றி ஆயுதங்களை பயன்படுத்தி அலுவலங்களையும், காவல்நிலையங்களையும் கட்டுபடுத்தநேரிடும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக மக்கள் இன்னும் இந்தியர்களே.. எனவே இந்திய கட்டமைப்பு சட்டங்களை மதிக்கவேண்டிய கடமை உள்ளது என்றும், மீறுபவர்கள் சிறையிலிடப்படுவார்கள் என்றும், கடுமையான தண்டனை சட்டம் கையாளாப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

உண்மையில் மக்கள் குழம்பினர். யாரை நம்புவது. யாருக்கு கட்டுப்படுவது என்று. நேரம் மாலை ஆறுமணி முப்பது நிமிடங்கள்...........

தொடர்வோம்......