Sunday, July 3, 2011

அடையாளம் வாரம் - 15

தஞ்சை ஆட்சி நகரம்:

வெற்றிமாறனின் தலைமையில் தமிழகத் தனி அரசு, ஆட்சி ஏற்றுக்கொண்டது. தாரை, தப்பட்டைகள் தெருவெங்கும் முழங்கின, வானவேடிக்கைகள், படவெட்டுக்கள் என தமிழகமே திருவிழாக் கொண்டாட்டத்தில் திழைத்தது. ஒவ்வொருவரும் தத்தம் வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டிருந்தனர். இந்த நாளுக்காக எத்தனை ஆண்டுகள், எத்தனை தவம், போராட்டம். எல்லாவற்றிக்கும் சேர்ந்து ஒரேயடியாக விடிந்தது. உலகமெல்லாம் வாழும் தமிழர்கள், ஈழ தமிழர்கள் என கொண்டாட்டம் நீண்டது. ஈழத்தமிழர்கள் தனக்கும் இவ்விடியல் கிட்டாதா என ஏக்கத்தில் காத்திருந்தனர். மாறன் தங்களுக்கு என்ன முடிவை சொல்லப்போகிறார் என எதிர்நோக்கியிருந்தனர். இனியாவது விடியுமா? தங்களுக்கு ஒரு பாசக்கரம் நீளுமா?

இந்தியா என்ற கூரையில் தமிழகம் ஒரு தன்னாட்சி பெற்ற நாடாக இருக்குமா? ""விருப்பமில்லை"" என்று ஒத்தைவரியில் பதில் சொல்லியது, தமிழ்க்குடியரசு. தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு இந்தியாவுடன் பேச ஏற்பாடாகி டில்லி விரைந்தது. இந்தியாவுடன் இருந்த தமிழத்தின் எல்லை அப்படியே, புதிய தமிழ்க்குடியரசின் எல்லையாகத் தொடரும், சொத்துக்கள், இயற்க்கைவளங்கள், இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் எவை எவை தமிழ்க்குடியரசில் அமைந்துள்ளதோ அவை அப்படியே தற்காலிகமாக தமிழத்தின் கட்டுபாட்டில் வரும், அது பற்றி பேச தனித்தனி ஆனைக்குழுக்கள் அமைக்கப்படும்.

தமிழ்க்குடியரசுக்கும் இலங்கைக்குமான கடல் எல்லைகள் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும், கட்சத்தீவின் உரிமையை யாருக்கு கொடுக்கவேண்டும் என்பதை தமிழ்க்குடியரசு மட்டுமே முடிவு செய்யும் எனவும், அது பற்றி புவியியல், அறிவியியல் மற்றும் வரலாற்று பூர்வமான, திடகாத்திரமான பேச்சுக்கு இலங்கையை அழைத்தது. அப்பொழுது, இலங்கை தமிழ் ஆதரவற்றவர்கள் பற்றியும் தமிழ்க்குடியரசு பேசும்.

முறையான அரசமைப்பிற்க்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், மாறனின் தேர்தல் அறிக்கையின் செயல்திட்ட வடிவமே புதிய தமிழ்க்குடியரசின் அடிப்படை வழிகாட்டியாக விளங்கும். அதன் சிறப்பு அங்கமாக, யார் தமிழர்கள் என்ற சமூக அமைப்பை மாறன் தெளிவுபடுத்தினார். அதன்படி, முன்னால் தமிழகம் பட்டியல் செய்திருந்த குல அட்டவணை உடணடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது, புதிய தமிழரசின் கூற்றுப்படி, தமிழர்கள் என்பவர்கள் மண்ணின் மைந்தர்கள் மட்டுமே, அதற்க்கு சான்றாக குலம் (ஜாதி) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், அதாவது, அண்டை மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த மக்கள் இனம்பிரிக்கப்படுவர். தமிழர்கள் தனியாக இனம்கானப்படுவர், குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் என்னும் போர்வையில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் வேற்றார் அட்டவனையிலிருந்து நீக்கப்படுவர், எ.காட்டாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் பெரும்பாலும், ஆதி திராவிடர் என்ற போர்வையில், வேற்றாரே இருக்கின்றனர். கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை உங்கள் பார்வைக்கு, இங்கே சிவப்பில் எழுதியுள்ள அனைவருமே தமிழர்கள் அல்லாதவர்கள், இதுவரை மள்ளர், பறையர், பரவர் போன்றோர் அனுபவிக்கவேண்டிய அனைத்து நலன்களும் வேற்றானால் கூறுபோடபட்டன என்பதே உன்மை, இதனால் நம் மண்ணின் மைந்தர்கள் அப்படியே அமுக்கப்பட்டனர். இது வெறும் சான்று மட்டுமே, இதைபோன்ற போர்வைமுகங்கள் கிழித்தெறியப்படும்.


1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
12. சங்கிலியர், சக்கிலியன்
13. சாலாவாடி
14. சாமார், மூச்சி
15. சண்டாளா
16. செருமான்
17. தேவேந்திர குலத்தார்
18. டோம், தொம்பரா, பைதி, பானே
19. தோம்பன்
20. கொடகலி
21. கொடடா
22. கோசாங்கி
23. ஹொலையா
24. ஜக்கலி
25. ஜம்புவுலு
26. கடையன்
27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
28. கல்லாடி
29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
30. கரிம்பாலன்
31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
32. கோலியன்
33. கூசா
34. கூத்தன், கூடன்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
35. குடும்பன்
36. குறவன், சித்தனார்
37. மடாரி
38. மாதிகா
39. மைலா
40. மாலா
41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
42. மாவிலன்
43. மோகர்
44. முண்டலா
45. நலகேயா
46. நாயாதி
47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
48. பகடை
49. பள்ளன்
50. பள்ளுவன்
51. பம்பாடா
52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
53. பஞ்சமா
54. பன்னாடி
55. பன்னியாண்டி
56. பரையன், பறயன், சாம்பவார்
57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
59. புலையன்
60. புதிரை வண்ணான்
61. ராணேயர்
62. சாமாகாரா
63. சாம்பான்
64. சபரி
65. செம்மான்
66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
67. தோட்டி
68. திருவள்ளுவர்
69. வல்லோன்
70. வள்ளுவன்
71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
72. வாத்திரியன்
73. வேலன்
74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
75. வெட்டியான்
76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

நாங்கள் எப்பொழுதெல்லாம் குலத்தை பற்றி பேசுகிறோமோ , குலப்பிரிவினையை ஏற்ப்படுத்துகிறோம் என்றும் இது தமிழ் தாலிபான் அரசு என்றும் கூச்சலிட ஆரம்பித்துவிடுகின்றனர். இது உன்மைக்கு புறம்பான கூப்பாடு, எங்கே தங்கள் முகத்திரை கிளிந்துவிடுமோ என்ற பயம். புதிய தமிழரசில் யாரும் பயப்படத் தேவை இல்லை என்று உறுதி தருகிறோம், அதே நேரத்தில் ஏமாற்றியும், தங்கள் அடையாளங்களை திரிபு செய்தும் பிழைத்துக்கொண்டிருந்தவர்களுக்
கு இது ஒரு முற்றுப்புள்ளி ஆகும். தமிழ்க்குடியரசில் எல்லோரும் வாழலாம், ஆனால், தமிழன் மட்டுமே ஆள்வான், இது எங்கள் பிறப்புரிமை, எக்காரணத்தைக்கொண்டும் ஆளும் உரிமையை மட்டும் யாருக்கும் விட்டுகொடுக்க மாட்டோம், முன்னூறு ஆண்டுகலுக்கு மேலாக விட்டுகொடுத்ததன் பயனை/விளைவை நாங்கள் நன்றாகவே அனுபவித்துவிட்டோம், போதும்.


தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும் - அனைத்து விவசாய நிலங்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும், அதன் விலையை இருதரப்பு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம். "யார் தமிழர்கள்" என்ற கேள்வி எழும் நிலையில் அவரவர் குலம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இடத்தின் தாய்ப்பத்திரம் முக்கிய ஆதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும் - தமிழகத்தின் அடிப்படை ஆதார வளங்கள் (நீர், நிலக்கரி, சுன்னாம்புத்தாது, பெட்ரொலியம் போன்ற) சார்ந்த தொழில்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும். இதில் வங்கிகளும் அடங்கும்.

அனைத்து பொதுத்துறை/இந்திய அரசு நிறுவனங்கள் தமிழக அரசிற்கு சொந்தமாகும். இதில் அணு/நீர்/அதிவெப்ப மின் நிலையங்களும் அடங்கும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும் - தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு கீழ்: அனைத்து நிறுவங்களிலும் தமிழக அரசு குறைந்தது ஐம்பது பங்குகளை வைத்திருக்கு விரும்புகிறது.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும் - தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு மேல்: அனைத்து நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதற்கு தமிழக அரசு விரும்புகிறது. குறைந்தது முப்பது பங்குகளை அரசு கொள்வளவு செய்ய விரும்புகிறது.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும் - அரை ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் மணை நிலங்கள், தரிசு நிலங்கள் அனைத்தையும் தமிழக அரசு கையகப்படுத்தும்.

இவைபற்றி பேசி முடிவுக்கு வர தனி ஆனையம் ஒன்று அமைக்கப்படும். இது தமிழர் வள மீட்பு ஆனையம் என்ற பெயரில் குடியரசுத்தலைவரின் நேரடி கட்டுபாட்டில் இயங்கும்.

புலம்பெயர் தமிழர்கள் ஆனையம்:
தமிழர்கள் என்று ஆதாரம் வைத்திருக்கும் அனைவருக்கும் தமிழ் குடியரசில் குடியுரிமை வழங்கப்படும், அவர்கள் வேறு நாட்டினர் என்கிற பட்சதில் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும், தங்கள் மனுவை அனுப்பும்போது, தங்கள் கடவுகோப்பு, மற்றும் குல சான்றிதல் இனைத்து குடியுரிமை இயக்ககதிற்க்கு அனுப்பவேண்டும், மேலும் இயக்ககத்திற்க்கு சொந்தமான இனையத்தில் நேரடியாக மின்மனுவை அனுப்பலாம். இலங்கை மற்றும் தமிழீழ மக்களுக்கும் இது பொருந்தும்.

வெளிநாட்டுக் கொள்கை:
எங்களுக்கு எந்த ஒரு நாடும் பகை நாடு அல்ல, இந்தியா உட்பட. அரசின் வழிகாட்டுதலுக்கினங்க ஒருங்கினைந்து செயல்படும் எந்த ஒரு நாடும்/எந்த ஒரு தனி மனிதனும் இங்கே வாணிகம்/தொழில் செய்யலாம், கொள்கை இன்னும் பெயரளவிலே இருப்பதாலும், நாடுகள் இப்பொழுதுதான் அலுவலக ரீதியாக பேசத்தொடங்கியிருப்பதாலும் இதுபற்றி தெளிவான கொள்கை வகுப்பு செய்யப்படும்போது முறைப்படி அனைத்து நாடுகளுக்கும் வரைவு அனுப்பிவைக்கப்படும்.

மத வழிப்பட்டு கொள்கை:
தமிழ் குடியரசு எந்த மதத்தையும் சாராத அரசு. அனைத்து மதங்களையும் மதித்து அரசு செயல்படும்.

கல்வி முறைப்படுத்தும் ஆனையம்:
இந்திய வழி கல்வி (மெக்காலே கல்வித்திட்டம்) முடிவுக்கு கொண்டுவரப்படும். வளர்ந்த நாடுகளில் இருப்பதைப்போல் தாய்மொழிக்கல்வி செயல்படுத்தப்படும், தமிழ் வரலாறு மற்றும் தமிழன் உயர்ந்து நின்ற தருனங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டு மன உறுதியுடன் குழந்தைகள் வளர்க்கப்படுவார்கள். முறையான, சிறப்பான ஆங்கிலம் கற்றுத்தரப்படும்.

No comments: