Wednesday, October 28, 2009

மன்னுமோகன் சிங்கு: 23 ம் புலிகேசி புலிகேசி....

மன்னுமோகன் சிங்கு: 23 ம் புலிகேசி புலிகேசி
அந்தோணி: மங்குனி அமைச்சர்
வல்லவராயன்: Wen Jiabao Chineesh Premier (இங்கே சீனன் என எடுத்துக்கொள்வோம்)
இடம்: அருணாச்சலபிரதேசம்
காவலாளி: ப. சிதம்பரம்

ப. சி: அரசே.. அரசே.. சீனன் வந்துகொண்டிருக்கிறான்..

மண்ணு: ச்.... இப்போ ஒன்னும் பிசினஸ் இல்லைன்னு சொல்லப்பா.
கடன்காரன். என்ன அவசரம். அவங்க ஊர் காரெல்லாம் கொஞ்சநாள் கழிச்சு உள்ளூருக்குள்ள விடுரோம்முனு சொல்லு. அப்பறம் டாட்டா சண்டைக்கு வருவான்.

ப.சி: அரசே... (வியப்புடன்....)

மண்ணு: என்ன...........(கோபத்துடன்)

ப.சி.: சீனன் படையெடுத்து வந்துள்ளான். வியாபாரத்திற்கு அல்ல.

மண்ணு: யோவ்.. என்னையா பண்ணீங்க... இந்த பேப்பர்காரங்க வேற சும்மா இல்லாம... அவிங்கள வெருப்பெத்துறது மாதிரியே எழுதுறாங்க...யோவ் மங்குனி... இப்ப என்னையா செய்யுறது....

அந்தோனி: அப்புறம் என்ன அரசே... சும்மா இருக்கணும். எதோ பாகிஸ்தான்காரன் நீங்க மெரட்டுறது, உருட்டுரதுக்கெல்லாம் பயந்துகிட்டிருந்தான். செவப்புகொடிக்காரன் அப்படியா.. சும்மா இல்லாம சோனியா பொம்பள சொல்றத கேட்டுகிட்டு புலிகளை கொன்னுபூட்டிங்க. ராஜபட்சே சும்மாவே ஆடுவான். இப்ப புலிவேற இல்லை. அங்க ஒக்காந்துக்கிட்டுதான் நம்பல ஒதைக்கப்போறான்.

மண்ணு: யோவ் நானே பயந்துகிட்டு இருக்கேன்... நீவேற புலி கிலின்னுக்கிட்டு.. இப்ப என்னையா பண்ணுறது

அந்தோனி: ம்க்கும்... அரசே ஒரு யோசனை

மண்ணு: சொல்லுயா....

அந்தோனி: பேசாமே யாருக்கும் தெரியாமல் பீஜிங் போய் அந்தாளு காலுல விழுந்தரலாம்

மண்ணு: அதுவும் முடியாதுய்யா... பாகிஸ்தான்காரன் அங்க
போய் குத்தவச்சுக்கிட்டு இருக்கான்யா

அந்தோனி: குத்தவச்சுக்கிட்டு இல்லை அரசே.. பத்தவச்சுக்கிட்டுனு சொல்லுங்க..

மண்ணு: இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை. நல்லா எதுகை மோனையோடு பேசு.

அந்தோனி: அரசே.... பேசாம அருனச்சலபிரதேசத்தை அவன்னுகே குடுத்தரலாம். நமக்கென்ன இது புதுசா.. கச்சதீவை குடுத்துபுட்டு.. இலங்கை.. அரசியல்.. ராஜதந்திரமுன்னு கதவிடலையா..

மண்ணு: யோவ் அது சாம்பார்க்காரன் இடம்யா.. சோத்த தின்னுபுட்டு சொல்றதை கேட்டுக்கிட்டு.. பேசாம ரஜினி சார் படம்பாத்துகிட்டு இருப்பான். இது அப்படியா போறவன் வரவனெல்லாம் கேள்வி கேட்பான்யா... மொத இந்த அத்துவானிக்கு பதில்சொல்லமுடியாது.. பெரிய லார்டு மாதிரி பேசுவான். என்னமோ இந்தியான்னு ஒரே நாடா இருந்த மாதிரி.

அந்தோனி: அரசே.. ஒன்னு செய்வோம். புலிக்கு நாலு துப்பாக்கிய குடுத்து சண்ட போடசொல்வோம். ராஜபக்சே பீஜிங் போவான், அந்த கேப்ப்ல கடாவெட்டிரலாம்.

மண்ணு: என்னையா பேசுற. பிரபாவே இல்லையாம். யாருகிட்டபோய் துப்பாக்கி குடுப்ப.

அந்தோனி: இல்லை அரசே. இல்லை..... பிரபாவெல்லாம் இந்த மொட்ட சிங்களபசங்க போட்டுதள்ளமுடியாது. அந்தாளு உயிரோட இருக்காரு...... (ரகசியமாக....)

மண்ணு: யோவ். நீதான கொழும்பு போய் மரணசான்றிதல் வாங்கிவந்தாய். இப்ப என்னையா புழுவுற.

அந்தோனி: நீங்க நம்பமாட்டிங்க. எதுக்கும் அந்தப்பெரியவர் நெடுமாரன்கிட்ட கேளுங்க.

மண்ணு: சரி. அவருகிட்ட பேசிட்டு சொல்லு.

அந்தோனி: அரசே... (தலையை சொறிந்துகொண்டே) நான் பேசினேன்.. ஆனா நம்பமாட்டேன்கிறார். என்ன அரசே செய்யலாம்.....

மண்ணு: சரி விடு. நம்ப தளபதிகளை கூப்பிட்டு போருக்கு தயாராகச்சொல்.....

அந்தோனி: அதுல ஒரு சிக்கல்..... நம்ப முப்படைத்தளபதி.. அதான் அந்த அம்மா.... ஏதோ சுற்றுலா போயிருக்காம். கையெழுத்து வாங்கணும்...

மண்ணு: என்னையா நீங்க.... பண்ணுறீங்க. வடிவேலு பெயிண்ட் அடிக்க வேலை எடுத்த கதையால்ல இருக்கு. போர்யா... ஒங்கள கட்டிக்கிட்டு மாரடிச்ச பொழப்பால இருக்கு.

அந்தோனி: சற்றுமுன் கிடைத்த செய்தி. நம்ம போபர்ஸ் பீரங்கிப்படையை காணமாம்.

மண்ணு: யோவ். என்னையா சொல்ற... (அழுகிற குரலில்...) நான் என்னையா பாவம் பண்ணேன்..பீரங்கிப்படை காணாமப்போச்சா... அது என்ன ஆடா மாடா காணாமப்போக... இப்படி தொலச்சுப்போட்டு வந்து நின்னா என்னையா அர்த்தம்.

அந்தோனி: அரசே... சீனர்களின் படை இலங்கை வந்துவிட்டதாம். அங்கிருந்து வடமுனையில் போர்தொடுக்க வியுகம் அமைத்துள்ளார்கலாம்.

மண்ணு: என்னா.... இலங்கையிலிருந்தா....நான் அவிங்களுக்கு என்னென்னல்லாம் செய்தேன்.... துப்பாக்கி குடுத்து, வேட்டு கொடுத்து, விமானம் கொடுத்து..... அய்யயோ.... அம்மா....சாமி.... நான் என்ன பாவம் பண்ணினேனைய்யா..... எல்லாம் செஞ்சு அந்தப்பயலுக்கு எங்க சுடனும், எப்படி சுடனுமுன்னு கூட தெரியாது.... அதையும் சொல்லிக்குடுத்தேன்.... எல்லாம் சொல்லிக்குடுத்த எனக்கே அவன் நல்லா பாடம் சொல்லிகுடுத்துட்டண்டா.............நல்லா பாடம் சொல்லிகுடுத்துட்டண்டா............. இப்ப யாருக்கிட்ட போய் சொல்வேன்.. அமெரிக்காகிட்ட சொன்னா, அவன் கண்ட காகிதத்தில கையெழுத்து கேட்ப்பானே....

எங்கயோ ஒரு தமிழனின் ஒலி மண்ணுக்கு கேட்கிறது: ம்....மாட்டிகிட்டயா.... நல்லா மாட்டிக்கிட்டயா மன்னாரு.....

அன்புடன்,

இரா. த. ஜெயக்குமார்

தீபாவளி கூத்து

ஒருவழியாக இந்த தீபாவளி கூத்து முடிந்துவிட்டது. வாழ்த்துக்கள் அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
தைப்பொங்கல், கபடி, கரகாட்டம், வில்லுப்பாட்டு, வெள்ளைவேட்டி, குலதெய்வம் கோயில் - இவை எல்லாத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. தமிழனின் அடையாளங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதெல்லாவற்றையும் விட, இதெல்லாம் நாகரீகமற்ற செயல் அல்லது கௌவ்ரமல்லாத செயல். கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

தைப்பொங்கல்:
கரும்பு சுமந்து, வாசலில் கோலமிட்டு, தெருவில் பொங்கல் வைத்து, குலதெய்வத்திற்கு படைத்து... அட.. அதெல்லாம் யாருங்க இந்தக்காலத்துல செய்யுறா .. பேசாம பொங்கல் வச்சு தாரேன்.. சாப்பிட்டு டி.வில விஜயகாந்த் படம் போடுவாங்க பாருங்கன்றேன்.. வயசான காலத்துல.... இதுதான் நம் வீட்டில் நடக்குற எதார்த்தம்.

கபடி: ஏதாவது மொரட்டுத்தனமா வெளாண்டு.. கையக்கால ஒடச்சிக்கிடாத. ஏண்டா நம்ப பக்கத்துவீட்டு நாயக்கர் மகனெல்லாம் ஏதோ கிரிக்கெட்டுன்னு வேலையாடுராண்டா, நீ ஏன்டா கபடி கபடின்னு ஆடுற.

கரகாட்டம், வில்லுப்பாட்டு: டேய்.. மாரியம்மன் கோயில் திருழா வருது, ராத்திரில போய் கள்ளகுடிச்சுபுட்டு, கரகாட்டம் பாக்க போயிராதடா. அவிங்க என்னடா பேசிக்கிறாங்க அசிங்க அசிங்கமா, அரைப்பாவடை போட்டுக்கிட்டு ஆடுறதும், கொஞ்சம்கூட நாகரீகமா இல்லைடா. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. (அப்படின்னா பார்ல போய் பீரகுடிச்சிட்டு, கேபரே டான்ஸ் பாக்கலாமான்னு.. இந்த நாகரீகத்தை ஒத்துக்குவீங்களான்னு...மகன் மனசுக்குள்ளயே சொல்வது அந்த அம்மாவுக்கு கேக்குதோ என்னமோ..)

வெள்ளைவேட்டி: ஏங்க.. எங்கசொந்தக்காரங்கல்லாம் வராங்க.. ஒழுங்கா.. பேன்ட், சட்டை போட்டுக்கிட்டு வாங்க. வேட்டிகட்டிகிட்டு வரதா இருந்தா.. நீங்க வரவே வேண்டாம். அவருக்கு ஒடம்பு சரியில்லைனு நான் சாக்கு சொல்லிக்கிறேன்.

குலதெய்வம் கோயில்: இந்தவருசம் எப்படியாது சபரிமலைக்கு போய் நேந்துகிரனும். அப்பா... நம்ப கொலசாமி கோயில்.. அட அங்க போனா என் பங்காளிக கூட மல்லுகட்டிக்கிட்டுதானப்பா வரணும்.. அதேன் அந்தப்பக்கம் காலே வைக்கிறது இல்லை. (குறிப்பு: குலதெய்வ வழிபாடுகள் நம் தமிழர் கடைப்படிக்கும் முக்கிய வழக்கம், ஆனால் நாளைடைவில், அங்கே பூணூலும், கற்பக விநாயகர் சந்நிதியும், அய்யங்கார் (அய்யர் அல்ல, பார்ப்பான் அல்ல, நாமம் போட்ட (வினைத்தொகை)-நாமம் போட்ட, போட்டுகொண்டிருக்கிற, போடப்போகிற-எல்லாக்காலங்களிலும்) பூஜையும் நிறைய புகுந்துவிட்டன. இதில் சாதிப்பாகுபாடே கிடையாது. பார்ப்பனன் என்னை அமுக்கிவிட்டான் எனகுறைப்பட்டுக்கொள்ளும் பள்ளர், பறையர், நாடர், ஆசாரி, தேவர், அகமுடையார் என யாரும் விதிவிலக்கல்ல. எனென்றால் நமக்கு குலதெய்வ வழிபாடு ஒரு கௌவ்ர குறைச்சலாக போய்விட்டது.

சொல்வதெல்லாம் உண்மைதான், இல்லைஎன்று சொல்லவில்லை. நாம் காலங்காலமாக பழகிவிட்டோம் என்பதுதான் கடைசியில் கூறும் பதில்.
ஏற்றுக்கொள்கிறோம். ஏன் மாறக்கூடாது. தமிழ் அடையாளங்களை தேர்ந்தெடுத்து அளிக்கும் ஒரு கூட்டம் செய்கிற வேலைதான். இதை செய்வது பார்ப்பானை விட விசமான கூட்டம்தான் """போர்வைத்தமிழர்கள்"". நாங்களும் தமிழர்கள்தான் எனக்கூறிக்கொள்ளும் வந்தேறிகள். தமிழன் யார் என்பதற்கு தராசு சாதியாக மட்டுமே இருக்கமுடியும். ஆம். சாதித்தமிழன் மட்டுமே தமிழன்.

அன்புடன்,

இரா.த. ஜெயக்குமார்