Friday, May 20, 2011

பறை - 1

கூச்சமில்லாமல் நிறைய தமிழ் வார்த்தைகளை பேசுவோம்

சமீபத்தில் ""ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி"" என்ற தலைப்பில் ஏயக் மொழியை பற்றியும், ஏயக் மொழியை கடைசியாக பேசிய பெண்மணி மேரி ஸ்மித் ஜோன்ஸ் என்றும் நீண்ட கட்டுரை பெரும்பான்மையானோர் படித்திருப்பிபீர்கள். படிக்காதவர்களுக்காக, கீழே இணைத்திருக்கிறேன்.

ஒரு மொழி உயிருடன் வாழ தேவையான சில அம்சங்களில் ஒன்று, குறைந்தது ஒரு லட்சம் பேராவது அம்மொழியை பேசவேண்டும் என்பது. ஆனால், நாம் எப்படி தமிழ் பேசுகிறோம் என்பது பற்றிய விரிவான வாதம் தேவையில்லை. நாம் நாமே நெஞ்சை தொட்டு விவாதித்திக்கொள்ளும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். இதில் சுட்டுவிரல் நீட்டி யாரையும் குறைகூறும் தகுதியை பெற்றுவிட, முயற்சிக்ககூட இல்லை என்பதுதான் கிட்டத்தட்ட உண்மை. ஒரு ஆங்கில வார்த்தை இல்லாமல் நம்மால் பேச இயலுமா என்பது கேலிக்குரிய கேள்விதான். நாம்தான் எழுத்து வடிவில் நல்ல நிலையில் தான் இருக்குறோம் என்று தோள் தட்டிக்கொள்வது, நாம் நம் கண்களை குத்துகொல்வதர்க்கு சமமானதே! எழுத்துவடிவம் ஒரு மொழியை வாழவைக்காது என்பது அதைவிட உண்மை. இன்றைக்கு இறந்தவிட்ட மொழிகளில் ஒன்றாக சமஸ்க்ருதம் இருப்பதற்கு காரணம் அம்மொழியை பேசுவதற்கு யாரும் இல்லை என்பதுதான். மொத்தம் 14,000 பேர்களே சமஸ்க்ருதம் பேசுவோர்கள் இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது, அதுவும் சில மொழி ஆர்வலர்கள் இழுத்துபிடித்து படிக்கவைத்ததன் பொருட்டு, சிலர் பேசுவதாக கணக்கெடுப்பில் இருக்கிறது, உண்மையில் தாய்மொழியாக கொண்டு எவரும் பேசவில்லை என்பதுதான் உண்மை.  அதனால் மொழி எவ்வளவு வளமானதாக இருந்தபோதிலும் பேசுவதற்கு ஆட்கள் இல்லையென்றால், அம்மொழி இறந்துவிட்டதற்க்கு சமமே.

பிற மொழிகளின் பாதிப்பு:
கல்வி, பொருளாதார மேம்பாடு, வாழ்க்கைத்தரம் போன்ற சூழல்களும் மொழியை, அதன் வார்த்தைகளை பாதிக்கும் அம்சங்களில் ஒன்று. ஒரு தொலைபேசி எண்னை பிறருக்கு சொல்லும்போது பொதுவாகவே நாம் ஆங்கிலத்தில் சொல்வது படித்தவர், படியாதவர் என்ற பேதமில்லாமல் பாதித்த ஒன்று. சில சொற்களை தமிழில் சொல்வதை தரக்குறைவாக நினைப்பது மேலும் அந்த வார்த்தைகளை மறையச்செய்கிறது, எ.காட்டாக, ஒன்னுக்கு போய்விட்டுவருகிறேன், வெளியே போய்விட்டுவருகிறேன் என்பது சிறுநீர் கழிப்பதையும், மலம் இருந்துவிட்டுவருவதையும் இலைமறை காயாக கூறுவது இயல்பாக இருந்துவந்தது, ஆனால் இன்றைக்கு அசிங்கமாக பிள்ளைகள் நினைக்கும் அளவுக்கு போய்விட்டது. உச்சா, கக்கா வார்த்தைகள் கடனாக கிடைப்பதால், நாம் நம் சொத்தை இழந்துவருகிறோம்.

பேருந்து, மகிழுந்து, சரக்குந்து போன்ற வார்த்தைகள் இருந்தாலும், எழுத்துவடிவில் புழங்கினாலும், நாம் இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கவே இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று, மீறி நம்மை போன்ற உணவாளர்கள் பேசினால் சுற்றி உள்ளவர்களின் நகைப்புக்கு ஆளாகிறோம். அது நம்மை கொஞ்சம் முகம் சுளிக்கவைக்கிறது என்பதில் ஐயம் இல்லை. இங்கே என் கெட்டிகாரத்தனத்தை காண்பிக்கவேண்டும் என்பதற்காக இல்லாமல் எடுத்துகொண்டால், சில வார்த்தைகளை விளையாட்டாக பயன்படுத்தும்போது அது அப்படியே பழகிவிடுகிறது, அதனால் நகைப்பும், முகம் சுளிப்பும் இல்லாமல் சில வார்த்தைகள் வழக்கமாகிவிடுகிறது, எ.காட்டாக, வேலை இடங்களில் கணினி, பதிவுக்குச்சி, மேலாளர் போன்ற வார்த்தைகள் இன்றைய நண்பர்கள் அழகாக பயன்படுத்துகிறார்கள் என்றால் பெரும்பான்மையானவர்கள் நம்பமாட்டார்கள். ஒருவர் இரண்டு பேர் என ஆரம்பித்து காலப்போக்கில் அதுவே அழகான வழக்கு மொழியாக மாறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே, அதற்க்கான சூழலை நம் போன்ற மொழி, இன ஆர்வலர்களே ஏற்படுத்தவேண்டும். யாரும் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தும்போது ஏளனம் செய்யாமல் இருந்தாலே நாம் பாதிக்கிணறு தாண்டிவிட்டதாக எடுத்துகொள்ளலாம். அதுதான் சூழலை உருவாக்கவேண்டும் என்பதை சுருக்கமாக சொன்னால்.

எனவே, ஏயக் மொழியை போல் நாமும் அழிந்துவிடாமல் இருக்கவேண்டுமென்றால் ஒரே வழி கூச்சமில்லாமல் நிறைய வார்த்தைகளை பேசுவோம்., பேசுவோர்களை உற்சாகப்படுத்துவோம்.

Thursday, May 19, 2011

அடையாளம் வாரம் - 12

நரோரா , புலந்சாகார் மாவட்டம், உத்திரபிரதேசம்:
புது தில்லியிலிருந்து 141.6 கி.மி., கங்கை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சிறு நகரம். மக்களில் 14% ஆறு வயதிற்கும் கீழிருக்கும் குழந்தைகள். பாவம் செய்துவிட்டு கங்கையில் குளித்தால் தீரும் என்று நம்பும் இந்துக்கள் இங்கேயும் வருவது வழக்கம். சங்க்வேத சமஸ்க்ருத பல்கலைகழகம் கங்கை ஆற்றின் மறுபுறம் உள்ளது. இதெல்லாம் விட சிறப்புவாய்ந்த அம்சம் என்னவென்றால், இந்திய அணுமின் கழகத்திற்கு சொந்தமான அணு உலை மின்சாரம் தயாரிப்பிற்காக நிறுவப்பட்டுள்ளது.
220  மெ.வாட் திறன் கொண்ட இரண்டு உலைகள் இங்குள்ளது. அதைவிட சிறப்பு, அணுமின் தயாரிப்பின் கழிவு நீரும், கங்கையில் தான் கலக்கிறது, யார் செய்த பாவத்தை தீர்ப்பதற்கோ!!.. கங்கையில் கரைத்தாலும் தீராத பாவங்கள் அல்லவா தில்லி அரசு செய்தவைகள்....ஒன்றா இரண்டா கழுவிவிட, எத்தனை லட்சம் மனித உயிர்கள்...... கங்கையை திருப்பி பாரளுமன்றதிற்க்குள் தான் விடவேண்டும்....கங்கையே நின்றுவிடும்., பாவத்திற்கு பயந்து.

என்ன காரணத்திற்காக, இங்கே வந்து (அணுமின்) உலை வைத்தார்கள் தெரியவில்லை. வடிவமைக்கப்பட்ட காலத்தைவிட சுமார் 20 ஆண்டுகள் கடந்தும் இந்திய அரசு இன்னும் உலையை மூடவில்லை. மேற்கு நாடுகள் அணுமின் திட்டங்களை விடுத்து இயற்க்கைக்கு உகந்த மின் தயாரிப்பு அமைப்புகளை நிர்மாணிக்கும் நேரத்தில், இங்கே அணுஉலைகள் முளைத்துக்கொண்டு இருக்கின்றன. ஆம்.. செய்த அணுஉலைகளையும் அதன் உதிரி பாகங்களையும் மேற்குலகம் கடலிலா கரைத்துவிடும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் தானே வாங்கவேண்டும், இல்லை வாங்க வைக்கப்படவேண்டும்!!

காற்றும் தூங்கிக்கொண்டு வீசும் அதிகாலை மூன்று மணி. மீனம் மாதம் முதல் நாளில் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும், மக்கள் பயமின்றி வரிசையில் நிற்க  தொடங்கலாம், வெற்றிமாறன் மீண்டு வருவார், மக்களே வாருங்கள் வரிசையாக, வந்து சொல்லுங்கள் தீர்ப்பை, நாளை வாக்கு தினம் போன்ற வாசகங்கள் தாங்கிய பலகைகள், தட்டிகள், அட்டைகள் அங்கங்கே கிடந்தன. இன்னும் ஐந்து மணி நேரமே மிச்சமிருக்கும், அதிகாலை மூன்று மணி..........

பார ஹோதி: 
முன்னால் உத்திரபிரதேசத்தின் சீன எல்லையோர பகுதி. பெரிதும் காதுகளில் தென்படாத ஒரு ஊர். சீன-இந்திய போர்களிலும், சண்டை மூளும் நேரங்களில் மட்டும் இந்திய அரசு கவனிக்கும் பகுதி. இமயமலையின் கணவாய் போன்ற பகுதி. சீனா இப்பகுதியை வு-ஜே (Wu-Je) என்றழைக்கிறது. இந்தியா திபத்தில் போய் உட்கார்ந்துகொண்டு சேட்டை செய்யலாம் என்றெண்ணி, சீனாவிடம் அடிவாங்கியது இந்தப்பகுதியில்தான். மனிதர்கள் வாழ தகுதியற்ற இந்த பனிப்பாலைக்குத்தான் இரண்டு நாடுகளும் முட்டிக்கொண்டன. குளிர் காலங்களில் படைகளை திரும்பப்பெறுவதும், கும்பம், மீனம் மாதங்களில் மீண்டும் அனுப்புவதும் வழக்கம். எல்லையோர மீறல்களும் அப்போதுதான் நடக்கும். மிகவும் சிரமத்திற்கு இடையில் ஏவுகணைகளை இங்கே எடுத்து செல்வதுண்டு. பினாகா, பல்குழல் எறிகணைகள் வழக்கமாக பயன்படுத்தப்படும்.

"தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை, ஆனால் தமிழனுக்கென்று நாடில்லை", "நாதி இல்லை" என்று நொந்துகொண்டோர்களுக்கு இங்கே இருந்து கிளம்புகிறது அம்பு....புலிக்கொடி ஏந்தி.......இன்னும் ஐந்து மணி நேரமே மிச்சமிருக்கும், அதிகாலை மூன்று மணி.....காற்றும் தூங்கும் நேரம்...நாங்கள் தூங்கவில்லையடா...நாங்கள் நிறைய தூங்கி விட்டோமடா...எத்தனை நூற்றாண்டுகள் தூங்கினோம்....தூங்கியவன் மீதே மிதித்தீர்களே..ஞாபகம்  இருக்கிறதா? எத்தனை மனிதர்களை கொன்றீர்கள்....செத்தவனை கூட கொன்றீர்கள், பிணத்தை பிராண்டினீர்கள், கருவை கொன்றீர்கள்.... தாயின்  முலையை அரிந்தீர்கள்...இதோ எங்கள் அம்பு உங்கள் கைகொண்டு....இதோ இன்னும் பதினைந்து நிமிடங்களில் நரோரா, அணுமின் நிலையத்தில் விழும்....அடுத்து வீழ்வது நீங்கள். இனி நாங்கள் விழோம்! அங்கிருந்த இரு தமிழர்கள் பினாகா, பல்குழல் எறிகணை பொத்தானை அழுத்திவிட்டு ஆர்ப்பரித்தார்கள் "வாழ்க தமிழகம், விடுதலை மண்ணில் சந்திப்போம். அடிமையாய் இனி நான் வாரேன்! அடிமையாய் இனி நான் வாழேன்! எறிபடை 50 கிலொ எடையுள்ள வெடிபொருளை சுமந்துகொண்டு, 400 முதல் 600 கி.மி தூரம் பாயவல்லது. பார ஹோதி லிருந்து சாதாரமாக நரோரா வை அடைய சாத்தியமுடையது.

ஒவ்வொரு அணுமின் நிலையமும் இந்திய அரசின் சிறப்பு படையினரால் பாதுகாக்கப்படுகிறது, அதிலும் சில முக்கிய உலைகள் தடுப்பு ஏவுகனை, எறிகணை வசதி பொருத்தப்பட்டிருக்கும்., மேலும் இவை தனிச்சையாக செயல்படும் அசாத்தியமும் பெற்றது. ஆனால், நரோராவில் தனிச்சையாக செயல்படும் பாதுகாப்பு செய்யப்படவில்லை என்பது குறிப்பு. இவைகளை, பாதுகாப்பு படையினர் ரேடார் கருவிகள் மூலம் கண்காணித்து பின் தடுப்பு எறிகணைகளை எரியூட்டுவார்கள். இங்கேதான், இவர்களது சறுக்கல். வழக்கம்போல், ரேடார் பார்ப்பவன் ஒருவன், படையணியை கட்டுப்படுத்துவது ஒருவனாவே இருப்பார்கள். பார்ப்பவன் பார்த்து செய்பவனிடம் செயல்படுத்த சொல்லவேண்டும்.

அதிகாலை 03. 05. காற்றும் தூங்கும் நேரம்... காற்றை கிளப்பிக்கொண்டு சீறிப்பாய்ந்து வந்துகொண்டிருந்தது ஒரு எறிகணை. இன்னும் பத்து நிமிடங்களில் நரோராவை அடையும். ராடார், மின்காந்த அலைகள் வானில் அனுப்பப்பட்டு, பொருட்களின் மீது படுவதால் பெறப்படும் மீளலைகளை பிரதிபளிபதே, அதே சம அளவுள்ள அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகள் ஒருவழிப்பாதையில் அனுப்பப்பட்டு ராடாரின் மீது பட செய்யும்போது, மீளலைகளை குழும்பிவிட செய்வதும் சாத்தியமே, இது மின்னணு படைக்கருவி எனவும் கூறலாம், இம்முறையில், நரோராவில் வெற்றிமாறனின் ஆட்கள் ராடரை இருட்டடிக்க செய்தனர். இரு அனுஉலைக்கும் இடையில் இருக்கும் போதிய இடைவெளியில் விழும்....

அதிகாலை 03.18. இந்திய தலைமை அமைச்சர், குடியரசுத்தலைவர், தலைமை செயலர் உள்ளிட்ட அனைத்து உயர்மட்ட தலைவர்கள் கூடினார்கள், தலைமைசெயாளர் நரோராவிலிருந்து வந்ததாக ஒரு மின்மடலை அனைவரின் பார்வைக்கும் வைத்தார், அதில் அழகிய தமிழ், ஆங்கிலம், இந்தி என் மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது, "மேதகு இந்திய தலைமை அமைச்சர் அவர்கட்கு வணக்கம், இந்திய மக்களுக்கோ, அரசாங்கத்திற்க்கோ சிரமம் கொடுப்பது எங்கள் திட்டம் இல்லை என்பது, எறிகணை வந்து விழுந்தும் வெடிக்காதது கண்டவுடன் உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறோம், எறிகணை ஏவும் எங்களுக்கு அதில் வெடிகுண்டிட வெகுநேரம் ஆகாது என உங்கள் படையணியினர் சொல்லாமல் இருக்கமாட்டார்கள். எங்கள் நோக்கம், அறிவித்தபடி தேர்தல் எங்கள் தனிதமிழகத்தில் நடக்கவேண்டும் என்பதே அன்றி வேறில்லை. எங்கள் தலைவர் வெற்றிமாறனை சிறையிலிருந்து வெளியிடவேண்டும் என நாங்கள் இரஞ்சவில்லை, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை எங்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு தேவையானதை அறிவுறித்திவிட்டு, வழிநடத்திவிட்டுதான் சென்றிருக்கிறார். அவர் எப்படியும் வெளிவருவார் என்பதை நாங்கள் அறிவோம், அவரை சிறையும், மரணமும் ஒன்றும் செய்யமுடியாது என்பதை நாங்களும், எங்கள் மக்களும் அறிவோம். இந்த வினாடியில் இல்லாமல் இருக்கலாம், அவர் இருந்திருந்தால் ஒரு தலைவர் மட்டுமே, அவர் இல்லாதபோது அத்தனை மக்களும் தலைவரே, எனவே அவர் இல்லாத நேரத்தில் எங்களுக்கு நடந்த சிறு சிறு சறுக்கல்களை கொண்டு எங்கள் இனத்தின் விடுதலை வேட்கையை தராசிடவேண்டாம், அதற்க்கு உங்களிடம் அளவுகோலும் இல்லை, நிறுக்கும் ஆட்களும் இல்லை.

எனவே, தேர்தலை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தும் திட்டம் விடுத்து, தமிழக தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் அத்தனை மின்னணு வாக்கு பெerட்டிகளை அந்தந்த மாவட்ட தலைநகருக்கும், வாக்கு சாவடிகளுக்கும் உடனடியாக கொடுத்தனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்னும் உங்களுக்கு நடந்த நடவடிக்கைகளை நினைத்து செரித்திருக்கமாட்டீர்கள் அல்லது நம்ப மாட்டீர்கள் என எங்களுக்கு நன்றாகவே தெரியும், எனவே இந்த கடிதம் படித்து பத்து நிமிடங்களுக்குள் முப்பத்துரெண்டு லட்சம் சதுர கிலோமீட்டருக்குள் மண்ணிக்கனும், தமிழக பரப்பளவை கழித்துக்கொள்ளவும் எங்கேனும் மற்றுமொரு எறிகணை விழும், மீண்டும் நீங்கள் வாக்குபெட்டிகளை நகர்த்தாமல் வேறு ஏதேனும் காய்நகர்த்த முற்ப்பட்டால் பத்து நிமிடத்திருக்கு ஒரு எறிகணை வீதமாக எங்கேனும் ஓரிடத்தில் விழுந்துகொண்டிருக்கும், இனிமேல் விழுவது பூச்சாண்டியாக இருக்காது, குறைந்ததது ஐம்பது கிலோ எடைகொண்ட வெடிகுண்டை தாங்கி வரவல்லது உங்கள் பினாகா என்பதை நாங்கள் சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை.

நேரம் இப்பொழுது சரியாக 03.38, நான்கு மணியளவில் நீங்கள் வாக்குபெட்டிகளை நகர்தினால்தான் சரியான நேரத்தில் நாங்கள் வாக்குப்பதிவை ஆரம்பிக்கமுடியும். உங்கள் படையணிகள் அங்கே காவலுக்கு நிற்கலாமே தவிர, தேர்தல் கூட்டங்களை நடத்தவிடாமல் செய்தததை போல் ஏதேனும் இடைஞ்சலாக செயல்படக்கூடாது என அறிவுறுத்துகிறோம். சொன்னது போல், 03.48  மணிக்கு மும்பை சட்டசபைமுன் ஒரு எறிகணை விழுந்தது, அதிலும் புலிக்கொடியுடன் ஒரு செய்தி கடிதமே இருந்தது. அந்த செய்தி குண்டைவிட பலமாக வெடித்தது.....................

Monday, May 9, 2011

அடையாளம் வாரம் - 11‏

சரக் சரக் என்ற சத்தத்துடன் வந்த ஒரு மிடுக்கான அலுவலர், மாறனின் கைது செய்யும் ஓலையை நீட்டினார். அந்த சிரிப்பில் எதிரியும் வீழ்வானே...அதே புன்முறுவலுடன் சொன்னார்.. ""ஒரு பதினைந்து நிமிடங்கள் கொடுத்தால், என் வேலையை முடித்துவிடுவேன், அதன் பின் நானே உங்களுடன் வருகிறேன், ஒன்றும் பயப்பட வேண்டாம்"" ஏற இறங்க, சுற்றும் முற்றும் நோக்கியபின் தலை அசைத்தார். ஒலி, ஒளிப்பதிவு தொடர்ந்தது... ""இன்னும் சில நிமிடங்களில் நான் கைது செய்யப்படப்போகிறேன், நான் மீண்டும் உயிருடன் வருவேனா அல்லது விதைக்கபடுவேனா என்பது எனக்கே தெரியாது, அல்லது காலவரை இன்றி ஏதேனும் ஒரு கடுஞ்சிறையில் அடைக்கப்படலாம்... எதுவாக இருந்தாலும்., இது போர்...விதைப்பதும், முளைப்பதும் கண்டு ஆவேசப்படாமல் தொடர்ந்து போராடுவோம்.... இறப்பதும், பிறப்பதும் இயல்பு, இதற்கிடையில் நம் இனத்திற்காக, சிறு விதையையோ, பெரும் போரையோ நான் அல்லது என் செயல்கள் செய்திருக்குமென்றால், மக்களாகிய நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நான் சொல்வதற்கில்லை. இருந்தாலும், பெரும்பாடுபட்டு உருவாக்கிய தனித்தமிழகம் தொடர்ந்து இயங்குவதற்காக, நான் இல்லாத போது யார் யார் எந்த பொறுப்பில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்க்கனவே சொல்லியிருக்கிறோம், எனவே அவர்களுக்கு உங்கள் ஆதரவை எனக்கு கொடுத்தது போல் தர வேண்டுகிறேன். நான் உயிருடன் மீண்டும் சந்தித்தால் தனிதமிழகத்தில் மட்டுமே. நன்றி"" சரியாக பதினான்கு நிமிடத்தில் முடித்துவிட்டு கைது செய்ய பணித்தார். அதே நேரத்தில் கக்கன், தீலீபன், குமரன் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கும்பம் மாதம் பிறந்த தனித்தமிழகம், பிறந்து ஒரு சில வாரங்களிலேயே தன் தலைவனை சிறைக்கு தள்ளியது. மீனம் முதல் நாளில் தேர்தலை நடத்தி வெற்றிபெற்றுவிட்டால், ஐ.நா. வையும் உலக நாடுகளையும் ஒத்துகொள்ளவைப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது என்று நன்பிக்கை கொண்ட மாறன், சிறையிலிடப்பட்டார். இதுவும் எதிர்பார்த்ததுவே. அனைத்து கட்டுபாடுகளையும் சில மணி நேரங்களுக்குள் விக்ரம் சிங் கைக்குள் கொண்டுவந்தான்.

பெங்களூர்:
மிகவும் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமண கூடத்தில் கூட்டம் நடந்தது. அரிமாவேந்தன் (தேர்தல் ஒருங்கிணைப்பாளர்) தலைமையில், தமிழ்ச்செல்வன் (தற்காலிக தலைவர்) முன்னிலையில், பால். புகழேந்தி (மூத்த கட்டளை தளபதி-பொறுப்பு), நடேசன் செல்வா (கட்டளை தளபதி-பொறுப்பு) ஆகியோர்கள் இருக்க காலை எட்டு மணிக்கே தொடங்கியது அந்த மிக முக்கிய கூட்டம். மேலும் நானூறு தலைகள் காணப்பட்டன. அனைவர் கையிலும் மடிக்கனினி, முதலில் அரிமா பேசினார். ""வணக்கம், மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் இப்பொழுது இருக்கிறோம் என்பது நாம் அனைவரும் தெரிந்த உண்மை, எனினும் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வரங்களே இருக்கும் இவ்வேளையில், இரண்டு செயல் திட்டங்கள் குறித்து நான் பேச இருக்கிறேன் . முதலில், மாறன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடர் பேரணி, தினமும் எல்லா இடங்களிலும் நடக்கவேண்டும், அதைவிட முக்கியம் தேர்தல் ஏற்பாடுகள். முதல் பொறுப்பு நடேசன் தலைமையில் நடக்கும், இரண்டாம் பொறுப்பு புகழேந்தி தலைமையில் நடக்கும், இருவரும் தங்கள் செயல் திட்டங்களை இப்பொழுது விளக்குவார்கள்.

நடேசன் செல்வா:
இந்திய படைகள் குழுமியிருக்கும் இத்தருணத்தில் பேரணி நடத்துவது சிரமமாக இருந்தாலும், என் திட்டம் இதுதான்.
1. முதலில் மாறனின் பேச்சை அனைத்து இடங்களிலும் காண்பிப்பது, இதனால் பொதுமக்கள் சிலர் கூட்டத்திற்கு வர வாய்ப்புண்டு.
2.  கல்லூரிகள், பள்ளி மாணவர்களிடம் அவரவர் மாணவர் தலைவர்களிடம் பேசி பேரணிக்கு வரவழைப்பது, இதன் முடிவை நன்றாக இருக்கும் என நண்பிக்கையாக இருக்கிறேன். எனக்கு தெரிந்து அனைத்து மாணவர்களும் வருவார்கள். நமக்கு எப்பொழுதும் மாணவர்கள் செல்வாக்கு உண்டு. மாணவர்கள் பெரும் தொகையாக வந்தால், அவர்களை பின் தொடர்ந்து பொதுமக்கள் நிறைய பேர் வருவார்கள் என்பதும் நம் கணிப்பு.
3. அனைத்து பேரணிகளும் நேரலை மூலமாக இணையத்திற்கு அனுப்பப்படும், நம் தொலைகாட்சி, துணைக்கோள்கள் அனைத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துகொள்ளப்பட்டதால், நாம் இணைத்தை மட்டுமே நம்பி உள்ளோம்.
துணைக்கேள்வி: இணையமும் துண்டிக்கப்பட்டால் என்ன செய்யப்போகிறீர்கள்?
பதில்: இணையம் துண்டிக்கும் சாத்தியம் மிகவும் குறைவு, ஏனென்றால் ஏதேனும் ஒரு ஐ.பேட் இருந்தாலே போதும்.

பால். புகழேந்தி:
தேர்தல் ஏற்பாடுகள் சாத்தியமே. ஒன்றும் குழப்பம் வராது. யாரும் பீதி அடையவேண்டாம். முதலில் தேர்தல் மீனம் முதல் தேதி என்பது அனைவருக்கும் சென்றடையவேண்டும்.இதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்று நம்புகிறேன். தேர்தல் பாதுகாப்பாக நடக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். எப்படி பாதுகாப்பை உறுதி செய்யப்போகிறோம் என்பதுபற்றி நான் இங்கே முழுமையாக சொல்லமுடியாது. அதற்காக பணிக்கப்பட்ட நபர்களிடமும், தமிழ்ச்செல்வனிடமும் அதற்க்கான வரைவு சமர்பிக்கப்பட்டு, அனுமதியும் வாங்கப்பட்டுவிட்டது. எனவே,
1 . தேர்தல் தேதி மக்களிடம் சென்றடையவேண்டும்
2 . வாக்குப்பெட்டி கையில் கிடைத்ததும், ஒரு மணி நேரத்திற்குள் சின்னங்கள் உள்செலுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும். அதற்க்கான பொறியாளர்களை தேர்வுசெய்யும் பனி முடுக்கிவிடப்பட்டுவிட்டது.
துணைக்கேள்வி: பொறியாளர்கள் தவறு செய்யும் பட்சத்தில் மொத்தம் தவராகிவிடக்கூடும், எப்படி இதை உறுதி செய்யப்போகிறீர்கள்?
பதில்: நன்று. இதற்கான மென்பொருள் பதிவுக்குசியில் இறக்கப்பட்டு பத்துநிமிடங்களில் செயல்படதொடங்கிவிடும். எனவே மிகப்பெரிய தொழில்நுட்பவாதிகள் தேவை இல்லை.