Tuesday, February 15, 2011

நிறக்கோளாறு.....

வணக்கம்,
ஏ.. புள்ள பேச்சியம்மா, மசாமாருக்கேனு கேள்விப்பட்டேன்.. கறுப்பா பெத்துராதடி..
எங்கடா போற கருவாயா, இண்ட்ர்விக்கா.. மொகறைய கொஞ்சம் கழுவிட்டு போடா..
பொண்ணு ரெம்ப கறுப்பா இருக்கு பரவாயில்லையாடா பாண்டி? இல்லையின சொல்லு செம்பட்டிப்பக்கம் போயி வெளியெடத்துல பொண்ணு பார்ப்போம்.
முனியா.. நம்மவீட்டு பிள்ளவேற கொஞ்சம் கலரு கம்மியா..அதேன்.. மாப்ள வீட்ல கூட ரெண்டு பவுனு கேட்கிறாங்க....
இப்படி தினம் நாம் கேட்டுகொண்டிருக்கும் வசனங்கள், சில உறுத்தல்கள், சிலருக்கு வலிக்கும் ரணங்கள், குறிப்பாக பெண்களுக்கு. அப்படியே சென்னை போன்ற பட்டினத்துரைகளுக்கு சென்றால் பேசும் வழக்கு மாறுமே தவிர ரணங்களும், உறுத்தல்களிலும் கொஞ்சமும் பிழையில்லாமல். அதிலும் இடைக்கிடை ஆங்கிலம் தெளித்து..

he is ok டி,, பட் அவன் ரெம்ப கறுப்புடி.

இதெல்லாம் மனிதர்களின் தாழ்வுமனப்பான்மை என்றும் அவரவர் மனபிரச்சினைகள் என்றும் ஒருபக்கம் அப்படியே ஒதுக்கவும் முடியாது. இன்றும், வேலைக்கு செல்லுமிடத்திலும், தினப்பழக்கவழக்கத்திலும், சமூக குடும்பப் பிரச்சினைகளிலும் தோலின் நிறம் முக்கிய பங்குவகிப்பதை யாரும் இல்லையென்று சொல்லிவிடமுடியாது

இன்றும், முக்கிய சந்திப்புகளிலும், தொழில்நுட்பக்கூட்டங்களிலும் (technical meeting) தேறிய அனுபவமும், கல்வியும் தகுதியுமிருந்தும் நம் கறுப்பு தமிழர்களால் வெள்ளக்கார துறைமார்களிடம் உரக்க பேசமுடிவதில்லையே. மொழிதான் காரணம் என்று ஒத்தவரியில் சொல்லவும் முடியாது. எனென்றால் நம் பக்கத்து மண்ணின் மைந்தர்களிடம் (தெலுங்கு, வடவர்கள்) பேசும்போது சபை கிழிகிறதே. தொழில் மற்றும் அலுவலகரீதியான பிரச்சினைகளை நிறுத்திக்கொண்டு, சமூக பின்னணிகளைப்பற்றி ஆராய்வோம்.

தமிழர்கள்........... ஒரு ஆராச்சியாளர் தமிழர்களை இப்படி விவரிக்கிறார்

The Tamils proper are smaller and of weaker build than Europeans, though graceful in shape. Their physical appearance is described as follows: - a pointed and frequently hooked pyramidal nose, with conspicuous nares, more long than round; a marked sinking in of the orbital line, producing a strongly defined orbital ridge; hair and eyes black; the latter, varying from small to middle-sized, have a peculiar sparkle and a look of calculation; mouth large, lips thick, lower jaw not heavy; forehead well-formed, but receding, inclining to flattish, and seldom high; beard considerable, and often strong; colour of skin very dark, frequently approaching to black

Frequently Black. ஆம்........... அவர் சொல்லவருவது கிட்டத்தட்ட, நிறையப்பேர் கறுப்பானவர்கள். எனவே கொஞ்சம் சிவந்தமேநியுடைய என் தமிழ் நண்பர்கள் கோபித்துக்கொள்ளவேண்டாம்.

முதலில், தமிழர்கள் பிறநிற குறிப்பாக சிவந்தமேநியுடைய மனிதர்களை கண்டு பயந்திருகிறார்கள் அல்லது தேவைக்குமேல் மரியாதை கொடுத்திருகிறார்கள், கொடுத்துக்கொண்டிருகிறார்கள் என்றே கருதவேண்டும். எனென்றால் சுமார் பத்தாம் நூற்றண்டிற்க்குப்பின், பக்கத்து மண்ணின் மைந்தர்கள் கொடிய தண்டனைகைதிகளாகவும், முகலாயர்களின் படையெடுப்பின்போது பயந்து ஓடிவந்தவர்கள், பசி பட்டினி போக்கவும் புலம்பெயர்ந்து தமிழகம் வந்தவர்கள்தான் தெலுங்கர்கள், கன்னடர்கள், உருது பேசும் முஸ்லிம்கள், குஜராத்திலிருந்து வந்த மார்வாரிகள். இதில் முக்கியமானவர்கள் தெலுங்கர்களும், கன்னடர்களும் தான். எனென்றால், வடவர்கள் தங்கள் தாய்மொழியை விட்டுவிடாமல் இன்றுவரை தொடர்ந்தவர்கள். ஆனால், தெலுங்கர்களும், கன்னடர்களும் தமிழை கிட்டத்தட்ட வீட்டுமொழியாகவும் எடுத்துகொண்டவர்கள். அதற்க்கு, இவர்களின் தமிழ் மீது கொண்ட காதலோ, பற்றோ கண்டிப்பாக இல்லை. தெலுங்கும், கன்னடமும் தமிழை தழுவித்தொன்றிய மொழிகள். அதனால் அவர்கள் எளிதாக கற்றுக்கொண்டு தமிழர்களை போல் வாழ்ந்து தமிழ் போர்வை
போர்த்திக்கொண்டவர்கள். இவர்கள் தமிழர்களைப்போல் தோற்றம் கொண்டவர்கள் இல்லை. கொஞ்சம் சிவந்தமேனியை பெற்றவர்கள்

நாம் பயந்த, அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுத்த மாமனிதர்களை!!!!!! வரிசைப்படுத்துவோம்,

கட்டபொம்மு நாயக்கர் (நாயக்க குறுநில மன்னன்)
திருமலை நாயக்கர் (கிருஷ்ண தேவராயரின் ஆளுநர் மதுரை)
அச்சுதப்ப நாயக்கர் (கிருஷ்ண தேவராயரின் ஆளுநர் தஞ்சாவூர்)
ஈ.வே.ராமசாமி நாயக்கர்
பி.எஸ்.குமாரசாமி ராஜா (தெலுங்கர்-முன்னாள் முதல்வர்)
அண்ணாதுரை (அம்மா தெலுங்கர்)
கருணாநிதி (தெலுங்கர்)
எம்.ஜி. ராமசந்திரன் (மலையாளி)
ஜெயலலிதா (கண்னடர்)
ரஜினிகாந்த் (கண்னடர்)
விஜயகாந்த் (தெலுங்கர்)
வை.கோ (தெலுங்கர்)

மேற்ச்சொன்னவர்களில் யார் நல்லது செய்தார்கள், யார் செய்யவில்லை, ஒவ்வாருவரையும் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார் யார் என்பதை வரிசைப்பட்டுத்துவது நம் நோக்கம் அல்ல. மாறாக, இவர்கள் இருந்த இடத்தில் காமராஜர் போன்றொரு தலைவன் இருந்திருந்தால்..............இதை ஆய்வு செய்யும் பணியும் நமதில்லை.
ஏன் இல்லை. எதற்காக நாம் தெரிவு செய்யவில்லை. நமதினத்தில் தலைவர்கள் இல்லாமல் போய்விட்டார்களா........ இல்லை. தலைவர்கள் மக்கள் மத்தியில் கொண்டுவரப்படவில்லை, அதற்கான அவகாசமோ, வாய்ப்போ கொடுக்குக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. புரிகிறது..யார் கொடுக்கவேண்டும் எனக்கேட்கிறீர்கள்.

மேற்ச்சொன்ன பட்டியலில் யாரும் தமிழர்கள் இல்லை. வேறுஇனத்தவர்கள் தலைவனாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் நமக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள் என்பதே உண்மை. எ. கா. திரு. நெடுஞ்செழியன், திரு. அன்பழகன், திரு. மா.பொ. சிவஞானம், இப்படி சொல்லிக்கொண்டே நீளலாம். இவர்கள் அனைவரும் கறைபடியாத கைகொண்டவர்கள் (கிட்டத்தட்ட) எனலாம்.

சரி, இப்பொழுது நிறப்பிரச்சினைக்கு வருவோம், எம்.ஜி. ராமசந்திரன் போன்றோர்கள் வெறும் நிறத்தை வைத்தே ஆட்சி செய்தார் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், வேறு இனத்தவர்கள் மற்றைய மொழிகளில் பேசி நமவர்களிடம் எளிதாக நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளமுடிகிறது என்பதும் நாம் தினந்தோறும் சாலைகளிலும், வேலை இடங்களிலும் நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளாகும்.

நிறம் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மிக நீடதூரம் பாதித்ததும் நம் இனத்தவர்களிடம் தான்.

எனவே நிறம் தமிழனின் அடையாளங்களில் ஒன்றாக கலந்தது. தமிழ்த்திரைப்படங்களில் காண்பிப்பதுபோல் அல்லாது தமிழனின் அடையாளம் என நினைத்து வழிகளில், வாழ்க்கையில் இனைந்து நிற்ப்போம்... தமிழனாக.
அன்புடன்,
இரா. த. ஜெயக்குமார்

அடையாளம்‏ - வாரம் 2‏

எந்த ஒரு தகவலுமின்றி மாறாக ஆட்சியை கையகபடுத்தும் நோக்கில் அல்லதுமக்களை துண்புருத்தும் நோக்கில் நடுவணரசு செயல்படும் என்கிற பட்சத்தில்.. அந்த நிலை ஏற்படும் பட்சத்தில் நாங்கள் எல்லாவற்றிருக்கும் குறித்தஏற்பாட்டுடன் இருக்கிறோம். தமிழகம் தன்னை தற்காத்துகொள்ளும் தகுதியுடன், உறுதியுடன் இருக்கிறது.


வெற்றிமாறனின் செவ்வி எந்த ஒரு மாறுதலையும், சலனத்தையும்கொடுக்கவில்லை, மாறாக வடநாட்டு செய்திதாற்க்களில் ஒரு மூலையில்நகைச்சுவையை போல், எள்ளி நகையாடி எழுதியிருந்தார்கள். ஆனால், ஒரே ஒருஇந்தியத்துவா நாளிதழ் மட்டும் எச்சரிக்கை உணர்வுடன் கடுமையாக அரசை சாடிஎழுதியிருந்தது. உலகத்தின் வரலாற்றை ஒருவனின் புத்தி மாற்றப்போகிறதுஎன்பது தெரிந்திருக்குமோ என்னவோ. அதேபோல் தமிழகத்திலும் பெரிய ஒருசலமும் பெரிதாக இல்லை., இல்லை காட்டிக்கொள்ளவில்லை என்பதுதான்உண்மை. இந்த அமைதி ஒரு அரைக்கோடி மக்களின் இறுக்கிவைத்த அழுத்தம்என்பது யாருக்கும் தெரியாது, ஆம், நான் கக்கிவிடபோகிறேன் என்றுசொல்லிவிட்டா கொட்டுகிறது எரிமலைகள்.


ஐயா வணக்கம். எட்டி நோக்கினார் தாமரைகண்ணன். வணக்கத்தை கண்அசைவில் இயம்பினார். நீங்கள் சொல்லியனுப்பிய கைத்தடியும், சாய்நாற்காலியும் ... சரிபார்த்துகொள்ளுங்கள் ஐயா. நீ எந்தகடைகாரனப்பா... ஐயாநான் குருசாமி நாடார் கடைக்காரன். சரி தம்பி.. தண்ணி ஏதாவதுசாப்பிடுகிறாயா...அம்மா கவிதா.. குடிக்க கொண்டுவாம்மா... ஆமாட.. நான் கூடஏதோ சேட்டுக்கடையல வாங்கியாந்துட்டன்னுநெனச்சிட்டேன்..தாமரைக்கண்ணன்.. அசையும் சாய்நாற்காலியில் தானும் சிறிதுஅசை போட்டார்.

ஏறக்குறைய முப்பத்தி ஐந்து ஆண்டுகளிருக்கும்... பள்ளிக்கூட வாசலில் தன்மகிழுந்தை திறக்கும் தருவாயில் கேட்டது ஒரு குரல் "ஐயா வணக்கம்", வணக்கம். சாலமன் மாணிக்கம் என்னை அனுப்பிவைத்தார். ஆமா.. ஆமா எனமுகமலர கூப்பிட்டார்... மின்மடல் பார்த்தேன்... நீங்கள் வீட்டுக்கேவந்திருக்கலாம். ஆமா, வாங்க வீட்டுல போய் சாவகசமா பேசலாம். மாணிக்கம்ஐயா எப்பிடி இருக்காக.. வயசுவேற கூப்பிடுது.. இன்னும் வேலைய குறைக்கவேஇல்லை. கூடவே ஒரு இளங்கன்றை கூட்டிவந்திருந்தார். அது தன் வயதை மீறிஅறிவுத்திமிர் காண்பித்தது. ஐயா.. என் பெயர் பேரறிவாளன், இது மகன்வெற்றிமாறன். வசதி வாய்ப்புக்கு ஒன்னும் கொறை வைக்கல.. ஏதாவது நான்செய்யணுமுன்னு தோனுச்சு...என்னால முடியல..அதேன்..என் மகனைகூட்டியாந்திரிக்கேன்..அறிஞர் குணா புத்தகம், அரிமாவளவன் எழுத்து, இன்னும்சில வலைப்பூக்கள் அறிவு, அப்பறம் கொஞ்சம் மின்மடல் தகவல்கள். இதுமட்டுந்தான் எனக்கு தெரிந்த தமிழ்தேசம், புண்ணிய பூமி. உங்களுக்கு தெரியாததுஇல்ல... காமராசருக்கு அப்பறம்... தமிழனை ஒக்காரவைக்காத ஒதாவாகறைகள்... ஆமா அதுக்கு இந்த வாத்தியார் என்ன செய்யனும் புரியாமல் கேட்டார்தாமரைக்கண்ணன். உங்கள் எழுத்தும், உணர்வும் செயலுக்கு வரணும். அதுக்குஎன் மகன் ஒங்ககிட்ட படிக்கணும். சற்று நேரே உட்கார்ந்து ஆராய்ந்து கேட்டார்.... உங்கள் உணர்வையும், அறிவையும் நீங்கள் கொடுங்கள் நான் என் மகனைதருகிறேன். வரலாற்று ஆசிரியருக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. தொடர்ந்தார்பேரறிவாளன்.. என்னிடம் பணம் இருக்கு... எவ்வளவு வேணுமென்றாலும் தன்குரலை சற்று தாழ்த்தி பேசினார்... நான் சொல்லவரது... என்னன்னா.... தோட்டாவோ..... துப்பாக்கியோ...அத நான் பாத்துகிறேன்....அழகாகமுடித்தார்...பெயருக்கேற்ற சாயலில். ஒரு பெரிய சிரிப்புடன் தாமரைக்கண்ணன்தொடர்ந்தார்... என்னடா குட்டிப்பையா.. நீ ஈக்கிமதிரி இருக்க ஒங்க அப்பாதுப்பாக்கி.. தோட்டான்னு பேசுறாரு. கத்தி செய்யாததை புத்தி செய்யும். அதற்காககத்தி எடுத்த நம் முன்னவர்களை நான் பலிக்கவில்லை. அந்த நாட்டுக்கு, அந்தநேரத்தில் அது சரியாக இருந்தது.. நாம் புத்தியில் ஆரம்பிப்போம்... காலமும், களமும் முடியு செய்யட்டும் எதை பயன்படுத்தவேண்டும் என்பதை. அன்றுவெற்றிமாறனுக்கு முதல் பாடம் கற்றுத்தரப்பட்டது "பிரபாகரனின் வாழ்க்கைவரலாறு". அவன் அங்கேயே ஒரு மாணவர் விடுதியில் தங்கினான் என்பதைவிடஅன்று முதல் தாரைக்கண்ணன் வீட்டிலேயே பெரும்பாலும் கழித்தான்.

வெற்றிமாறன் தான் சார்ந்திருந்த அரசியல் கட்சி தலைவர் தில்லியிலிருந்துகூப்பிட்டார், நம்ம கட்சிதான் மேலயும், கீழயும்... நீ எதுக்குப்பா இந்தமாதிரிபேசிக்கிட்டு திரியிற... எதிர்க்கட்சிக்காரன் ஏதாவது பேசித்தொழய போரானப்பா... டில்லிக்கு வேற தேர்தல் வருது... அப்பறம் வடக்க ஒரு பயலும் ஓட்டுபோடமாட்டங்க... அப்பறம் நீ சென்னையில இருந்து கட்டபஞ்சாயத்து கூட பண்ணமுடியாது... சரி சரி நான் பாத்துகிறேன்..ஒரு பயலும் ஒன்னும் பேசல.. அதஅப்பிடியே விட்டுரு. மாறனும் சரி என்றோ மாட்டேன் என்று பதில்சொல்லவில்லை. இன்னும் சரியாக இருபது நாட்கள் எஞ்சிவுள்ளன.

மாறன் அனைத்து மட்ட தலைவர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் எனஅனைவரையும் அவசரமாக கூப்பிட்டார். அடுத்த நான்கே மணிநேரத்தில் கூட்டம்தொடங்கியது. வணக்கம். இன்னும் இருபது நாட்களே உள்ளன. நாம் எந்தஇலக்கில் இருக்கிறோம். கட்டுபாடுகள் எந்த அளவில் இருக்கிறது என்பதில்தொடங்கி.. சிக்கல்கள்... தீர்வுகள் என ஆலோசனை செய்யப்பட்டது. இங்கேஇன்னும் இரண்டு சிங்கங்களை அறிமுகபடுத்தவேண்டும். ஒருவர் திலீபன். மூத்த கட்டளை தலைவர், வயது வெற்றிமாரனைவிட இரண்டு ஆண்டுகள்மூத்தவர். இரும்பு மனிதர். செயலில் புலி. அரசு அலுவலல்கள் எதிலேயும்இல்லாதவர், ஆனால் கட்சியின் ஆணிவேர். அடுத்து கக்கன்கட்டளைத்தலைவன். முப்பத்தஞ்சு வயது இளம் கன்று. பயமறியாது. கோவக்காரன் என்று பெயரெடுத்தவன். கட்சியின் செல்லப்பிள்ளை. இவனுக்கும்அமைச்சரவையிலோ, அரசு அலுவல்களிலோ எந்த பொறுப்பும் கிடையாது.

இப்பொழுது இருக்கும் நிலவரத்தை பார்க்கும்பொழுது டில்லிக்காரர்கள் மிகவும்சாதரணமாக எடுத்துகொண்டதுபோல் தான் தெரிகிறது, எனவே தி.பி 2139 ம்ஆண்டு, சுறவம் மாதத்தின் கடைசி நாள், நாம் கண்டிப்பாக தனித்தமிழக அறிவிப்புசெய்துவிடும் கட்டயத்திற்கு தள்ளப்படுவோம் என்று தான் தோன்றுகிறது. எனவே என் புலிநிகர் வேங்கைகளே... ஆயத்தப்படுத்திகொள்வோம். நமக்குஎப்படியும் ஈராயிரம் டாங்கிகள், ஆயிரம் மிதுரக போர்விமானங்கள், இருபதாயிரம் துப்ப்பக்கிகாரகள் என தேவைப்படும் என்று நினைக்கிறேன். மேலும் தெளிவான விவரங்களை தம்பி கக்கன் தேவையான ஆட்களுக்கு ஆயத்தபணிகளை முடுக்கிவிடுவான் என்று நான் அறிவிக்கிறேன். இப்போதைக்கு இந்தவிவரங்கள் போதுமானது. இங்கே நடக்கும் விவரங்கள் மற்றும் பேச்சுக்கள்ரகசியம் காக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்வோம்.....................


அன்புடன்,


மாசிலான்

தமிழன் என்பதற்கு சான்று குலம் மட்டுமே

Monday, February 14, 2011

அடையாளம்‏ வாரம்-1

கி.பி. 2012 மற்றும் சில பின்நோக்கிய வரலாற்று படங்களை பார்த்துவிட்டு நாமும் கி.பி.2100 ல் தமிழகம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்ததில் சிறு கரு பிறந்தது. வானம் தொட்டு பார்ப்பதும், சிகரம் எட்டி தொடுவதும், கற்பனை தாண்டி சிந்திப்பதும் புதிய கண்டுபிடிப்பதின் காரணியாகவும், புதிய நாடுகள் பிறப்பதின் விதையாகவும் இருந்திருக்கமுடியும் என்பதில் ஐயம் ஒன்றும் இருக்கமுடியாது. இக்கதை விதையாகவோ, வேராகவோ இல்லாவிட்டாலும் கூட மண்ணின் விளிம்பில் ஒட்டியிருக்கும் உரத்தின் ஒரு துளியாக இருந்தாலே போதும் என நினைக்கிறேன். கதையின் களமாக கீழ் ஆசிய நாடுகள் வரை தலைநகரமாக இருந்த தஞ்சை மாநகரமும், கதை கருவாக தமிழகமும், தமிழ் மக்களும். கதையையும், நாட்டினையும் ஆட்சி செய்பவனாக வெற்றிமாறன்.

மஞ்சளும் சிவப்பும் கலந்த கதிரவன் எட்டிப்பார்க்கும் கதிரின்.... ஒரே ஒரு ஒளிக்கோடு கண்ணாடியை ஒடித்து நீட்டியது போல்...... ஓடிவந்து மலரின் முணையில் உட்கார்திருக்கும் பணிதிவலையின் மீது பட்டதில்...... மீள்கதிரை கண்டவுடன் கனாகண்ட குட்டிபூனை பதறி எழுவதைபோல் விழித்தான், அந்த மூன்றேமுக்கால் வயதுச்சிறுவன்....திடு திடென்று ஓடியவன் பட்டென விழுந்த "விடுதலை" செய்தித்தாளை வெகுண்டென பற்றி... தாத்தா.. உங்கள் செய்தித்தாள் என்று நீட்டினான். ஓடிய ஆறு சட்டென நின்றதுபோல்... நெஞ்சை விரித்து வாங்கினார் தொண்ணூறு வயதையும், நீண்ட கணவுகளையும் சுமந்துகொண்டிருந்த தாமரைக்கண்ணன்.

தி.பி.2139 ம் ஆண்டு சுறவம் மாதம் அறிவன் தினம் தலைப்பு செய்தியே சுட்டது.. தத்தா தேநீர் சுடுது... சீக்கிரம் வாங்குறீங்களா. அவருக்கு தேநீரைவிட செய்தி சுட்டது. ஒருமுறை தன்னை கிள்ளிபார்த்துகொண்டார். இவ்வளவு நாட்களா.. ஆண்டுகளா.. இருந்தாலும் சரி... என்று சகிக்காமல் சலித்துகொண்டார். தாத்தா... அம்மா கூபிட்றாங்க... குளிச்சிட்டு வருவீங்களாம். அப்பா சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க... இன்னிக்கி உங்க பொறந்தநாள். வெள்ளைவேட்டியும், வெள்ளை நரையுடனும் கொஞ்சம் கூட கூனாமல் குறுகாமல் 91 வயதை தொட்டிருந்த கிழட்டு வாத்தியார். என்னத்தையோ இறக்கி வைத்ததைப்போல் இளகினார்.. தான் வாழ்த்த தருணங்கள் போதுமென நினைக்கதூண்டியது.. ஓட்டபோட்டியில் தன் குச்சியை அடுத்தாமாவனுக்கு கொடுத்துவிட்டு இளைப்பாறுவானே.. எட்டிப்பார்த்த குட்டிவாழையை பார்த்தவுடன் விழிமிளிருமே கிழிந்த வாழைஇலை... அதிமிஞ்சிய ஒரு உணர்வு. ஆம்.. இனி மாணவன் பார்த்துக்கொள்வான் என்று சொல்லிக்கொண்டே சுடாத தேநீரை மருமகளை திட்டாமல் குடித்தார். குனவாளா.. கைத்தடியும், சாய்நாற்காலியும் வாங்கியாட.. வயசாகுதுள்ள.....

தஞ்சை மாநகரம்.

நந்தியார் காதில் ஒரு குட்டிச்சிறுவன் எதோ பேசிக்கொண்டிருந்தான். அவன் எந்த தாளில் மறுதேர்வு எழுதனுமோ... யாருக்கு தெரியும். கட்டி 5 ஆண்டுகள் ஆனாலும் அப்படியே பூரித்திருக்கும் "தஞ்சை ஆட்சி நகரம்" எப்பொழுதும் சாலை பரபரப்பாக இருக்கும் காலை எட்டுமணி.... சரேலென்று அழுத்தி இருக்கிபிடித்து சட்டென்று நின்றது அந்த மகிழுந்து.... 30 ம் தலைமுறை தொழிநுட்பம், 3 மணித்துளி நேரத்தில் 500 மைல் வேகமெடுக்கும், 16 .5 லிட்டர் 1235 குதிரைத்திறன் பலம் வாய்ந்த வாகனம், வள்ளுவன் வாகன நிறுவனம் தயாரிப்பின் விலைஉயர்ந்த வாகனம் இதுவே. நின்றதன் காரணம்..ஒரு செய்தியாளன் குறுக்கே விழுந்து நின்றான்..... அய்யா வணக்கம்..என்னப்பா இப்பிடியா வர்றது...அய்யா நான் தினசரி நாளேடு...உங்கள் பேட்டி உண்மையா வதந்தியா.. பதில் சொல்லாமல் அந்த வாகனம் விரைந்தது சட்டசபையை நோக்கி.....

வெற்றிமாறன். தமிழகத்தின் முதல்வர். வயது 43 பிறந்தது வாடிப்பட்டி என்னும் சிறிய ஊர். மதுரையிலிருந்து வத்தலக்குண்டு போய், அங்கிருந்து 5 மைல் தூரம். அப்பா நெடுஞ்செழியன், நெசவாளர் குடும்பம், சாலியர் குலம், அம்மா சாந்தி. இந்த நூற்றாண்டில் இன்னும் கைத்தறி வைத்துகொண்டு ஏதாவது ஒன்றை நூற்றுகொண்டிருப்பது நெடுஞ்செழியன் மட்டும்தான். அதற்காக நெசவு செய்தாதான் பொழப்பு என்பதில்லை. அவன் வளர்க்கபட்டதே ஆள்வதற்க்காகத்தான் என்றால் மிகையாகது. அப்பா நெடுஞ்செழியனுக்கு சொந்தமாக ஒரு பெரிய நூற்பு ஆலை பழனிக்கு அருகே இருக்கிறது. வெற்றிமாறன் படித்தது 20 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த மதுரை தியாகராயர் கல்லூரி. கற்றது இயந்திரவியல். வெற்றிமாறனின் அமைச்சரவையை உலகின் தலைசிறந்த கட்டமைப்புடைய ஆட்சிமுறை வடிவமைப்பு என்று சொல்லலாம். தமிழகத்தின் சிற்றூரினில் கடைசி வீட்டில் இருக்கும் நாய் குட்டியின் விவரம் வரை இந்த கட்டிடம் சொல்லும். இரண்டு துணை முதல்வர்கள். முத்துக்குமார் உள்த்துறை, மதிவாணன் சட்டம். பத்து மூத்த அமைச்சர்கள் முக்கிய நிர்வாகங்களை பார்பதற்க்கென்று. இருபது அமைச்சர்கள். இருபது துணை அமைச்சர்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் இ.ஆ.ப. நிர்வாக அலுவலர் மற்றும் ஒரு துறை சார்ந்த நிர்வாக அலுவலர். அவ்வளவு பெரிய நிர்வாக அலுவலக கட்டிடத்தை இந்த தமிழகம் பார்த்தது இல்லை, தஞ்சை பெரிய கோவிலைவிட உயரமாக இருந்தால் நன்றாக இருக்காது என்பதற்காக பரப்பளவை கூட்டி கட்டிய கட்டிடம். எந்த ஒரு தாக்குதலையும் தாக்குபிடிக்கும் கட்டிடம். உலகின் மிகசரியாக பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஒரே நேரத்தில் ஒரு மில்லியன் மக்கள் நடமாடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடம்.

இன்று மிக முக்கியமான நாள். சுமார் முன்னுற்று ஐம்பது ஆண்டுகளாக தமிழன் அல்லாத ஆட்சியை மட்டுமே பார்த்து பழகிய தமிழகம் முதன்முறையாக வெற்றிமாறனை பார்த்திருக்கிறது. அந்த காலத்தில் யாரோ காமராசர் என்பவர் இருந்தாராம் என்பது மட்டுமே இன்றைய தமிழகம் படித்த வரலாறு. முதல் ஐந்து ஆண்டு காலம் பதவிகாலம் முடிந்து மீண்டும் அரியணை ஏறி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. இன்னும் இரண்டு நிமிடங்களில் துணை முதல்வர்களுடன் கலந்தாலோசனை, பின் மூத்த அமைச்சர்கள் அதனை தொடர்ந்து அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், கடைசியாக சட்டமன்ற உறுபினர்கள். மூத்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர்கள் தவிர மற்றவர்களிடம் தொலைதூர ஒளி அலைபேசி கலந்துரையாடல் மட்டுமே.

செய்தியாளர்கள் கூட்டம்:
நன்றாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுதான். துளியும் அவசரம் இன்றி எடுக்கப்பட்ட முடிவு. அனைத்து தரப்பு உறுப்பினர்களிடையே கலந்து தீர ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுதான். இன்னும் சொல்லப்போனால் இந்தமுடிவுக்கு நாங்களும், என் இன மக்களும் தள்ளப்பட்டதுதான் உண்மையிலும் உண்மை. இதற்க்கு சான்று நானும், என்னை போன்ற முந்தைய முதல்வர்கலும், வரலாறும், புவியியல் அமைப்பும், தவறான சமூக பார்வையும் தான் காரணம். நாங்கள் அவசரகதியாக முடிவு எடுக்கவில்லை என்பதற்கு, ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வஞ்சிக்கப்பட்டதும், ஒதுக்கப்பட்டதும் தான் சாட்சி. காலமே மிகபெரிய வரலாறு. இங்கே, உங்கள் முன்வைக்கும் தீராத உயிர் ஆதார சிக்கல்களை, நீங்களும் தில்லியும் அருகருகே இருக்கும் மாநிலங்களும் எவ்வாறு கையாண்டன, எப்படி நடந்துகொண்டன என்பனவற்றை சொல்லி என் நேரத்தையும், உங்கள் மேலான நேரத்தையும் செலவழிக்க விரும்பவில்லை, மேலும் என் இன மக்களின் பொறுமையை சோதிக்கவிரும்பவில்லை.

ஒன்று: தமிழக நீராதாரம் சிக்கல். காவிரி, பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் நீர் சிக்கல்
இரண்டு: கனிம ஆதாரங்கள் - பங்கிடபடுவதும், பின்பெறுவனவும் (நிலக்கரி, சுண்ணாம்புக்கள், கிரானைட் கற்கள், தங்கம், பெட்ரோலிய வகை பொருட்கள்)
மூன்று: கைவிட்டுப்போன கச்சதீவு மற்றும் மீன்பிடிக்கும் உரிமைகள்
நான்கு: நடுவணரசுக்கு சரியாக செலுத்திய வரிகள் (சரியாக மக்கள் விகிதாசாரப்படி பங்கிடப்படுகிறதா?)
ஐந்து: தொப்புள்கொடி உறவான தமிழீழ மக்களின்பால் எடுக்கும் நடுவணரசின் கொள்கைகள்
ஆறு: சொல்லிக்கொண்டே போகலாம்... விடியாது.


எனவே, கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகாலமாக இந்திய கூட்டாசியில் எங்களையும், எங்கள் ரத்தத்தையும் கலந்து ஒருங்கிணைத்து, எங்கள் இனத்தின் பெயரையே இந்தியர்கள் என்று மாற்றிக்கொண்டு வாழ்ந்த நாங்கள் ஏன் தனியாக பிரிந்துகொள்ளும் உரிமையை நடுவணரசு கொடுக்ககூடாது என கோருகிறோம். இது வெறும் அறிக்கை மட்டும் அல்ல. இன்று முதல் நாங்கள் ஒரு மாதம் மௌனித்து மனிதர்களாக காத்திருக்கிறோம். அதற்குமுன் நடுவணரசு தங்களின் மேலான முடிவையும், அதற்க்குண்டான செயற்திட்டத்தையும், ஆக்கபூர்வமான அணுசரனையும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். இக்கடிதம் இன்னும் சில வினாடிகளில் நடுவரசிற்கு அலுவலகரீதியாக கிடைக்கும், இது வெற்றிமாறனின், தமிழக மக்களின் ஆகமுதற்பிரதிநிதியாக நின்று நான் விடுக்கும் கோரிக்கை.

எந்த ஒரு தகவலுமின்றி மாறாக ஆட்சியை கையகபடுத்தும் நோக்கில் அல்லது மக்களை துண்புருத்தும் நோக்கில் நடுவணரசு செயல்படும் என்கிற பட்சத்தில்.........

தொடர்வோம்.................

அன்புடன்,


மாசிலான்
தமிழன் என்பதற்கு அவன் குலமே அடையாளம்

ஒரு ரூபாய்க்கு அரிசி..அழியும் உழைக்கும் குடிகள்..நாளை அடிமைகளாகும் நம் குடிகள்...‏

உழைப்பே உயர்வு என்பதே தமிழனின் தாரக மந்திரமாக இருந்தது, இன்று உழைப்பை மறந்து இலவச அரிசிக்கும், இலவச வெட்டி சேலைகளுக்கும் பின்னால் திரியும் வேதனை தமிழகம் முழுவதும் பரவிவருகிறது. இது ஒரு வியாபார அரசியில் தந்திரம் என்று மட்டும் எளிதாக எடுத்துகொள்ளமுடியாது. ஏனென்றால், காமராஜர் நாடார் முதலில் இலவச மதிய உணவு திட்டம் கொண்டுவந்ததில் ஒரு சமூக பின்னணி இருந்தது, சாப்பாட்டுக்கே வழி இல்லாத காலத்தில், ஒரு கிலோ அரிசி 1970 களில் 16-18 ரூபாயாக இருந்தபோது சாதாரண பொதுமக்களால் அரிசி வாங்கமுடியாத நிலைகண்டு மணம் வருந்தி, மாணவ கண்மணிகளுக்கு சாப்பாடு போட்டாவது படிக்கவைக்கவேண்டும் என்ற வீராப்பில் பிறந்தது மதிய உணவுத்திட்டம்.

ஆனால் அதன் பின் வந்த தமிழரல்லாத முதல்வர்கள் அரசிலாக்கி இலவச.................... (நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் நிரப்பிக்கொள்ளலாம்) என்ற நிலை போய், உழைக்கும் இனத்தை முடக்கிவிட்டது இன்றைய இலவச அரிசி திட்டம். விவசாய தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், உற்பத்தி தொழிலாளர்கள் என ஒரு தொழிற்க்குடும்பமே வேலை செய்வதை நிறுத்திவிட்டது. காரணம், நான் ஏன் வேலை செய்யவேண்டும் 25 ருபாய் கொடுத்தால் 20 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு சாதாரண குடும்பத்திற்கு பத்து நாட்களுக்கு போதுமானது. இதனால் அழிந்தது விவசாயம், உற்பத்தி, கட்டுமான வளர்ச்சி மட்டுமல்லாமல் நம் இனமும் சேர்ந்துதான். ஒரு சின்ன எ.கா. திருப்பூரில் நண்பரின் ஆயத்த ஆடை குருந்த்தொழில் நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் வேலை செய்பவர்கள் நேபாளிகள், பீகாரிகள் மற்றும் வடவமார்கள்.... அவர்கள் என்ன தமிழர்களா என்ன வந்தோமா வேலை செய்தோமா பணத்தை பார்த்துவிட்டு வீட்டை நோக்கி ஓடிவிட.. இங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் இங்கேயே இருந்து தங்கி, தானும் ஒரு குருந்த்தொழில் தொடங்கி, பெருந்தொகை பார்த்திட்டதோடு நின்றுவிடாமல் தேர்தல், அரசியல், தலைவர் என்று ஆட்சியை கைகொள்ள ஆரம்பித்துவிடுவான். இல்லையில்லை இது மிகைபடுத்தப்பட்ட எண்ணம் என வழக்கம்போல் வந்தேறிகளும், போர்வைத்தமிழர்களும் பட்டும்படாமலும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இது மிகைபடுத்தப்பட்ட எண்ணம் இல்லை என ஆணித்தரமாக நாம் சொல்லமுடியும், இல்லை இல்லை தமிழனின் 300 கால அடிமைவாழ்கை காண்பிக்கும் (திரும்பிபார்க்கவேண்டும் என நினைத்தால்).

இதில், இன்னொரு கூட்டம்.. மேல்சாதிக்காரர்களுக்கு நாங்கள் கூலிவேலை செய்தே இத்தனை நாளும் அடிமைகளைப்போல் இருந்துவிட்டோம், இப்பொழுதாவது எங்களை சும்மா இருக்கவிடுங்கள் என்று தூண்டிவிட்டு வேடிக்கைகாட்டும் வேற்று இன கீழ்சாதி போராட்டவாதிகள். இந்த சிக்கலுக்கும் சாதிக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும் இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். இங்கே ஒரு இனம் சிதைக்கப்படுகிறது... சோம்பேறி ஆடுகளாக மாற்றபடுகிறார்கள்., பெண்கள் இருட்டறையிலும், அடுப்படியிலும் குத்தவைக்கப்பட்டு இருந்தவர்கள், நவநாகரீக மங்கைகளாக படித்துவிட்டு, திருமணமானவுடன் தொல்லைகாட்சிபெட்டியின் முன் குடும்பத்தையும், பிள்ளைகளையும், தான் என்ன செய்கிறோம் என்பதையும் மறக்கும் உதவாக்கரைகளாக உருவாக்கப்படுகிறார்கள். எத்தைனையோ பெண்கள் தையல் தைத்தும், ஆடைகளுக்கு படமிட்டும் (எம்ப்ராடரி என்ற சொல்லுக்கு யாரேனும் அழகிய தமிழ் வார்த்தை கூறி உதவவும்), தோசை மாவு ஆட்டிகொடுத்தும் பிள்ளைகளை படிக்கவைத்த மனைவிமார்கள் உண்டு, இன்றைய பெண்களில் பகுதிநேர வேலைசெய்பவர்களை மிக அரிதாக மட்டுமே காணமுடிகிறது.
இங்கே என் கருத்துகளை திறுபு செய்ய வாய்ப்புகள் நிறைய இருப்பதால் சொல்கிறேன், பெண்கள் ஏதாவது பகுதிநேர வேலை செய்ததுதான் ஆகவேண்டும் என்பது என் வாதம் இல்லை, அதேபோல் மக்கள் அனைவரும் கூலிவேலை செய்துதான் ஆகவேண்டும் என்பதும் என் வாதம் இல்லை. ஏனென்றால் கூலி வேலை செய்வது அனைவருமே கீழ்சாதியினர் என்பது போலவும், அவர்களை அடிமைபடுத்தவேண்டும் என்பது சாதி தமிழர்களின் எண்ணம் என்பதுபோல் ஒரு மாயையை ஒரு கூட்டம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. ஒரு வாலிபன் பத்தாவது மட்டுமே படிக்கமுடிந்தது, அதற்குமேல் தேறவில்லை, சரிவர படிப்புவரவில்லை என்றால் ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நம் வழக்கம். ஆனால் இன்றைய இளையர், கையில் அழுக்குபடாத வேலை மட்டுமே நாகரீகமான வேலை என்றும் அழுக்குபடும் வேலை அனைத்தும் கூலி வேலை என்ற கீழ்நோக்கிய எண்ணங்களுக்கு இழுத்துசெல்லப்பட்டுவிட்டார்கள். இது அவர்களின் தவறு இல்லை. அவர்களுக்கு எந்த திசையை காண்பித்தோம். எந்திரன் படம், கிரிகெட்டு விளையாட்டு, பெண்களுக்கு மெட்டி ஒலி நாடகம். நம் இன அடையாளங்கள் எல்லாம் கேவலம் என திசை மாற்றப்பட்டோம். கூத்து, கரகாட்டம், கபடி, பல்லாங்குழி, வெள்ளை வேட்டி, தாவணி இதில் எதாவது ஒன்றை நம் இளையோரிடம் கேட்டால், நம்மை உற்றுநோக்கும். அதற்க்கு காரணம், இவன் நல்லாத்தானே இருந்தான்...என்ன ஆச்சு இவனுக்கு....என்கிற ஒரு கேவலமான பார்வை. ஆனால், இலவசத்தின் பின் ஓடுவதை கேவலமாக நினைக்கவில்லையே.

நாம் கால்கள் இருந்தும் நொண்டிகளாக மாற்றப்படுவோம், கையிருந்தும் ஊனனாக ஆக்கபடுவோம், எல்லாம் இருந்தும் பிட்சைகாரர்களாக இருக்கப்போகிறோம்...... நன்றாக நம் கண் முன் தென்படுகிறது. அதன்பின், திராவிட கோமாளிகள் எல்லாம் நம்மை நிரந்தர அடிமைகளாக ஆக்கிவிடும். போதும் தூக்கம்.. விழித்திடு..உழைத்திடு தமிழா. உழைப்பில் கேவலமென்று ஒன்று இல்லை. தமிழன் உழைப்பில் உயர்ந்தவன்.

அன்புடன்,


மாசிலான்

கடவுள் இல்லை என்று சொல்லி என் சுவடுகளை குப்பைதொட்டியில் போட்டவர்கள்......

திராவிட..... பார்பனிய எதிர்ப்பு... கடவுள் இல்லை... கூற்றுகளில் எப்பொழுதும் பாதிக்கபடுவது தமிழர்கள் மட்டுமே. சுமார் 60 ஆண்டுகளாக, ஒரே ஒரு மேல்நோக்கு நாமத்தை கருப்பு சட்டை மாட்ட வைத்திருப்பீர்களா என்றால் இல்லை தான். மாறிய அனைவரும் என் இன தமிழன். உங்கள் பின்னாலே வந்து வந்து திராவிடனாக மாற்றினீர்கள், தமிழன் என்று சொன்னால் சிறை. ஆரியர்களை வந்தேறி என்றால் உங்கள் திராவிட இயக்கத் தலைவர்கள் அத்தனை பெரும் தமிழர் அல்லாதவர்கள், வந்தேறி கூட்டம்.. கன்னடன், மலையாளி, தெலுங்கன் அல்லாத வேறு யாரும் இல்லை. நீ இந்து, ஆரியன் உன் எதிரி என்று முறையிட்ட உங்களுக்கு நீ தமிழன் என்றோ, நான் ஆந்திராவில் இருந்து பிழைக்க வந்தவன், என் இனம் நாயக்கர், என்று ஏன் சொல்லிக்கொள்ளவில்லை. முடியாது, உங்களுக்கு நாம் எல்லோரும் என்று சொல்ல ஒரு போர்வை வேணும், அதற்காக நீங்கள் எடுத்துகொண்டதுதான் ""திராவிடன்"" என்ற இல்லாத இனம்.

தமிழன் முதலில் காவல் தெய்வங்களையும், பின்னாளில் சைவத்தையும் கடைபிடித்தவர்கள் என சுமார் 2000 ஆண்டு கால சுவடுகள் சொல்கிறது. அது என் நண்பிக்கை சார்ந்த விஷயம், இங்கே கடவுள் இல்லை என்று சொல்லவும், அதை அவமதிக்கவும் ஒரு கூட்டம், இதுவரை இருந்த எந்த ஒரு திராவிடக்கட்சி தலைவனும் தமிழன் என்றோ தமிழனின் அடையாளங்களை பற்றியோ துளி அக்கறை கூட இருந்ததில்லை.. கூட்டங்களில் கருப்பசாமி கும்பிடுவனையும், அய்யனாரை கும்பிடுவனையும் நக்கல் நையாண்டி செய்ய தைரியம் இருந்த இவர்களுக்கு முஸ்லிமை பற்றி பேசுவதற்கு கூட பயந்த கோழைகள், பெண்கள் மசூதிக்குள் நுழைய ஒரே ஒரு போராட்டம் கண்டீர்களா... யாரை பற்றியும் பேசுவதற்கு தகுதி இல்லாத கூட்டம்.

2000 ஆண்டு கால எங்கள் சமூகத்தில் , எங்கேயும் கீழ் சாதிக்காரர்கள் என்றும் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்ககூடாது என்றோ ஒரு எழுத்தும் இல்லை. முதலில் வைணவர்கள் இந்த கூத்தை ஆரம்பித்தவர்கள், யார் வைணவர்கள் என்று உற்று நோக்கினால்... பெரியாருக்கு முன் வந்த வந்தேறிகள்.. 11 ம் நூற்றாண்டிற்கு பின் வந்தவர்கள், ராஜராஜசோழனுக்கு பின் வந்த கோடரிகள். இவர்களின் ஈன பிறப்பு தமிழ் மண்ணுக்கு சொந்தமில்லை.
அடுத்தவனை வந்தேறி என கூறுவதற்கு முன் தாங்கள் யாரென்று பார்க்கவும், அயோத்தி, ராமர் என்று பேசி தமிழனை பிரிக்க முயல வேண்டாம், அதுதானே வேண்டும், ராமர் கூட்டம் சொல்வது சரிஎன்று சிலரையும், இல்லை என்று சிலரையும் பிரிக்கணும். இங்கே குட்டை குழம்பிகிடக்கையில் லாப மீன்களை அள்ளிக்கொள்ளவேண்டும், ஓட்டுகளை வாரவேண்டும்.

அய்யனாரும், கருப்பசாமியும், சைவ சித்தாந்தமும் என் தமிழின் அடையாளங்கள். சுவடுகள். இதில் கடவுள் இல்லை என்று சொல்லி என் சுவடுகளை குப்பைதொட்டியில் போட்டவர்கள் நீங்கள். கடவுளை பாடியதற்காக மாணிக்கவாசகரை கொன்றுவிடலாமா, கொன்ற கூட்டம்தானே இவர்கள். பெரியபுராணம், திருவாசகத்தை விட உங்கள் கருத்துகளுக்கு செவிமடுப்போமா.

நாங்கள் தமிழர்கள், இறை நன்பிக்கை கொண்டவர்கள். ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்பவர்கள். வள்ளுவன் இறைவனை நம்பியவன், தலைவர் பிரபாகரனும் கடவுளை நம்புகிறவர் அதனால் உங்கள் போதனைகளை மூட்டைபோட்டுகொண்டு இல்லாத திராவிட நாட்டிற்கோ அல்லது இருக்கின்ற ஆந்திராவிற்க்கோ கிளம்புங்கள். எங்கள் வாழ்க்கைமுறையில் இருக்கும் குறைபாடுகளை களைந்துகொள்ளும் பக்குவம் எங்களுக்கு நிறையவே இருக்கிறது. அதனால், சூத்திரன், அய்யன், பூணூல் என்று சொல்லிக்கொண்டு வயிறு வளர்க்க வேறிடம் பார்த்துகொள்ளுங்கள்
அன்புடன்,


மாசிலான்