Sunday, April 10, 2011

அடையாளம் வாரம் - 9

அன்புடன் வெற்றிமாறன்,
மீண்டும் மீண்டும் பெயரை உச்சரித்து பார்த்துக்கொண்டாள்..கொஞ்சம் ஆசையாய் இருந்தது....பெயரை சொல்லிப்பார்க்க, பார்க்காமலே இருந்திருக்கலாம்..ஏன் பார்த்தோம் என்றிருந்தது. அப்பாட எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டனவே!!! அந்த கடிதம் இல்லை அந்த கவிதை...""என் பார்வைகளை முடியாவிட்டாலும் தவிர்த்துக்கொள்கிறேன்""""" தவிர்த்துவிட்டேன் என நினைத்துகொண்டாயடா  இன்றும்..பாவி... அதனால்தான் நாம் சேர்ந்திருந்தால் எப்படி இருப்போமோ அதைவிட தனித்தனியாக நன்றாக இருக்கிறோம் என உள்வார்த்தை கொண்டு பேசினாயா... அழுதாள்...புலம்பினாள். அந்த மனுசனுக்கும் பால் ஊத்தியாச்சு நேத்தே..அவரும் சொல்லாமலே செத்துபோனாரா? யாருடா சொல்வா? என ஆதங்கத்தை... நானே சொல்லி உன்னை அழவைக்கவும் மனசில்ல... அத நினைக்ககூட முடியல மாறா!! நா அழுதா நீ தாங்குவியாடா? தவிச்சுபோயிருவ...உனக்கு தெரியாமலே என மனசு  மண்ணுக்குள் போகட்டும் அந்த பெரியமனுசன்கூடவே... அந்த ஆளை இந்த ஊரே கொண்டாடுது!! என்கூட அரைமணிநேரம் பேசினே.. இப்ப வந்து பேசு பாக்கலாம்....குழிக்குள்ள அமுக்கியாச்சு ஒன்ன.. நீ எப்படி பேசுவ..

தூற்றினாள் தாமரைக்கண்ணனை... இவள் ஒருவள் மட்டுமே தூற்றினாள் தன காதலை கருக்கிவிட்டதாக நினைத்து. ஆனால், அன்று மாறன் காதல் பின் போயிருந்தால் ஒரு இனமே பல நூற்றாண்டுகளுக்கு பின்னல்லவா இருந்திருக்கும். தமிழில் தலைவன் என்று எழுத ஆளில்லாமல் அல்லவா போயிருக்கும். காதலும், மனைவியும், பிள்ளைகளும் என்று இருந்திருந்தால் ஒரு தலைமுறை மட்டுமே என்று போயிருக்கும். இன்று எத்தனை பிள்ளைகள், எத்தனை மனைவிகள், எத்தனை காதல்கள் வாழப்போகின்றன. இதுவல்லவா வாழ்க்கை. இதற்காக படைக்கப்பட்டவன், பிறந்தவன் இவனல்லவா. நல்லதோர் வீணை செய்தே நலங்கெடபுழுதியில் எறிவதுண்டோ - பாரதி கோவித்துக்கொள்வானடி பதரே என்றிருப்பார் தாமரைக்கண்ணன் இருந்திருந்தால்.

சென்னை:
வீறுகொண்டு கத்தினான் விக்ரம் சிங். சாலே...சாம்பார்வாலா!! உதயகுமார். இனிமேல் பேசி பயனில்லை. அதிரடியாக ஏதாவது செய்யவேண்டும். உடனே தொலைபேசினான். டில்லி ஒத்துக்கொண்டது. படையணி தளபதி கார்த்திகேயன் நாயரை பணித்தான். இளித்த நாயருக்கு சாயா கொடுத்தது போல் உலார்ந்த ஆனந்தம்.. இதற்க்காகத்தானே காத்திருந்தேன் என்பதுபோல் ஓடோடி வந்தார். எனக்கு அதிரடியா ஏதாவது செய்யனும்... சாம்பார்க்காரன் பாக்கணும். குள்ளநரி வேலை என்றாலே மலையாளிகளுக்கு பல்த்தெரியும்...அதிலும் தமிழனுக்கு எதிரா என்றால் சொல்லவா வேண்டும். ஒரு யோசனை சொன்னான். சுமார் ஒரு கோடிக்கும் மேல் பள்ளிகளிலும், மண்டபங்களிலும் அடைத்துவைத்திருக்கும் மலையாளிகள், தெலுங்கர்கள், வடவர்கள் பற்றி நீங்கள் யோசிக்கவே இல்லை. அவர்களில் பெரும்பாலும் பெரிய! மனிதர்கள்.. எல்லாம் வியாபாரிகள், தொழிலதிபர்கள். எனவே அவர்களை மீட்க அதிரடியாக செல்வோம். அப்பத்தான் மாறனின் அடுத்த நடவடிக்கை தெரியும்.

முதலில் 300 இடங்களை தெரிவு செய்தார்கள். அம்முன்னூறு இடங்களிலும் ஒரே நேரத்தில் சென்று பெருந்த்தாக்குதல் மூலம் பிணைக்கைதிகளை விடுவிப்பது. ரமேஷ் ராவ் காவல் துறை அதிகாரி தலைமையில் திட்டம் தீட்டப்பட்டது. ஆங்காங்கே நிலைகொண்டிருக்கும் படையணிகளை அப்படியே பயன்படுத்திகொள்வது - இதுதான் திட்டம். தகவல்,  நிலைகளுக்கு காதும் காதும் வைத்தாற்போல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 3 .30  மணிக்கெல்லாம் படையணிகள் பூனைபோல் சத்தமில்லாமல் சென்றது, படையணிகள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உட்புகுந்தார்கள்... புகுந்ததும் அறிவித்தார்கள்..."நாங்கள் இந்திய படையினர், உங்களை விடுவிக்க வந்துள்ளோம், யாரும் பயப்பட வேண்டாம்""" யாரங்கே மாறனின் காவல் துறை ஆட்கள்... சொல்லிமுடித்த அடுத்த வினாடி ஆட்களுக்குள் ஆட்களாக நிலைகொண்டிருக்கும் காவல் துறை படைகள், துப்பாக்கி விரித்தன... யாரும் சத்தம் போடவேண்டாம்.... நாங்கள் மாறனின் படையணிகள்.... பிணைக்கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்தனர். வணக்கம் இந்திய படையணியினரே.. உங்கள் துப்பாகிகளை கீழே போடுங்கள்... அனைத்து படையணியினரும் பினைபிடிக்கப்பட்டு, துப்பாக்கிகள் கையகபடுத்தப்பட்டன. கிட்டத்தட்ட முன்னூறு இடங்களிலும் இதே கதிதான். சுமார் பத்தாயிரம் வீரர்கள் பினைபிடிக்கப்பட்டனர், நூறு உலங்கூர்திகள், பல ஆயிரக்கணக்கான நவீனரக துப்பாக்கிகள், எரிபடைகள், படைஊர்திகள் கையகப்படுத்தபட்டன. சிறப்பு செய்தியாக, பத்து படைத்தளபதிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

தஞ்சை மாநகரம்:
இவை அனைத்தும் காலை பத்துமணி அளவில் முடிந்துவிட்டது. மூத்த கட்டளை தளபதி தீலிபன் அவசர செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்திய கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் சிங் அவர்கட்கு, மீண்டும் மீண்டும் ஏதாவது ஒன்றை தப்பும் தவறுமாக செய்து உங்கள் அதீத புத்திசாலிதனத்தை நிரூபிக்கவேண்டாம். வெற்றிமாறனின் அறிவுறுத்தலுக்கிணங்க பினைபிடிக்கபட்ட மக்களில் பெரும்பான்மையானோர் விடுவிக்கப்படுவர். மேலும் சந்தேகப்பட்டியலில் இருக்கும் சில தொழிலதிபர்கள், இந்திய அரசு அதிகாரிகள், உளவுத்துறை அலுவலர்கள், வட்டிக்கடை நடத்தும் சேட்டுக்கள், பொதுமக்களுக்கு ஊருவிளைவிக்ககூடிய சில குண்டர்கள் என பட்டியல் போடப்பட்டவர்கள் மட்டும் தமிழக அரசின் மேற்ப்பார்வையில் கண்காணிக்கப்படுவார்கள் அல்லது கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இது பற்றிய நீண்ட செயலறிக்கையை மாறனின் தகவல் செயலாளர் குமரன் படிப்பார்.

வணக்கம். மாண்புமிகு தலைவர் வெற்றிமாறனின் அறிவுறுத்தலின் படி, இந்த செய்தி வாசிக்கபடுகிறது.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
அனைத்து விவசாய நிலங்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும், அதன் விலையை இருதரப்பு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம். "யார் தமிழர்கள்" என்ற கேள்வி எழும் நிலையில் அவரவர் குலம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இடத்தின் தாய்ப்பத்திரம் முக்கிய ஆதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்படும். இதுபற்றிய புரிந்துணர்வு அறிக்கையை கூடிய விரைவில் அரசு சமர்ப்பிக்கும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தமிழகத்தின் அடிப்படை ஆதார வளங்கள் (நீர், நிலக்கரி, சுன்னாம்புத்தாது, பெட்ரொலியம் போன்ற) சார்ந்த தொழில்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும், மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம். இதில் வங்கிகள் அடங்கும்.

அனைத்து பொதுத்துறை/இந்திய அரசு நிறுவனங்கள் தமிழக அரசிற்கு சொந்தமாகும். இதில் அணு/நீர்/அதிவெப்ப மின் நிலையங்களும் அடங்கும். இது பற்றி பேச இந்திய அரசின் ஆணையர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு ஒன்று விடப்படும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு கீழ்: அனைத்து நிறுவங்களிலும் தமிழக அரசு குறைந்தது ஐம்பது பங்குகளை வைத்திருக்கு விரும்புகிறது. மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு மேல்: அனைத்து நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதற்கு தமிழக அரசு விரும்புகிறது. குறைந்தது முப்பது பங்குகளை அரசு கொள்வளவு செய்ய விரும்புகிறது. தலைமை நிர்வாக அதிகாரிகள் திரு. திலீபனை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
அரை ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் மணை நிலங்கள், தரிசு நிலங்கள் அனைத்தையும் தமிழக அரசு கையகப்படுத்தும். மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம்.


இவை அனைத்தும் புதிய அரசின் பொருளாதார கொள்கையின் அடிப்படையில் வகுத்த முடிவுகளாகும். இதன் தொடர்ச்சி நேரம்/நிலைமை இரண்டும் கருத்தில் கொண்டு அவ்வப்போது அரசின் கொள்கைகள் வெளிவரும். அயலார் இந்த மண்ணை விட்டு துரத்தி அடிக்கபடுவார்கள் என்ற பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை. இங்கே அனைவரும் வாழ வழிவகுக்கப்படும், ஆனால் யாரும் எங்கள் மண்ணை கொள்ளைகொண்டு போக அனுமதிக்கமாட்டோம். இந்த கொள்கைகளை இனப்பாடு பார்க்கும் அரசு/தாலிபான் போன்ற அரசு/அனைத்துலக நாடுகளுக்கு எதிரான அரசு என வர்ணித்து உலக நாடுகளிருந்து தனிமைப்படுத்த இந்தியா முயலும்/முயன்றும் வருகிறது. இது மலேசியா, சிங்கப்பூர், ரஷ்ய குடியரசு, வளைகுடா நாடுகள், புருனே, போன்ற நாடுகளில் இருப்பது போல் ""மண்ணின் மைந்தர்கள்" கொள்கை வடிவிலிருக்கும், எனவே நாங்கள் அனைத்துலக நாடுகளுக்கு எதிரான அரசு அல்ல என கூறி, இதுபற்றி இறுதியான அறிக்கை தனிதமிழகத்தின் முதல் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும். இதன் அடிப்படையிலே நாடு இயங்கும். எங்கள் கொள்கை வகுப்பாளர்கள் தேர்தல் முடிந்தவுடன் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்தது முறைப்படி எங்கள் கொள்கைகளையும், சிக்கல்களையும் வெளிப்படுத்துவோம். அதன்மூலம், அனைத்துலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறுவோம். தேர்தல் அறிவிப்பு முறைப்படி அடுத்தவாரம் வெளியிடப்படும்.

தொடர்வோம்....

No comments: