Sunday, July 3, 2011

அடையாளம் வாரம் - 13

நாங்கள் இரத்தின சுருக்கமாக சொல்லவிரும்புகிறோம் நாங்கள் பார ஹோதியில் மட்டும் இருந்து செயல்படவில்லை, நீங்கள் எங்கள் மண்ணை கட்டுக்குள்  கொண்டுவந்துவிட்டோம் என்ற ஆர்ப்பரித்தவுடன் நாங்கள் எங்கள் கள நடவடிக்கைகளை மாற்றிவிட்டோம், எங்கள் மண்ணை நீங்கள் ஆட்சி கொள்ள இயலாது, எங்களை கட்டிவைத்திருக்கவும் முடியாது, எங்கள் விலங்குகளை அவிழ்த்துவிடுவீர்கள். இனி நாங்கள் அடிமைகள் அல்ல. எங்கள் ஆட்கள், உங்கள் படையணிக்குள் புகுந்திருக்கிறார்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றுள்ளோம். அதற்குள், நீங்கள் சின்ன கணக்கு ஒன்றை போட்டுவிடுங்கள், எங்களின் எல்லா ஆட்களையும் கட்டுக்குள் கொண்டுவர எத்தனை நாழிகை அல்லது நாட்கள் பிடிக்கும், அதுவரை நாங்கள் பொறுமை காத்துகொண்டிருப்போம் என நீங்கள் கணவு ஏதும் காணவேண்டாம், நான்கு மணிக்குள் வாக்குபெட்டிகள் நகர ஆரம்பிக்கவேண்டும் இல்லையென்றால் எங்கே வெடிக்கும் என எங்களுக்கே தெரியாது, இனி வெடிக்கப்போவது வெறும் காகிதங்களும், செய்திகளும் அல்ல என்பதை நினைவுபடுத்தவிரும்புகிறோம்.

ஒருதுளி குருதிகூட சிந்தாமல் எங்கள் உரிமையை பெற்றுவிடுவதுதான் எங்கள் நோக்கம், அதே நேரத்தில் மக்களின் எண்ணங்களை தொட்டுப்பார்க்க விரும்பாமல், பயந்துகொண்டு... எங்கே அனைத்து மக்களும் இந்திய ஆட்சியை வேண்டாம் என கூறிவிடுவார்கள் என பயந்துகொண்டு, தேர்தலை நடத்தவிடாமல் இடையூறு செய்ய நினைக்கும் மனிதாபிமானமற்ற அரசை இசையவைப்பதற்க்காக, எங்கள் இனத்தை கூறுபோடும்போது வேடிக்கை பார்த்துகொண்டிருந்த மக்களில் சிலரின் குருதியோ, உயிரோ போய்த்தான் ஆகவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை செய்வதற்கு சிறிதும் கவலைப்படமாட்டோம், மேலும் எங்களைவிட இந்தியர்கள் மீது உங்களுக்குத்தான் அக்கரைவேண்டும். உலகின் அதிக மக்கள்தொகை உங்கள் நாட்டில் இருப்பதால், உங்கள் மக்களின் உயிர் மீது உங்களுக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு பரிதாபம் இருக்கிறது. எனவே அந்த ஒரு நிலைக்கு, முடிவெடுப்பதற்கு இந்திய அரசு எங்களை தள்ளப்படும் பட்சத்தில் இந்திய மக்களிடமும், உலக சமுதாயத்திடமும் நாங்கள் மன்னிப்புகேட்கிறோம்.


நாங்கள் கேட்பது மக்களை முடிவு எடுக்கவிடுங்கள்...என்பதுதான். உங்கள் ஆட்சி மீதும், உங்களின் ஒருமைப்பாட்டின் மீதும் உங்களுக்கு நன்பிக்கை இல்லையா? உலக நாடுகளே ஏன்
மௌனித்திருக்கிறீர்கள்? இந்தியாவின் மாபெரும் வியாபார சந்தை வேண்டுமென்றா? உலக நாடுகளே உங்களின் குரல் உரக்க ஒலிக்கும் என நாங்கள் காத்திருக்கிறோம்.

தமிழக தேர்தல் களம்:
இந்திய படையணிகள் மேலும் தாக்குதல் முகம் கொள்ளாது இருந்ததால் காலை ஏழுமணிக்கெல்லாம் மக்கள் வரிசைவரிசையாக வர ஆரம்பித்தனர். கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. மாறனின்
செயல்வீரர்கள் பத்து மணித்துளிகளுக்கு ஒருமுறை தேர்தல் நல்லபடியாக நடக்கும், அனைவரும் வாருங்கள், பயப்படவேண்டாம், தேர்தல் நடக்க ஒத்துழைப்பு கொடுக்குமாறும் அறிவிப்பு செய்துகொண்டே இருந்தனர். 07.30 மணிக்கெல்லாம் வாக்குப்பெட்டி வந்தது, அடுத்த பத்து மணித்துளியில் சின்னங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு மக்கள் சரியாக எட்டு மணிக்கெல்லாம் வாக்களிக்க ஆரம்பித்தனர். அனைத்து வாக்கு பதிவுகூடங்களும் நேரலை செய்யப்பட்டன, பதிவும் செய்யப்பட்டன. ஒரு மணிக்கொருமுறை பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்யப்பட்டன. அனைத்தும் நேரலை செய்யப்பட்டது.
மாலை 5.00 மணி. சராசரியாக 92 விழுக்காடு வாக்குகள் பதிவு
செய்யபட்டிருந்தது, 120 தொகுதிகளில் 100 விழுக்காடு பதிவு செய்யபட்டிருந்தது. வெற்றிமாறன் தேர்தல் அறிவிப்பிற்கு பின் கைது செய்யப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்கமுடியவில்லை. தேர்தல் முடிந்ததும் வாக்குகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்யப்பட்டது, அதன்பின் ஒரு அறிவிப்பில், இந்திய அரசின் உதவிக்கு நன்றி எனவும், வாக்கு எந்திரங்களை வாக்குகள் எண்ணும்வரை தாங்கள் வைத்திருக்க நினைப்பதாகவும், அதற்க்கு இந்திய அரசின் உதவி தேவை எனவும் முறைப்படி கேட்கப்பட்டது, விருப்பமில்லைஎன்றால் வாக்கு எந்திரங்களை உடனே திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டது. இந்திய அரசு எந்த முடிவும் எடுக்காததால் பேட்டிகள் அனைத்தும் இரவு, பகல் நேரலை செய்யப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டது.
நாளை அதிகாலை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது

Friday, May 20, 2011

பறை - 1

கூச்சமில்லாமல் நிறைய தமிழ் வார்த்தைகளை பேசுவோம்

சமீபத்தில் ""ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி"" என்ற தலைப்பில் ஏயக் மொழியை பற்றியும், ஏயக் மொழியை கடைசியாக பேசிய பெண்மணி மேரி ஸ்மித் ஜோன்ஸ் என்றும் நீண்ட கட்டுரை பெரும்பான்மையானோர் படித்திருப்பிபீர்கள். படிக்காதவர்களுக்காக, கீழே இணைத்திருக்கிறேன்.

ஒரு மொழி உயிருடன் வாழ தேவையான சில அம்சங்களில் ஒன்று, குறைந்தது ஒரு லட்சம் பேராவது அம்மொழியை பேசவேண்டும் என்பது. ஆனால், நாம் எப்படி தமிழ் பேசுகிறோம் என்பது பற்றிய விரிவான வாதம் தேவையில்லை. நாம் நாமே நெஞ்சை தொட்டு விவாதித்திக்கொள்ளும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். இதில் சுட்டுவிரல் நீட்டி யாரையும் குறைகூறும் தகுதியை பெற்றுவிட, முயற்சிக்ககூட இல்லை என்பதுதான் கிட்டத்தட்ட உண்மை. ஒரு ஆங்கில வார்த்தை இல்லாமல் நம்மால் பேச இயலுமா என்பது கேலிக்குரிய கேள்விதான். நாம்தான் எழுத்து வடிவில் நல்ல நிலையில் தான் இருக்குறோம் என்று தோள் தட்டிக்கொள்வது, நாம் நம் கண்களை குத்துகொல்வதர்க்கு சமமானதே! எழுத்துவடிவம் ஒரு மொழியை வாழவைக்காது என்பது அதைவிட உண்மை. இன்றைக்கு இறந்தவிட்ட மொழிகளில் ஒன்றாக சமஸ்க்ருதம் இருப்பதற்கு காரணம் அம்மொழியை பேசுவதற்கு யாரும் இல்லை என்பதுதான். மொத்தம் 14,000 பேர்களே சமஸ்க்ருதம் பேசுவோர்கள் இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது, அதுவும் சில மொழி ஆர்வலர்கள் இழுத்துபிடித்து படிக்கவைத்ததன் பொருட்டு, சிலர் பேசுவதாக கணக்கெடுப்பில் இருக்கிறது, உண்மையில் தாய்மொழியாக கொண்டு எவரும் பேசவில்லை என்பதுதான் உண்மை.  அதனால் மொழி எவ்வளவு வளமானதாக இருந்தபோதிலும் பேசுவதற்கு ஆட்கள் இல்லையென்றால், அம்மொழி இறந்துவிட்டதற்க்கு சமமே.

பிற மொழிகளின் பாதிப்பு:
கல்வி, பொருளாதார மேம்பாடு, வாழ்க்கைத்தரம் போன்ற சூழல்களும் மொழியை, அதன் வார்த்தைகளை பாதிக்கும் அம்சங்களில் ஒன்று. ஒரு தொலைபேசி எண்னை பிறருக்கு சொல்லும்போது பொதுவாகவே நாம் ஆங்கிலத்தில் சொல்வது படித்தவர், படியாதவர் என்ற பேதமில்லாமல் பாதித்த ஒன்று. சில சொற்களை தமிழில் சொல்வதை தரக்குறைவாக நினைப்பது மேலும் அந்த வார்த்தைகளை மறையச்செய்கிறது, எ.காட்டாக, ஒன்னுக்கு போய்விட்டுவருகிறேன், வெளியே போய்விட்டுவருகிறேன் என்பது சிறுநீர் கழிப்பதையும், மலம் இருந்துவிட்டுவருவதையும் இலைமறை காயாக கூறுவது இயல்பாக இருந்துவந்தது, ஆனால் இன்றைக்கு அசிங்கமாக பிள்ளைகள் நினைக்கும் அளவுக்கு போய்விட்டது. உச்சா, கக்கா வார்த்தைகள் கடனாக கிடைப்பதால், நாம் நம் சொத்தை இழந்துவருகிறோம்.

பேருந்து, மகிழுந்து, சரக்குந்து போன்ற வார்த்தைகள் இருந்தாலும், எழுத்துவடிவில் புழங்கினாலும், நாம் இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கவே இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று, மீறி நம்மை போன்ற உணவாளர்கள் பேசினால் சுற்றி உள்ளவர்களின் நகைப்புக்கு ஆளாகிறோம். அது நம்மை கொஞ்சம் முகம் சுளிக்கவைக்கிறது என்பதில் ஐயம் இல்லை. இங்கே என் கெட்டிகாரத்தனத்தை காண்பிக்கவேண்டும் என்பதற்காக இல்லாமல் எடுத்துகொண்டால், சில வார்த்தைகளை விளையாட்டாக பயன்படுத்தும்போது அது அப்படியே பழகிவிடுகிறது, அதனால் நகைப்பும், முகம் சுளிப்பும் இல்லாமல் சில வார்த்தைகள் வழக்கமாகிவிடுகிறது, எ.காட்டாக, வேலை இடங்களில் கணினி, பதிவுக்குச்சி, மேலாளர் போன்ற வார்த்தைகள் இன்றைய நண்பர்கள் அழகாக பயன்படுத்துகிறார்கள் என்றால் பெரும்பான்மையானவர்கள் நம்பமாட்டார்கள். ஒருவர் இரண்டு பேர் என ஆரம்பித்து காலப்போக்கில் அதுவே அழகான வழக்கு மொழியாக மாறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே, அதற்க்கான சூழலை நம் போன்ற மொழி, இன ஆர்வலர்களே ஏற்படுத்தவேண்டும். யாரும் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தும்போது ஏளனம் செய்யாமல் இருந்தாலே நாம் பாதிக்கிணறு தாண்டிவிட்டதாக எடுத்துகொள்ளலாம். அதுதான் சூழலை உருவாக்கவேண்டும் என்பதை சுருக்கமாக சொன்னால்.

எனவே, ஏயக் மொழியை போல் நாமும் அழிந்துவிடாமல் இருக்கவேண்டுமென்றால் ஒரே வழி கூச்சமில்லாமல் நிறைய வார்த்தைகளை பேசுவோம்., பேசுவோர்களை உற்சாகப்படுத்துவோம்.

Thursday, May 19, 2011

அடையாளம் வாரம் - 12

நரோரா , புலந்சாகார் மாவட்டம், உத்திரபிரதேசம்:
புது தில்லியிலிருந்து 141.6 கி.மி., கங்கை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சிறு நகரம். மக்களில் 14% ஆறு வயதிற்கும் கீழிருக்கும் குழந்தைகள். பாவம் செய்துவிட்டு கங்கையில் குளித்தால் தீரும் என்று நம்பும் இந்துக்கள் இங்கேயும் வருவது வழக்கம். சங்க்வேத சமஸ்க்ருத பல்கலைகழகம் கங்கை ஆற்றின் மறுபுறம் உள்ளது. இதெல்லாம் விட சிறப்புவாய்ந்த அம்சம் என்னவென்றால், இந்திய அணுமின் கழகத்திற்கு சொந்தமான அணு உலை மின்சாரம் தயாரிப்பிற்காக நிறுவப்பட்டுள்ளது.
220  மெ.வாட் திறன் கொண்ட இரண்டு உலைகள் இங்குள்ளது. அதைவிட சிறப்பு, அணுமின் தயாரிப்பின் கழிவு நீரும், கங்கையில் தான் கலக்கிறது, யார் செய்த பாவத்தை தீர்ப்பதற்கோ!!.. கங்கையில் கரைத்தாலும் தீராத பாவங்கள் அல்லவா தில்லி அரசு செய்தவைகள்....ஒன்றா இரண்டா கழுவிவிட, எத்தனை லட்சம் மனித உயிர்கள்...... கங்கையை திருப்பி பாரளுமன்றதிற்க்குள் தான் விடவேண்டும்....கங்கையே நின்றுவிடும்., பாவத்திற்கு பயந்து.

என்ன காரணத்திற்காக, இங்கே வந்து (அணுமின்) உலை வைத்தார்கள் தெரியவில்லை. வடிவமைக்கப்பட்ட காலத்தைவிட சுமார் 20 ஆண்டுகள் கடந்தும் இந்திய அரசு இன்னும் உலையை மூடவில்லை. மேற்கு நாடுகள் அணுமின் திட்டங்களை விடுத்து இயற்க்கைக்கு உகந்த மின் தயாரிப்பு அமைப்புகளை நிர்மாணிக்கும் நேரத்தில், இங்கே அணுஉலைகள் முளைத்துக்கொண்டு இருக்கின்றன. ஆம்.. செய்த அணுஉலைகளையும் அதன் உதிரி பாகங்களையும் மேற்குலகம் கடலிலா கரைத்துவிடும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் தானே வாங்கவேண்டும், இல்லை வாங்க வைக்கப்படவேண்டும்!!

காற்றும் தூங்கிக்கொண்டு வீசும் அதிகாலை மூன்று மணி. மீனம் மாதம் முதல் நாளில் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும், மக்கள் பயமின்றி வரிசையில் நிற்க  தொடங்கலாம், வெற்றிமாறன் மீண்டு வருவார், மக்களே வாருங்கள் வரிசையாக, வந்து சொல்லுங்கள் தீர்ப்பை, நாளை வாக்கு தினம் போன்ற வாசகங்கள் தாங்கிய பலகைகள், தட்டிகள், அட்டைகள் அங்கங்கே கிடந்தன. இன்னும் ஐந்து மணி நேரமே மிச்சமிருக்கும், அதிகாலை மூன்று மணி..........

பார ஹோதி: 
முன்னால் உத்திரபிரதேசத்தின் சீன எல்லையோர பகுதி. பெரிதும் காதுகளில் தென்படாத ஒரு ஊர். சீன-இந்திய போர்களிலும், சண்டை மூளும் நேரங்களில் மட்டும் இந்திய அரசு கவனிக்கும் பகுதி. இமயமலையின் கணவாய் போன்ற பகுதி. சீனா இப்பகுதியை வு-ஜே (Wu-Je) என்றழைக்கிறது. இந்தியா திபத்தில் போய் உட்கார்ந்துகொண்டு சேட்டை செய்யலாம் என்றெண்ணி, சீனாவிடம் அடிவாங்கியது இந்தப்பகுதியில்தான். மனிதர்கள் வாழ தகுதியற்ற இந்த பனிப்பாலைக்குத்தான் இரண்டு நாடுகளும் முட்டிக்கொண்டன. குளிர் காலங்களில் படைகளை திரும்பப்பெறுவதும், கும்பம், மீனம் மாதங்களில் மீண்டும் அனுப்புவதும் வழக்கம். எல்லையோர மீறல்களும் அப்போதுதான் நடக்கும். மிகவும் சிரமத்திற்கு இடையில் ஏவுகணைகளை இங்கே எடுத்து செல்வதுண்டு. பினாகா, பல்குழல் எறிகணைகள் வழக்கமாக பயன்படுத்தப்படும்.

"தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை, ஆனால் தமிழனுக்கென்று நாடில்லை", "நாதி இல்லை" என்று நொந்துகொண்டோர்களுக்கு இங்கே இருந்து கிளம்புகிறது அம்பு....புலிக்கொடி ஏந்தி.......இன்னும் ஐந்து மணி நேரமே மிச்சமிருக்கும், அதிகாலை மூன்று மணி.....காற்றும் தூங்கும் நேரம்...நாங்கள் தூங்கவில்லையடா...நாங்கள் நிறைய தூங்கி விட்டோமடா...எத்தனை நூற்றாண்டுகள் தூங்கினோம்....தூங்கியவன் மீதே மிதித்தீர்களே..ஞாபகம்  இருக்கிறதா? எத்தனை மனிதர்களை கொன்றீர்கள்....செத்தவனை கூட கொன்றீர்கள், பிணத்தை பிராண்டினீர்கள், கருவை கொன்றீர்கள்.... தாயின்  முலையை அரிந்தீர்கள்...இதோ எங்கள் அம்பு உங்கள் கைகொண்டு....இதோ இன்னும் பதினைந்து நிமிடங்களில் நரோரா, அணுமின் நிலையத்தில் விழும்....அடுத்து வீழ்வது நீங்கள். இனி நாங்கள் விழோம்! அங்கிருந்த இரு தமிழர்கள் பினாகா, பல்குழல் எறிகணை பொத்தானை அழுத்திவிட்டு ஆர்ப்பரித்தார்கள் "வாழ்க தமிழகம், விடுதலை மண்ணில் சந்திப்போம். அடிமையாய் இனி நான் வாரேன்! அடிமையாய் இனி நான் வாழேன்! எறிபடை 50 கிலொ எடையுள்ள வெடிபொருளை சுமந்துகொண்டு, 400 முதல் 600 கி.மி தூரம் பாயவல்லது. பார ஹோதி லிருந்து சாதாரமாக நரோரா வை அடைய சாத்தியமுடையது.

ஒவ்வொரு அணுமின் நிலையமும் இந்திய அரசின் சிறப்பு படையினரால் பாதுகாக்கப்படுகிறது, அதிலும் சில முக்கிய உலைகள் தடுப்பு ஏவுகனை, எறிகணை வசதி பொருத்தப்பட்டிருக்கும்., மேலும் இவை தனிச்சையாக செயல்படும் அசாத்தியமும் பெற்றது. ஆனால், நரோராவில் தனிச்சையாக செயல்படும் பாதுகாப்பு செய்யப்படவில்லை என்பது குறிப்பு. இவைகளை, பாதுகாப்பு படையினர் ரேடார் கருவிகள் மூலம் கண்காணித்து பின் தடுப்பு எறிகணைகளை எரியூட்டுவார்கள். இங்கேதான், இவர்களது சறுக்கல். வழக்கம்போல், ரேடார் பார்ப்பவன் ஒருவன், படையணியை கட்டுப்படுத்துவது ஒருவனாவே இருப்பார்கள். பார்ப்பவன் பார்த்து செய்பவனிடம் செயல்படுத்த சொல்லவேண்டும்.

அதிகாலை 03. 05. காற்றும் தூங்கும் நேரம்... காற்றை கிளப்பிக்கொண்டு சீறிப்பாய்ந்து வந்துகொண்டிருந்தது ஒரு எறிகணை. இன்னும் பத்து நிமிடங்களில் நரோராவை அடையும். ராடார், மின்காந்த அலைகள் வானில் அனுப்பப்பட்டு, பொருட்களின் மீது படுவதால் பெறப்படும் மீளலைகளை பிரதிபளிபதே, அதே சம அளவுள்ள அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகள் ஒருவழிப்பாதையில் அனுப்பப்பட்டு ராடாரின் மீது பட செய்யும்போது, மீளலைகளை குழும்பிவிட செய்வதும் சாத்தியமே, இது மின்னணு படைக்கருவி எனவும் கூறலாம், இம்முறையில், நரோராவில் வெற்றிமாறனின் ஆட்கள் ராடரை இருட்டடிக்க செய்தனர். இரு அனுஉலைக்கும் இடையில் இருக்கும் போதிய இடைவெளியில் விழும்....

அதிகாலை 03.18. இந்திய தலைமை அமைச்சர், குடியரசுத்தலைவர், தலைமை செயலர் உள்ளிட்ட அனைத்து உயர்மட்ட தலைவர்கள் கூடினார்கள், தலைமைசெயாளர் நரோராவிலிருந்து வந்ததாக ஒரு மின்மடலை அனைவரின் பார்வைக்கும் வைத்தார், அதில் அழகிய தமிழ், ஆங்கிலம், இந்தி என் மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது, "மேதகு இந்திய தலைமை அமைச்சர் அவர்கட்கு வணக்கம், இந்திய மக்களுக்கோ, அரசாங்கத்திற்க்கோ சிரமம் கொடுப்பது எங்கள் திட்டம் இல்லை என்பது, எறிகணை வந்து விழுந்தும் வெடிக்காதது கண்டவுடன் உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறோம், எறிகணை ஏவும் எங்களுக்கு அதில் வெடிகுண்டிட வெகுநேரம் ஆகாது என உங்கள் படையணியினர் சொல்லாமல் இருக்கமாட்டார்கள். எங்கள் நோக்கம், அறிவித்தபடி தேர்தல் எங்கள் தனிதமிழகத்தில் நடக்கவேண்டும் என்பதே அன்றி வேறில்லை. எங்கள் தலைவர் வெற்றிமாறனை சிறையிலிருந்து வெளியிடவேண்டும் என நாங்கள் இரஞ்சவில்லை, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை எங்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு தேவையானதை அறிவுறித்திவிட்டு, வழிநடத்திவிட்டுதான் சென்றிருக்கிறார். அவர் எப்படியும் வெளிவருவார் என்பதை நாங்கள் அறிவோம், அவரை சிறையும், மரணமும் ஒன்றும் செய்யமுடியாது என்பதை நாங்களும், எங்கள் மக்களும் அறிவோம். இந்த வினாடியில் இல்லாமல் இருக்கலாம், அவர் இருந்திருந்தால் ஒரு தலைவர் மட்டுமே, அவர் இல்லாதபோது அத்தனை மக்களும் தலைவரே, எனவே அவர் இல்லாத நேரத்தில் எங்களுக்கு நடந்த சிறு சிறு சறுக்கல்களை கொண்டு எங்கள் இனத்தின் விடுதலை வேட்கையை தராசிடவேண்டாம், அதற்க்கு உங்களிடம் அளவுகோலும் இல்லை, நிறுக்கும் ஆட்களும் இல்லை.

எனவே, தேர்தலை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தும் திட்டம் விடுத்து, தமிழக தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் அத்தனை மின்னணு வாக்கு பெerட்டிகளை அந்தந்த மாவட்ட தலைநகருக்கும், வாக்கு சாவடிகளுக்கும் உடனடியாக கொடுத்தனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்னும் உங்களுக்கு நடந்த நடவடிக்கைகளை நினைத்து செரித்திருக்கமாட்டீர்கள் அல்லது நம்ப மாட்டீர்கள் என எங்களுக்கு நன்றாகவே தெரியும், எனவே இந்த கடிதம் படித்து பத்து நிமிடங்களுக்குள் முப்பத்துரெண்டு லட்சம் சதுர கிலோமீட்டருக்குள் மண்ணிக்கனும், தமிழக பரப்பளவை கழித்துக்கொள்ளவும் எங்கேனும் மற்றுமொரு எறிகணை விழும், மீண்டும் நீங்கள் வாக்குபெட்டிகளை நகர்த்தாமல் வேறு ஏதேனும் காய்நகர்த்த முற்ப்பட்டால் பத்து நிமிடத்திருக்கு ஒரு எறிகணை வீதமாக எங்கேனும் ஓரிடத்தில் விழுந்துகொண்டிருக்கும், இனிமேல் விழுவது பூச்சாண்டியாக இருக்காது, குறைந்ததது ஐம்பது கிலோ எடைகொண்ட வெடிகுண்டை தாங்கி வரவல்லது உங்கள் பினாகா என்பதை நாங்கள் சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை.

நேரம் இப்பொழுது சரியாக 03.38, நான்கு மணியளவில் நீங்கள் வாக்குபெட்டிகளை நகர்தினால்தான் சரியான நேரத்தில் நாங்கள் வாக்குப்பதிவை ஆரம்பிக்கமுடியும். உங்கள் படையணிகள் அங்கே காவலுக்கு நிற்கலாமே தவிர, தேர்தல் கூட்டங்களை நடத்தவிடாமல் செய்தததை போல் ஏதேனும் இடைஞ்சலாக செயல்படக்கூடாது என அறிவுறுத்துகிறோம். சொன்னது போல், 03.48  மணிக்கு மும்பை சட்டசபைமுன் ஒரு எறிகணை விழுந்தது, அதிலும் புலிக்கொடியுடன் ஒரு செய்தி கடிதமே இருந்தது. அந்த செய்தி குண்டைவிட பலமாக வெடித்தது.....................

Monday, May 9, 2011

அடையாளம் வாரம் - 11‏

சரக் சரக் என்ற சத்தத்துடன் வந்த ஒரு மிடுக்கான அலுவலர், மாறனின் கைது செய்யும் ஓலையை நீட்டினார். அந்த சிரிப்பில் எதிரியும் வீழ்வானே...அதே புன்முறுவலுடன் சொன்னார்.. ""ஒரு பதினைந்து நிமிடங்கள் கொடுத்தால், என் வேலையை முடித்துவிடுவேன், அதன் பின் நானே உங்களுடன் வருகிறேன், ஒன்றும் பயப்பட வேண்டாம்"" ஏற இறங்க, சுற்றும் முற்றும் நோக்கியபின் தலை அசைத்தார். ஒலி, ஒளிப்பதிவு தொடர்ந்தது... ""இன்னும் சில நிமிடங்களில் நான் கைது செய்யப்படப்போகிறேன், நான் மீண்டும் உயிருடன் வருவேனா அல்லது விதைக்கபடுவேனா என்பது எனக்கே தெரியாது, அல்லது காலவரை இன்றி ஏதேனும் ஒரு கடுஞ்சிறையில் அடைக்கப்படலாம்... எதுவாக இருந்தாலும்., இது போர்...விதைப்பதும், முளைப்பதும் கண்டு ஆவேசப்படாமல் தொடர்ந்து போராடுவோம்.... இறப்பதும், பிறப்பதும் இயல்பு, இதற்கிடையில் நம் இனத்திற்காக, சிறு விதையையோ, பெரும் போரையோ நான் அல்லது என் செயல்கள் செய்திருக்குமென்றால், மக்களாகிய நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நான் சொல்வதற்கில்லை. இருந்தாலும், பெரும்பாடுபட்டு உருவாக்கிய தனித்தமிழகம் தொடர்ந்து இயங்குவதற்காக, நான் இல்லாத போது யார் யார் எந்த பொறுப்பில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்க்கனவே சொல்லியிருக்கிறோம், எனவே அவர்களுக்கு உங்கள் ஆதரவை எனக்கு கொடுத்தது போல் தர வேண்டுகிறேன். நான் உயிருடன் மீண்டும் சந்தித்தால் தனிதமிழகத்தில் மட்டுமே. நன்றி"" சரியாக பதினான்கு நிமிடத்தில் முடித்துவிட்டு கைது செய்ய பணித்தார். அதே நேரத்தில் கக்கன், தீலீபன், குமரன் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கும்பம் மாதம் பிறந்த தனித்தமிழகம், பிறந்து ஒரு சில வாரங்களிலேயே தன் தலைவனை சிறைக்கு தள்ளியது. மீனம் முதல் நாளில் தேர்தலை நடத்தி வெற்றிபெற்றுவிட்டால், ஐ.நா. வையும் உலக நாடுகளையும் ஒத்துகொள்ளவைப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது என்று நன்பிக்கை கொண்ட மாறன், சிறையிலிடப்பட்டார். இதுவும் எதிர்பார்த்ததுவே. அனைத்து கட்டுபாடுகளையும் சில மணி நேரங்களுக்குள் விக்ரம் சிங் கைக்குள் கொண்டுவந்தான்.

பெங்களூர்:
மிகவும் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமண கூடத்தில் கூட்டம் நடந்தது. அரிமாவேந்தன் (தேர்தல் ஒருங்கிணைப்பாளர்) தலைமையில், தமிழ்ச்செல்வன் (தற்காலிக தலைவர்) முன்னிலையில், பால். புகழேந்தி (மூத்த கட்டளை தளபதி-பொறுப்பு), நடேசன் செல்வா (கட்டளை தளபதி-பொறுப்பு) ஆகியோர்கள் இருக்க காலை எட்டு மணிக்கே தொடங்கியது அந்த மிக முக்கிய கூட்டம். மேலும் நானூறு தலைகள் காணப்பட்டன. அனைவர் கையிலும் மடிக்கனினி, முதலில் அரிமா பேசினார். ""வணக்கம், மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் இப்பொழுது இருக்கிறோம் என்பது நாம் அனைவரும் தெரிந்த உண்மை, எனினும் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வரங்களே இருக்கும் இவ்வேளையில், இரண்டு செயல் திட்டங்கள் குறித்து நான் பேச இருக்கிறேன் . முதலில், மாறன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடர் பேரணி, தினமும் எல்லா இடங்களிலும் நடக்கவேண்டும், அதைவிட முக்கியம் தேர்தல் ஏற்பாடுகள். முதல் பொறுப்பு நடேசன் தலைமையில் நடக்கும், இரண்டாம் பொறுப்பு புகழேந்தி தலைமையில் நடக்கும், இருவரும் தங்கள் செயல் திட்டங்களை இப்பொழுது விளக்குவார்கள்.

நடேசன் செல்வா:
இந்திய படைகள் குழுமியிருக்கும் இத்தருணத்தில் பேரணி நடத்துவது சிரமமாக இருந்தாலும், என் திட்டம் இதுதான்.
1. முதலில் மாறனின் பேச்சை அனைத்து இடங்களிலும் காண்பிப்பது, இதனால் பொதுமக்கள் சிலர் கூட்டத்திற்கு வர வாய்ப்புண்டு.
2.  கல்லூரிகள், பள்ளி மாணவர்களிடம் அவரவர் மாணவர் தலைவர்களிடம் பேசி பேரணிக்கு வரவழைப்பது, இதன் முடிவை நன்றாக இருக்கும் என நண்பிக்கையாக இருக்கிறேன். எனக்கு தெரிந்து அனைத்து மாணவர்களும் வருவார்கள். நமக்கு எப்பொழுதும் மாணவர்கள் செல்வாக்கு உண்டு. மாணவர்கள் பெரும் தொகையாக வந்தால், அவர்களை பின் தொடர்ந்து பொதுமக்கள் நிறைய பேர் வருவார்கள் என்பதும் நம் கணிப்பு.
3. அனைத்து பேரணிகளும் நேரலை மூலமாக இணையத்திற்கு அனுப்பப்படும், நம் தொலைகாட்சி, துணைக்கோள்கள் அனைத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துகொள்ளப்பட்டதால், நாம் இணைத்தை மட்டுமே நம்பி உள்ளோம்.
துணைக்கேள்வி: இணையமும் துண்டிக்கப்பட்டால் என்ன செய்யப்போகிறீர்கள்?
பதில்: இணையம் துண்டிக்கும் சாத்தியம் மிகவும் குறைவு, ஏனென்றால் ஏதேனும் ஒரு ஐ.பேட் இருந்தாலே போதும்.

பால். புகழேந்தி:
தேர்தல் ஏற்பாடுகள் சாத்தியமே. ஒன்றும் குழப்பம் வராது. யாரும் பீதி அடையவேண்டாம். முதலில் தேர்தல் மீனம் முதல் தேதி என்பது அனைவருக்கும் சென்றடையவேண்டும்.இதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்று நம்புகிறேன். தேர்தல் பாதுகாப்பாக நடக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். எப்படி பாதுகாப்பை உறுதி செய்யப்போகிறோம் என்பதுபற்றி நான் இங்கே முழுமையாக சொல்லமுடியாது. அதற்காக பணிக்கப்பட்ட நபர்களிடமும், தமிழ்ச்செல்வனிடமும் அதற்க்கான வரைவு சமர்பிக்கப்பட்டு, அனுமதியும் வாங்கப்பட்டுவிட்டது. எனவே,
1 . தேர்தல் தேதி மக்களிடம் சென்றடையவேண்டும்
2 . வாக்குப்பெட்டி கையில் கிடைத்ததும், ஒரு மணி நேரத்திற்குள் சின்னங்கள் உள்செலுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும். அதற்க்கான பொறியாளர்களை தேர்வுசெய்யும் பனி முடுக்கிவிடப்பட்டுவிட்டது.
துணைக்கேள்வி: பொறியாளர்கள் தவறு செய்யும் பட்சத்தில் மொத்தம் தவராகிவிடக்கூடும், எப்படி இதை உறுதி செய்யப்போகிறீர்கள்?
பதில்: நன்று. இதற்கான மென்பொருள் பதிவுக்குசியில் இறக்கப்பட்டு பத்துநிமிடங்களில் செயல்படதொடங்கிவிடும். எனவே மிகப்பெரிய தொழில்நுட்பவாதிகள் தேவை இல்லை.

Saturday, April 23, 2011

அடையாளம் வாரம் - 10‏

தேர்தல் அறிவிப்பு:
தலைவர் வெற்றிமாறனின் அறிவுறுத்தலுக்கிணங்க, கட்சியின் தகவல் செயலாளராகிய நான், குமரன் வாசிக்கும் முறைப்படியான தேர்தல் அறிவிப்பு.

வருகின்ற மீனம் மாதம் முதல் நாள் தனி தமிழகத்தின் முதல் தேர்தல் நடைபெறும். நாம் இதுவரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து இந்திய கட்சிகளுக்கு வாக்களித்துக்கொண்டிருந்தோம், நாமும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்து, தமிழக மாநிலத்தின் தலைவராக வெற்றிமாறன் இருந்து வந்தார்கள். இனி அதற்க்கு அவசியம் இல்லாததால், நாம் நமக்கென்று ஒரு கட்சியை உருவாக்கியுள்ளோம். தமிழ் குடியரசு கட்சி என்ற பெயருடன், புலி சின்னத்துடன், சிவப்பு வண்ணத்தில் நடுவில் சீரிய புலியுடன் கொடியை கொண்டு இருக்கும். நமது கட்சி மட்டுமல்லாது, மக்களாட்சி தத்துவத்தில் இயங்கும் அனைவரும் தேர்ததில் கலந்துகொள்ள வரவேற்க்கப்படுகிறார்கள். இது முதல் தேர்தல் என்பதால், சில இந்திய கட்சிகள் களத்தில் நிற்க விரும்பும் வேளையில், அவர்களும் தேர்தலில் நிற்க அனுமதிக்க படுவார்கள். தேர்தல் தமிழ் குடியரசு கட்சியை காட்டிலும் இருபது விகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பெரும் நிலையில், இந்திய கட்சிகள் அடுத்த தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப்படுவார்கள். ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் நாள் வாக்கு தினமாக இருக்கும். தேர்தல் ஒருங்கிணைப்பாளராக அரிமாவேந்தன் இருப்பார், தேர்தல் முறைப்படி, நேர்மையான முறையில், மக்களாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில் நடைபெறுவதை உறுதி செய்வதன் பொருட்டு ஐ.நா. சபையின் உறுப்பினர் ஒருவரின்மேற்பார்வையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், ஐ.நா. சபை உறுப்பினர்கள் வர விருப்பமில்லாத பட்சத்தில், நோர்வே, சுவீடன், சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து சமூக ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களது மேற்ப்பார்வையில் நேர்மையான தேர்தல் நடத்த ஏற்ப்பாடு செய்யப்படும். சில அவசியமான கட்டுபாடுகள் தமிழக தேர்தலில் கடைபிடிக்கப்பட வேண்டும். அவற்றில் சில இங்கே வாசிக்கிறேன், முழுமையான விவரங்கள் தேர்தல் ஆணையத்திடமிருந்து வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

1. கூட்டணி கட்சிகள், தேர்தலுக்கு பின்பும் அதே கூட்டணியில் நிலைக்கவேண்டும்.
2. இலவச அறிப்பிவிப்புகள் தடை செய்யப்படுகின்றன
3. வேட்பாளர்கள், தலைவர்கள், கட்சிகள் தத்தம் சொத்து விபரங்களை தெரிவிக்கவேண்டும். விபரங்கள் தவறாக இருப்பின், நிரூபிக்கபட்டால் மீண்டும் தேர்தலில்
    நிற்கமுடியாது.
4. சுவரொட்டிகள், படவெட்டுகள், கூப்பாடுகள் தடைசெய்யப்படும். 
ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தேர்தல் கூட்டங்கள் நடத்தவேண்டும்.

இந்தியாவும், இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தலை தவிர்க்கும் பட்சத்தில், தனித்தமிழகதிற்கு புலிச்சின்னமும் இந்திய ஆதரவு கட்சிகளுக்காக இந்திய அரசின் சின்னமாக அசோக சின்னமும் வாக்கு இயந்திரத்தில் பொறிக்கபட்டிருக்கும். இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விரும்புபவர்கள் அசோக சின்னத்திற்கு வாக்களிக்கலாம். வாக்குகள் கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு அனைத்து நாடுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் அனுப்பிவைக்கப்படும். நாளை  வெற்றிமாறன் அவர்கள் தொலைக்கட்சியில் உரைநிகழ்த்துவார்கள், இதில் அரசின் நோக்கங்களும், கோட்பாடுகளும், அடங்கும்.

மாறன் வீடு:புற்களும், பூக்களும் கூட ஆழ்ந்து தூங்கும் இரவு மணி மூன்று. ஒரு காவலர் அவசரமணி பொத்தானை அழுத்தினார், அனைவரும் துப்பாக்கியை நேர்முனைபடுத்தி விறைத்து  நின்றனர். இந்தியபடையனியினர் சூழ்ந்தனர்...ஒரே ஒரு காவலதிகாரி பேசினார் "என்ன வேண்டும்? ஏன் இந்த நேரத்தில் உங்கள் முயற்சி? காலையில் பேசலாம், இந்திய படையணியினர் எதையும் கேட்கவில்லை, உட்புக முனைந்தனர்.... கொஞ்சம் பொறுக்கவும் நாங்களே கூப்பிடுகிறோம். ஒரு அதிகாரி கூப்பிட்ட அடுத்த பத்து மணித்துளியில் வந்தார் மாறன். கிட்டத்தட்ட இதே நிலைதான் திலீபன், கக்கன், குமரன் மற்றும் உயர் மட்ட தலைவர்கள் அனைவரின் வீட்டிலும். காவலர்களின் எந்தவித எதிர்ப்பையும் சந்திக்காமல், இந்திய படையணியினர் கைது ஏற்பாட்டை முடித்தனர்.
மாறன் கொண்டுசெல்லப்ப்படும்போது, வாகனம் சட்டென்று நின்றது, ஒரு அதிகாரி வந்து, மாறனின் முகத்தில் பளேரென்று அறைந்தார், "யார் நீ" முகத்தை கிள்ளி திரை கிளிக்கப்பட்டது, எங்கே மாறன்? வந்தவன் வாய் திறக்கவில்லை. திலீபன், கக்கன், குமரன் மூவரும் ஆள்மாறாட்டம் செய்திருந்தனர்.

காலை அவசர கூட்டம்:
திலீபனும், கக்கனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர கூட்டத்தில் யாருக்கும் தெரியாத சிலரும் கலந்து கொண்டனர். இன்னும் ஆறு மணி நேரம் நாம் அவசர நிலையை சமாளிக்கலாம். அதன்பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கூட்டமே இது. கூட்டத்தில் சில திட்டங்கள் பற்றி பேசினார். கூட்டத்தில் 800 பேர் இருந்தனர். இவர்களில் தமிழகம் அதிகம் பார்க்காத அழகிய, சிரித்த முகத்துடன் ஒருவர் அடிக்கடி பேசினார், அவர் பெயர் தமிழ்ச்செல்வன் என்றும், மாறன், திலீபன், கக்கன் இல்லாத போது அல்லது கைது செய்யபட்டால் கட்சியின் தற்காலிக தலைவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்ச்செல்வன், வயது 52, படித்தது சேதமுறா சோதனை துறையில், பட்டமேற்படிப்பு, அணு ஆராய்ச்சியில் முனைவர் பட்டம், கட்சியில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாதவர், முப்பது நாடுகளில் பெரிய பொறுப்புகளில் வேலைசெய்த அனுபவசாலி, ஆங்கிலம், ரஷ்ய மொழி, பிரஞ்சு மொழி நன்றாக பேசக்கூடியவர். மேடை பேச்சில் அவ்வளவு திறம் இல்லாவிட்டாலும், ஆலோசனை கூட்டம், மாநாடு, கலந்துரையாடல் போன்றவற்றை வழிநடத்தும் திறமை பெற்றவர். எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் சிரித்துக்கொண்டே சமாளிக்கும் பக்குவம் கொண்டவர், 
தமிழக அரசின் பொறியியல் கல்வி ஆணையகத்தில், திட்ட மேம்பாட்டு பிரிவில் தலைவராக வேலை செய்துகொண்டிருக்கிறார். பொறியியல் துறை மறுசீரைமைப்பு கொள்கை வகுப்பாளராக மாறனுக்கு துணை புரிபவர். இப்பொழுது அணுமின் கொள்கை மற்றும் பாதுகாப்பு பற்றி தீவிரமாக ஆய்வு செய்து மாறனுக்கு அறிக்கை செய்ய இருக்கும் வேளையில் தான், இப்பொழுது புதிய பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது.
அடுத்து பால்.புகழேந்தி. கல்வித்துறையில் இருப்போர் மட்டும் தெரிந்த முகம். அனைத்து பல்கலைகழகங்களின் வேந்தர், அண்ணா பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப்பபிரிவின் ஆலோசகர். வயது 44. கட்டுமான துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் கட்டுமானத்துறை - இரும்பியல் துறையில் முனைவர் பட்டம், ஆழிப்பேரலையை தாங்கு திறன் கொண்ட எக்கிரும்புகள், நிலநடுக்கம் தாங்கும் திறன்கொண்ட கட்டுமானங்கள் போன்றவை இவர் ஆராய்ச்சியினால் சொல்லிகொள்ளதக்கது, மாறனுக்கு கட்டுமானத்துறையில் செய்யவேண்டிய சீரமைப்புகளை இவர்தான் ஆலோசனை வழங்குவார். திலீபன் கைது செய்யப்பட்டால் அவரது பொறுப்பை தற்காலிகமாக எடுத்துக்கொள்வார். தற்காலிக கட்டளை தளபதி (நிர்வாகம், சட்டம், தேர்தல், கூட்டங்கள், காவல் துறை மற்றும் சில).

நடேசன் செல்வா. வயது 38. பொருளாதார நிர்வாகம் துறையில் பட்ட மேல்படிப்பு. பொருளாதார அடிக்கட்டமைப்புகள், உள்நாட்டு பொருளாதாரம், விவசாய பொருளாதாரம், வெளிநாட்டு முதலீடுகள் போன்றவற்றில் மாறனுக்கு உதவி செய்தவர். புதிய அரசின் பொருளாதார கொள்கை வகுக்கும் செயல் திட்டத்தை  அமுலாக்கும் தொட்டு அனைத்து அறிக்கைகள், திட்டங்கள் தயாராக வைத்திருப்பவர். இளங்கன்று, கொதிக்கும் ரத்தம் கொண்டவர், கக்கன் கைது செய்யும் பட்சத்தில், நடேசன் செல்வா., அவரது கட்டளை பணிகளை தொடர்வார்.

தொலைக்காட்சி நிலையம்:
மாறன் தன தேர்தல் அறிக்கையை பதிவு செய்துகொண்டிருந்தனர். இந்திய படையணியினர் நுழைந்து கொண்டிருந்தனர்....

தொடர்வோம்...

Sunday, April 10, 2011

அடையாளம் வாரம் - 9

அன்புடன் வெற்றிமாறன்,
மீண்டும் மீண்டும் பெயரை உச்சரித்து பார்த்துக்கொண்டாள்..கொஞ்சம் ஆசையாய் இருந்தது....பெயரை சொல்லிப்பார்க்க, பார்க்காமலே இருந்திருக்கலாம்..ஏன் பார்த்தோம் என்றிருந்தது. அப்பாட எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டனவே!!! அந்த கடிதம் இல்லை அந்த கவிதை...""என் பார்வைகளை முடியாவிட்டாலும் தவிர்த்துக்கொள்கிறேன்""""" தவிர்த்துவிட்டேன் என நினைத்துகொண்டாயடா  இன்றும்..பாவி... அதனால்தான் நாம் சேர்ந்திருந்தால் எப்படி இருப்போமோ அதைவிட தனித்தனியாக நன்றாக இருக்கிறோம் என உள்வார்த்தை கொண்டு பேசினாயா... அழுதாள்...புலம்பினாள். அந்த மனுசனுக்கும் பால் ஊத்தியாச்சு நேத்தே..அவரும் சொல்லாமலே செத்துபோனாரா? யாருடா சொல்வா? என ஆதங்கத்தை... நானே சொல்லி உன்னை அழவைக்கவும் மனசில்ல... அத நினைக்ககூட முடியல மாறா!! நா அழுதா நீ தாங்குவியாடா? தவிச்சுபோயிருவ...உனக்கு தெரியாமலே என மனசு  மண்ணுக்குள் போகட்டும் அந்த பெரியமனுசன்கூடவே... அந்த ஆளை இந்த ஊரே கொண்டாடுது!! என்கூட அரைமணிநேரம் பேசினே.. இப்ப வந்து பேசு பாக்கலாம்....குழிக்குள்ள அமுக்கியாச்சு ஒன்ன.. நீ எப்படி பேசுவ..

தூற்றினாள் தாமரைக்கண்ணனை... இவள் ஒருவள் மட்டுமே தூற்றினாள் தன காதலை கருக்கிவிட்டதாக நினைத்து. ஆனால், அன்று மாறன் காதல் பின் போயிருந்தால் ஒரு இனமே பல நூற்றாண்டுகளுக்கு பின்னல்லவா இருந்திருக்கும். தமிழில் தலைவன் என்று எழுத ஆளில்லாமல் அல்லவா போயிருக்கும். காதலும், மனைவியும், பிள்ளைகளும் என்று இருந்திருந்தால் ஒரு தலைமுறை மட்டுமே என்று போயிருக்கும். இன்று எத்தனை பிள்ளைகள், எத்தனை மனைவிகள், எத்தனை காதல்கள் வாழப்போகின்றன. இதுவல்லவா வாழ்க்கை. இதற்காக படைக்கப்பட்டவன், பிறந்தவன் இவனல்லவா. நல்லதோர் வீணை செய்தே நலங்கெடபுழுதியில் எறிவதுண்டோ - பாரதி கோவித்துக்கொள்வானடி பதரே என்றிருப்பார் தாமரைக்கண்ணன் இருந்திருந்தால்.

சென்னை:
வீறுகொண்டு கத்தினான் விக்ரம் சிங். சாலே...சாம்பார்வாலா!! உதயகுமார். இனிமேல் பேசி பயனில்லை. அதிரடியாக ஏதாவது செய்யவேண்டும். உடனே தொலைபேசினான். டில்லி ஒத்துக்கொண்டது. படையணி தளபதி கார்த்திகேயன் நாயரை பணித்தான். இளித்த நாயருக்கு சாயா கொடுத்தது போல் உலார்ந்த ஆனந்தம்.. இதற்க்காகத்தானே காத்திருந்தேன் என்பதுபோல் ஓடோடி வந்தார். எனக்கு அதிரடியா ஏதாவது செய்யனும்... சாம்பார்க்காரன் பாக்கணும். குள்ளநரி வேலை என்றாலே மலையாளிகளுக்கு பல்த்தெரியும்...அதிலும் தமிழனுக்கு எதிரா என்றால் சொல்லவா வேண்டும். ஒரு யோசனை சொன்னான். சுமார் ஒரு கோடிக்கும் மேல் பள்ளிகளிலும், மண்டபங்களிலும் அடைத்துவைத்திருக்கும் மலையாளிகள், தெலுங்கர்கள், வடவர்கள் பற்றி நீங்கள் யோசிக்கவே இல்லை. அவர்களில் பெரும்பாலும் பெரிய! மனிதர்கள்.. எல்லாம் வியாபாரிகள், தொழிலதிபர்கள். எனவே அவர்களை மீட்க அதிரடியாக செல்வோம். அப்பத்தான் மாறனின் அடுத்த நடவடிக்கை தெரியும்.

முதலில் 300 இடங்களை தெரிவு செய்தார்கள். அம்முன்னூறு இடங்களிலும் ஒரே நேரத்தில் சென்று பெருந்த்தாக்குதல் மூலம் பிணைக்கைதிகளை விடுவிப்பது. ரமேஷ் ராவ் காவல் துறை அதிகாரி தலைமையில் திட்டம் தீட்டப்பட்டது. ஆங்காங்கே நிலைகொண்டிருக்கும் படையணிகளை அப்படியே பயன்படுத்திகொள்வது - இதுதான் திட்டம். தகவல்,  நிலைகளுக்கு காதும் காதும் வைத்தாற்போல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 3 .30  மணிக்கெல்லாம் படையணிகள் பூனைபோல் சத்தமில்லாமல் சென்றது, படையணிகள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உட்புகுந்தார்கள்... புகுந்ததும் அறிவித்தார்கள்..."நாங்கள் இந்திய படையினர், உங்களை விடுவிக்க வந்துள்ளோம், யாரும் பயப்பட வேண்டாம்""" யாரங்கே மாறனின் காவல் துறை ஆட்கள்... சொல்லிமுடித்த அடுத்த வினாடி ஆட்களுக்குள் ஆட்களாக நிலைகொண்டிருக்கும் காவல் துறை படைகள், துப்பாக்கி விரித்தன... யாரும் சத்தம் போடவேண்டாம்.... நாங்கள் மாறனின் படையணிகள்.... பிணைக்கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்தனர். வணக்கம் இந்திய படையணியினரே.. உங்கள் துப்பாகிகளை கீழே போடுங்கள்... அனைத்து படையணியினரும் பினைபிடிக்கப்பட்டு, துப்பாக்கிகள் கையகபடுத்தப்பட்டன. கிட்டத்தட்ட முன்னூறு இடங்களிலும் இதே கதிதான். சுமார் பத்தாயிரம் வீரர்கள் பினைபிடிக்கப்பட்டனர், நூறு உலங்கூர்திகள், பல ஆயிரக்கணக்கான நவீனரக துப்பாக்கிகள், எரிபடைகள், படைஊர்திகள் கையகப்படுத்தபட்டன. சிறப்பு செய்தியாக, பத்து படைத்தளபதிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

தஞ்சை மாநகரம்:
இவை அனைத்தும் காலை பத்துமணி அளவில் முடிந்துவிட்டது. மூத்த கட்டளை தளபதி தீலிபன் அவசர செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்திய கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் சிங் அவர்கட்கு, மீண்டும் மீண்டும் ஏதாவது ஒன்றை தப்பும் தவறுமாக செய்து உங்கள் அதீத புத்திசாலிதனத்தை நிரூபிக்கவேண்டாம். வெற்றிமாறனின் அறிவுறுத்தலுக்கிணங்க பினைபிடிக்கபட்ட மக்களில் பெரும்பான்மையானோர் விடுவிக்கப்படுவர். மேலும் சந்தேகப்பட்டியலில் இருக்கும் சில தொழிலதிபர்கள், இந்திய அரசு அதிகாரிகள், உளவுத்துறை அலுவலர்கள், வட்டிக்கடை நடத்தும் சேட்டுக்கள், பொதுமக்களுக்கு ஊருவிளைவிக்ககூடிய சில குண்டர்கள் என பட்டியல் போடப்பட்டவர்கள் மட்டும் தமிழக அரசின் மேற்ப்பார்வையில் கண்காணிக்கப்படுவார்கள் அல்லது கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இது பற்றிய நீண்ட செயலறிக்கையை மாறனின் தகவல் செயலாளர் குமரன் படிப்பார்.

வணக்கம். மாண்புமிகு தலைவர் வெற்றிமாறனின் அறிவுறுத்தலின் படி, இந்த செய்தி வாசிக்கபடுகிறது.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
அனைத்து விவசாய நிலங்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும், அதன் விலையை இருதரப்பு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம். "யார் தமிழர்கள்" என்ற கேள்வி எழும் நிலையில் அவரவர் குலம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இடத்தின் தாய்ப்பத்திரம் முக்கிய ஆதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்படும். இதுபற்றிய புரிந்துணர்வு அறிக்கையை கூடிய விரைவில் அரசு சமர்ப்பிக்கும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தமிழகத்தின் அடிப்படை ஆதார வளங்கள் (நீர், நிலக்கரி, சுன்னாம்புத்தாது, பெட்ரொலியம் போன்ற) சார்ந்த தொழில்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும், மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம். இதில் வங்கிகள் அடங்கும்.

அனைத்து பொதுத்துறை/இந்திய அரசு நிறுவனங்கள் தமிழக அரசிற்கு சொந்தமாகும். இதில் அணு/நீர்/அதிவெப்ப மின் நிலையங்களும் அடங்கும். இது பற்றி பேச இந்திய அரசின் ஆணையர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு ஒன்று விடப்படும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு கீழ்: அனைத்து நிறுவங்களிலும் தமிழக அரசு குறைந்தது ஐம்பது பங்குகளை வைத்திருக்கு விரும்புகிறது. மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு மேல்: அனைத்து நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதற்கு தமிழக அரசு விரும்புகிறது. குறைந்தது முப்பது பங்குகளை அரசு கொள்வளவு செய்ய விரும்புகிறது. தலைமை நிர்வாக அதிகாரிகள் திரு. திலீபனை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
அரை ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் மணை நிலங்கள், தரிசு நிலங்கள் அனைத்தையும் தமிழக அரசு கையகப்படுத்தும். மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம்.


இவை அனைத்தும் புதிய அரசின் பொருளாதார கொள்கையின் அடிப்படையில் வகுத்த முடிவுகளாகும். இதன் தொடர்ச்சி நேரம்/நிலைமை இரண்டும் கருத்தில் கொண்டு அவ்வப்போது அரசின் கொள்கைகள் வெளிவரும். அயலார் இந்த மண்ணை விட்டு துரத்தி அடிக்கபடுவார்கள் என்ற பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை. இங்கே அனைவரும் வாழ வழிவகுக்கப்படும், ஆனால் யாரும் எங்கள் மண்ணை கொள்ளைகொண்டு போக அனுமதிக்கமாட்டோம். இந்த கொள்கைகளை இனப்பாடு பார்க்கும் அரசு/தாலிபான் போன்ற அரசு/அனைத்துலக நாடுகளுக்கு எதிரான அரசு என வர்ணித்து உலக நாடுகளிருந்து தனிமைப்படுத்த இந்தியா முயலும்/முயன்றும் வருகிறது. இது மலேசியா, சிங்கப்பூர், ரஷ்ய குடியரசு, வளைகுடா நாடுகள், புருனே, போன்ற நாடுகளில் இருப்பது போல் ""மண்ணின் மைந்தர்கள்" கொள்கை வடிவிலிருக்கும், எனவே நாங்கள் அனைத்துலக நாடுகளுக்கு எதிரான அரசு அல்ல என கூறி, இதுபற்றி இறுதியான அறிக்கை தனிதமிழகத்தின் முதல் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும். இதன் அடிப்படையிலே நாடு இயங்கும். எங்கள் கொள்கை வகுப்பாளர்கள் தேர்தல் முடிந்தவுடன் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்தது முறைப்படி எங்கள் கொள்கைகளையும், சிக்கல்களையும் வெளிப்படுத்துவோம். அதன்மூலம், அனைத்துலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறுவோம். தேர்தல் அறிவிப்பு முறைப்படி அடுத்தவாரம் வெளியிடப்படும்.

தொடர்வோம்....

Tuesday, April 5, 2011

அடையாளம் வாரம் - 8‏

அய்யம்பாளையம் பேரூராட்சி:
தாமரைக்கண்ணன் பறையர் குலத்தை சேர்ந்தவர். அப்பா கனகசுப்புரத்தினம்,  தமிழக காவல்த்துறையில் கண்ணியமாக வேலைசெய்த தொப்பை இல்லாத அலுவலர், பணிமுடியும் தருவாயில் மாவட்ட கண்காணிப்பாளராக வேலை செய்தவர், வேலை செய்த மாவட்டம் திண்டுக்கல். அய்யம்பாளயத்திலிருந்து ஒருமணி நேரபயனம்தான். அப்பா தனித்தமிழக கோட்பாடுகள் மீது நன்பிக்கை கொண்டவர். அவருடன் வேலை செய்த நண்பர் சாலமன் ஆரோக்கியசாமி, நெல்லைக்கருகில் முக்கூடல் பேரூராட்சியில் பிறந்து வளர்ந்தவர். சாலமன் ஆரோக்கியசாமி குடும்ப நண்பர். அவர்தான் கனகசுப்புரதினத்திற்கு தமிழ் தேசியம் சொல்லிக்கொடுத்தவர். சாலமன் ஆரோக்கியசாமியின் மகன் சாலமன் மாணிக்கம், தாமரைக்கன்னனின் நெருங்கிய நண்பரானவர், அவரும் சாகும் வரை தமிழக தனிநாடு குறித்து பல கட்டுரைகள் எழுதியவர். இவர் வெற்றிமாறனின் தாத்தாவுடன் படித்தவர். இதுவரை சங்கிலிப்பினைப்புகள் போதுமென நினைக்கிறேன். இந்த பிணைப்புகளை பற்றி மற்றுமொரு தனி ஒரு பதிப்பில் பார்க்கலாம். இந்த பிணைப்புகளை நீட்டிசென்று பார்த்தோமானால், பொன்னம்பலம், தோமையர், மை.பா, அரிமாவளவன் மற்றும் அறிஞர் குணா வரை நீள்கிறது. அய்யம்பாளையம் ஒரு நல்லாசிரியரை இழந்த ஊர். அரசியலில் தீவிரமாக இறங்கியபின் இப்பொழுதுதான் வெற்றிமாறன் இரவை இங்கு கழிக்கிறார், இந்தபுன்னிய மண்ணில். தான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அம்மாவும், அப்பாவும் தன்னை தாமரைக்கன்னனுக்கும், தமிழகத்திற்கும் தத்து கொடுத்துவிட்டு பழநியிலிருக்கும் நூர்ப்பாலையை கவனிக்க சென்றபின் வாடிப்பட்டி தாண்டி வந்து வாழ்ந்த ஊர். வாடிபட்டியிலிருந்து சில மைல்கள் தான் என்பதால் தன் மண்ணை விட்டுவிட்டு வந்தோம் என்ற நினைப்பே இல்லாமல் போனது மாறனுக்கு. தன் கண்கள் பார்த்து மூலையில் பதிவு செய்தவை அய்யம்பாளையம், மருதாநதி மற்றும் சுற்றியிருக்கும் மலைகளும், மலை சார்ந்த தென்னந்தோப்புகளும், பச்சை வெளிகளும்.

இந்த மண்ணில் காதல் பிறப்பது ஒன்றும் ஆச்சர்யமானது அல்ல.இந்த ஊரில் வாழ்ந்துவிட்டு காதலிக்காமல் போனால்தான் குற்றம். கவிதை எழுதுவதற்காக நதி ஒன்று தவழ்கிறது என்றால் அது மருதாநதியாகத்தான் இருக்கவேண்டும். இடுக்கில் ஓடும் நீரோடை, வெள்ளைப்பூக்கள் போல நீரலை, காலிடுக்கில் கடிக்கும் குட்டி குட்டி மீன்கள், வார்த்தைகளாக அள்ளித்தரும் துள்ளல் ஓசைகள். இந்த ஆற்றங்கரைதான் மாறனுக்கு கவிதை எழுத சொல்லிக்கொடுத்தது.

அய்யம்பாளயத்தின் தென்கோடியில் இருப்பது குட்டிகரடு. சத்தமில்லாத குட்டிமலை, மருதாநதியின் வாய்க்கால் அதனருகில் ஓடியதற்கு சான்றாக கோடு போட்டாற்போல் ஒரு தடமிருக்கும் இன்றும். குட்டிகரட்டிலிருந்து பார்த்தால் தெரியும் மூன்றாம் வீடுதான், தாமரைக்கண்ணனின் வீடு. யாரவது ஒருவர் அங்கே ஏதாவது ஒரு பாடம் கற்றுகொண்டிருப்பார்கள் எப்பொழுதும், அது அரசியலோ, தமிழோ, அல்லது தமிழரின் வரலாறோ. வீட்டின் முதல்மாடம் பெரியது, அங்கே பிள்ளைகள் படிப்பது வழக்கம். வீட்டின் முற்றம் அதன்பின் அழகிய தோட்டம், அங்கே சிலருக்கு மட்டும் அனுமதி உண்டு. அதில் முதலாமாவன் வெற்றிமாறன். வகுப்பு முடிந்ததும் வெண்ணிலாவுடன் பேசுவதும் அங்கேதான். தோட்டத்தின் தென்கிழக்கு மூலையில் ஒரு கொய்யா மரமுண்டு, இப்பொழுது....அங்கே உட்கார்ந்திருந்தார் மாறன். "கொஞ்ச நேரம் பேசணும்" பதினைந்து வருடமிருக்கும் அந்த குரலை கேட்டு "நல்ல இருக்கியா வெண்ணிலா?" இருக்கேன்... நீ?... நீங்கள்? தடுமாறினாள். ரெம்ப பிரச்சினையா இருக்குன்னு கேள்விபட்டேன்... எங்க வீட்ல சொன்னாக! பாத்து இரு மாறா..அந்தப்பிள்ள எப்பிடி இருக்கு?நல்லா.. வச்சிகிறையா? எல்லோரும் நல்லா இருக்கோம்... நம் ரெண்டுபேருக்கும் திருமணம் நடந்திருந்தா எப்படி இருப்போமோ தெரியல? ஆனா, இப்ப ரெண்டு பேருமே நல்லா இருக்கோம். அந்த நேரத்தில் வந்த வெண்மதி, வெண்ணிலா இருவரும் நலம் விசாரித்துவிட்டு மாறன் வீட்டில் அனைவரும் கிளம்பினார்கள்.


செங்கல்ப்பட்டு அரசு மேனிலைப்பள்ளி:

துப்பக்கிக்காரனின் கைபேசி அழைத்தது. கக்கன், கட்டளைத்தளபதி பேசியது. கைபேசி உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டது. வணக்கம் தம்பி. நல்லா இருக்கீங்களா? நல்லா பாத்துக்கிட்டங்களா பசங்க? நம்ப பசங்க தான்... ஒன்னும் செய்ய வேண்டாமுன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். நடிப்பு வேலைய விட்டுட்டு வேற ஏதோ செய்றதா கேள்விப்பட்டேன்... அதேன்... செங்கல்ப்பட்டில் காபி சாபிட்டுட்டு போவீங்கன்னு இறக்க சொல்லியிருந்தேன்.... காபி சாப்பிட்டாச்சா? உதயகுமாரின் கை லேசாக நடுங்கியது. ஒன்னும் பிரச்சினை இல்ல... அந்த துப்பாகித்தம்பி ஒரு கடுதாசி குடுப்பாப்பில... அதுல இருப்பது போல கூட்டத்துல பேசுங்க....எல்லாம் சரியாகிவிடும்.

உதயகுமாருடன் சென்னையிலிருந்த வந்த காவலர்கள் அங்கேயே விடப்பட்டு கக்கனின் ஆட்களுடன் விருத்தாச்சலம் புறப்பட்டது உலங்கூர்தி. கூட்டம் அலைமோதியது. என் இனிய தமிழ் மக்களே... எல்லோருக்கும் சோதனை காலம் வரும், போகும். நமக்கும் வரும்... அது பனிபோல விலகிவிடும். உளறினான். பின், பேசினான்... இல்லை படித்தான். தனித்தமிழகம் என்பது நம் இனத்தின் விடுதலை., இது தெரியாமல் நம்மிடம் இந்தியா விளையாடுகிறது. நான் பேட்டி கொடுத்தது ஒரு தற்பாதுகாப்புக்காகத்தான் என்பது என்னை சுற்றி நெருங்கி இருக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்... துப்பாக்கிமுனையில் என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டித்தான் இந்தியா என்னை அந்த பேட்டி கொடுக்கச்சொன்னது., நானும் வேறு வழி இல்லாமல் பேசிவிட்டேன். நீங்கள் போட்ட பிச்சைதான் என் வாழ்க்கை, நான் உங்களுக்கு துரோகம் செய்வேனா? நீங்கள் என் படம் பார்த்து என்னை ரசித்தற்க்காக நான் கடன்பட்டுள்ளேன், மும்பையிலிருந்து வந்த என்னை உயரே உட்கார வைத்து அழகு பார்த்தவர்கள் தமிழர்கள், உங்களுக்கு நல்லது என்றால் நான் துணை நிற்ப்பேனே தவிர எதிர்ப்பேனா?

எனவே, என் ரசிக சிங்கங்களே...உங்களால் முடிந்த அளவுக்கு தலைவர் வெற்றி மாறனுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என கேட்கவே நான் இந்த கூட்டத்திற்கு வந்தேன். மேலும் அறிவித்தபடி அனைத்து கூட்டங்களிலும் நான் வெற்றிமாறனுக்கு ஆதரவாக பேச முடிவுசெய்துள்ளேன். மீண்டும் நாம் மதுரை கூடத்தில் சந்திப்போம்.

தொடர்வோம்....