Monday, March 7, 2011

அடையாளம் வாரம் - 3‏

விவரம் தெரிந்த பத்து ஆண்டுகளாக பார்த்த அதே நிலைக்கண்ணாடிதான்.... இருந்தாலும் அதிகாலை பூத்த மலரின் மேல் அமர்திருக்கும் பணித்திவலைபோல் புதிதாய் வந்து உட்கார்திருந்த குட்டிப்பரு...கண்டு நிலைத்தது..இல்லை நிலை குலைந்தது... குட்டை பாவடையில் என் முன் நின்றவள்.... அழுகையை சரி செய்வதற்காக என்முன் கான்பிக்கப்பட்டவள்.... இவளா இத்தனை அழகுடன்... அப்பாட... என்னை இந்த வீட்டிற்க்குள் கொண்டுவந்ததன் பலன் பெற்றுவிட்டேன்.... இனி நான் உடைந்தாலும்..... இல்லை பதிவுக்குச்சிக்குள் இருக்கும் கோப்புகளைப்போல் என் ஒவ்வொரு மூலக்கூறிலும் உன்முகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும். ஆம் இனி நான் உடைத்தாலும் உடையேன்.


இவள் பெயர் வெண்ணிலா. பத்தாம் வகுப்பு முடிந்து இன்றுதான் மேனிலை முதலாம் ஆண்டு பள்ளி செல்கிறாள். வரலாற்றை  முதன்மை பாடமாக எடுக்கும் அளவுக்கு இவளை இட்டுசென்ற மனதுதான் என்ன? ஒன்றும் இல்லை.... வேறு கிடைக்கவில்லை. நல்லவேளை இவள் அப்பா அறிவழகி என்று பெயரிடவில்லை, இட்டிறிந்தால்... பாவம் பாதி வருத்தப்பட வேண்டியிருக்கும். படிப்பு என்றாலே பாவக்காய்... இருந்தாலும் வீட்டிலிருந்தால் அம்மா ஏதாவது வேலை சொல்லுவாங்களே...... பள்ளிக்கூடம் போனாலாவது பிள்ளைகள் கூட விளையாடலாம்... என்பதற்காக போறவள். பள்ளி முடிந்ததும்   தாமரைக்கண்ணன் ஆசிரியர் வீட்டுக்கு பாடம் கற்றுக்கொள்ள எப்போவாவது போவதுண்டு...


வழக்கம்போல் இன்றும் போனாள்.... இவர் பேசாம இருந்தாலும் அந்த பய சும்மா இருக்கமாட்டானே... பெரிய பொறுப்புவெளக்கென்ன.... வைதுகொண்டே போனாள். அதேகுரல்... ஆனால் கொஞ்சம் தட்டையாக தென்பட்டது அவளுக்கு... நிமிர்ந்து பார்த்த நேரம்.... அவன் தலை குனிந்திருந்தான்...நேர்கொண்டு நோக்கமுடியவில்லையோ அவளின் புதிய பொழிவை.... அவன் அதற்க்கு முன் அந்த படபடப்பை சந்தித்தது இல்லை... சந்திக்க சந்தர்ப்பம் அமைந்தது இல்லை....அவன் பார்க்க எத்தனித்த போது... அவளுக்கு தெரிந்துவிட்டது... இவன் வீழ்ந்துவிட்டான் என்று.. எனக்கு காலைல கண்ணாடி பாக்கும்போதே தெரியுண்டா... எவனோ இன்னிக்கு கவுருவான்னு... அது நீயா...? ஆம் வீழ்ந்தவன் இவன் என்பதில் ஒரு மகிழ்ச்சி... அது அவனை பிடித்ததாலா? அல்லது அவனை பிடிக்காததாலா? என்பதன் விடை... அந்த வயசிலிருப்பவர்களுக்கும், அந்த வயதை தாண்டி, சின்ன சின்ன இதுபோன்ற சாரலில் நனைந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்... மற்றவர்கள் பதின்ப வயதினர் என்றால் முயலுங்கள்...இல்லை என்றால் பெருமூச்சுவிட்டுக்கொள்ளுங்கள்.


அந்தப்பையன்... முதலாம் ஆண்டு இயந்திரவியல் படிக்கின்றவன். இதுவரை அரும்பு மீசைக்கும், நிலைக்கண்ணாடிக்கும் சிரமம் ஒன்றும் கொடுக்கவில்லை. இவனுக்கு பிடித்தது இரும்பும் இரும்பு சார்ந்த பொருட்களும், படிப்பதும் அதுவே, வரலாறும் அரசியலும் அவன் பிறக்குமுன்பே ஊட்டிய தந்தைப்பால்... ஒழுக்கமும், தமிழும் தமரைக்கன்னனின் வளர்ப்பு.... மொத்தத்தில் நல்ல உலையில் தயாரிக்கப்பட்டஎஃகு இரும்பு. இரும்பின் குணம் இவனுக்கு. நிமிர்ந்து நிற்பதும், அடித்தால் எதிர்படுவதும், உடைத்தால் திமிர்வதும்...... வகுப்பில் முதலில் வரவேண்டும் என்று யாரும் இவனுக்கு கட்டாயபடுத்தவோ கற்றுதரவோ இல்லை. முடிந்தவரை புரிந்து படி என்பதுதான் இவன் கற்றது. இரும்படிப்பதும், கையில் மசை ஆவதும் கேவலம் என துரும்பளவும் நினைக்க தெரியாதவன். முரட்டு மேனியும், அடர்ந்த மயிர்கார்களும், சாதாரண உயரமும், மாநிரக்காரன்.

படித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவும்... பின் விளையாட்டையும் , அரசியலையும் லாவகமாக வாழைப்பழத்தில் ஊசி சொருகுவதைப்போல் ஏற்றிவிடவும்  தாமரைக்கன்னனின் கட்டளை. ஓடிப்பிடித்து விளையாடும் வயதை தாண்டி, அரும்பு மீசை, குறு குறு பார்வை வயதை தொட்டுவிட்டவன். இவன் ஆளப்பிறந்தவன்... இல்லை ஆள்வதற்காக வளர்க்கப்பட்டவன்... இவன்தான் வெற்றிமாறன். இவன் ஆளுமையும், அரசியல் தெளிவும். கூர்மையும், நேர்மையும் எப்படி வார்க்கப்பட்டதென்பதை... சற்று பின் பார்ப்போம்.

கதை களம் தஞ்சையை நோக்கி நகர்கிறது. இது கக்கனின் அறை. இது அலுவலகமா இல்லை பூந்தோட்டமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு இருக்கும் ஒரு அழகான இடம். இவனின் மிரட்டல் பார்வைக்கும், கணீர் கண்களுக்கும், மின்னல் பறக்கும் கட்டளை சொற்றொடர்களுக்கும் இந்த இடம் சம்பந்தமே இல்லாதது போல் ஒரு பிரமிப்பான வித்தியாசம். ஐம்பது வயது தோற்றமுள்ள அழகிய சுந்தரேசன் காத்திருந்தார்..... கக்கன் இருக்கையை விட்டு எழுந்து வரவேற்றார். இவர் எழும்புவது மிகச்சில மனிதர்களுக்காக மட்டுமே. இது காதும் காதும் வைத்தாற்போல் நடக்கும் சந்திப்பு..... தம்பி.. என்று இழுத்ததும்... கக்கன் கனைத்தார்... ஐயா... எந்த எந்த இடத்தில் சிக்கல் என்று மட்டும் சொல்லுங்கள்... மற்றதை நானும், அண்ணனும் (மாறனை அண்ணன் என சிலர் அழைப்பர்) பார்த்துக்கொள்கிறோம். அனைத்து காவல் நிலையங்களும் பெரிதாக ஒன்றும் சிக்கல் இல்லை, ராசபாளையம், சாத்தூர், விருத்தாசலம், சென்னை வடக்கு, ஓசூர் இது மாதிரி இருபது காவல் நிலையங்களில் முரண்டு பிடிக்கும் அதிகாரிகள்... உங்களுக்கு விவரம் மின்மடலில் இந்நேரத்துக்கு வந்திருக்கும் தம்பி... வேற ஏதாவது இருக்கா... இல்ல தம்பி... ஐயா மன்னிக்கணும் ரெம்ப நேரக்குறைவு... அடுத்து மகாலிங்கம் இந்திய விமான கட்டுபாட்டு ஆணைய மூத்த அதிகாரி வராப்புல.. சரி தம்பி சொல்லிட்டு கெளம்பறேன்... அவர் கதவை திறக்குமுன் மின்மடலில் என்ன என்ன செய்ய வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது... இருபது இடத்திற்கு மாறனின் நம்பகமான அதிகாரி நாளை கதிர் முளைக்குமுன் இருப்பார்கள்.

வணக்கம் மகாலிங்கம்... நிலைமை எப்படி இருக்கு... எவனாவது மோப்பம் பிடிச்சானா இல்லையா...... கொஞ்சம் கவனம். இல்ல தம்பி... அண்ணனை பாக்க்கலாம்மு வந்தேன்... அவர பிடிக்கமுடியல.... அதேன் தம்பிய பாக்க வந்தேன்.... இழுத்தார். பரவாஇல்ல மகாலிங்கம்... ஏதாவது செய்யனுமா சொல்லுங்க.... அப்பறமா கடைசி நேரத்துல அங்க சிக்கல் இங்க சிக்கல்னு இழுத்துக்கிட்டு திரியகூடது... மாறன் கொன்னு செல வச்சுருவாறு... இல்ல தம்பி எல்லாம் சரியா போய்க்கிட்டு இருக்கு.. எல்லா நெலயத்துலேயும் கட்டுப்பட்டு அதிகாரிகள் நம்ம ஆளுக தான்.... ஆனா ஒரு சிக்கல்... டில்லிக்காரன் நினைத்தால் கட்டுபாட்டு கணினியை அங்கிருந்து கட்டுபடுத்தலாம்... அதெல்லாம் தெரியுதுண்ணே... ஆவடியிலிருந்து...... இல்ல தம்பி.. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, சேலமுன்னு எல்லா எடத்துக்கும் டாங்கிகளை கெளப்பறது..... அது எங்களால முடியாதுன்னே... சரி மகாலிங்கம்.... அண்ணன்கிட்ட பேசுறேன்..


இன்னும் ஒரு வாரமே இருக்கும் பட்சத்தில், கக்கனும், திலீபனும் (மூத்த கட்டளை அதிகாரி) மாறனை சந்திக்க இருக்கிறார்கள். இருவரும் ஆளுக்கொரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தார்கள்... அது தெளிவாக மாறனுக்கு விவரிக்கப்பட்டுவிட்டது. மூத்த கட்டளை அதிகாரி திலீபன், முப்படைகளின் கட்டுபாடுகளை கவனித்துகொண்டார், அதிலிருக்கும் சறுக்கல்கள், சிக்கல்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டது. மாறனுக்கென்று தனியாக செயல்படும் உளவுத்துறை வினாடிகொரு தகவல்களை தட்டிதெரித்து கொண்டிருந்தது, ஒவ்வொருவரும் ஐ பேசி யில் மொத்தகட்டுபாடையும் வைத்திருந்தனர்.

நூறு ஆண்டுகளுக்கு (சுமார் 2011 இருக்கும்) முன் விக்கியில் வந்த ஒரு செய்தி மாறனை பாதித்தது. அது அணுமின் சக்தி குறித்த ஒரு புள்ளிவிவரம். About 70% of the electricity consumed in India is generated by thermal power plants, 21% by hydroelectric power plants and 4% by nuclear power plants.[1]

As of June 2010 the installed capacity of wind power in India was 12009.14 MW, mainly spread across Tamil Nadu (4132.72 MW), Maharashtra (1837.85 MW), Karnataka (1184.45 MW), Rajasthan (670.97 MW), Gujarat (1432.71 MW), Andhra Pradesh (122.45 MW), Madhya Pradesh (187.69 MW), Kerala (23.00 MW), West Bengal (1.10 MW), other states (3.20 MW) [32] It is estimated that 6,000 MW of additional wind power capacity will be installed in India by 2012.[33] Wind power accounts for 6% of India's total installed power capacity, and it generates 1.6% of the country's power.[34] - நன்றி விக்கிபீடியா.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சக்திகளில் வெறும் நான்கே விகிதம் மட்டுமே அணுவை பயன்படுத்தி தயாரிக்கபடுகிறது. அதற்காக தமிழ்நாட்டை சுடுகாடாக ஆக்கவேண்டுமா... என்ன இது பைத்தியக்காரத்தனம். நன்றாக யோசித்தால், காற்றாலைகளினால் எடுக்கப்படும் மிண்ணின் அளவு சுமார் ஒன்றை விகிதம், காற்றாலைகளையும், கதிர்வெப்ப சக்தியையும், இயற்க்கை வாயு சக்தியையும் அதன் உற்பத்தி திறனையும் உயர்த்தினாலே சுமார் இருபது விழுக்காடு கூடிவிடும் என்பது அறிவியலார் கருத்து. எனவே, மாறனுக்கு மின்சாரம் உற்பத்தித்துறையில் பெரும் மாற்றம் கொண்டுவரவேண்டும் என பெரிதும் விருபினார், அதற்காக, அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும், எழுதிய தொழில்நுட்ப கட்டுரைகளும் ஏராளம். அதன் பாதிப்பு, தனி தமிழக அறிவிப்பில் முக்கிய இடம் பெரும், அதற்காக நான்கு பேர் கொண்ட ஒரு குழு வரைவுரை தயரித்துகொண்டிருகிறது.


மாறனின் உளவுத்துறையும், சுற்றுலாத்துறையும், உள்ளூர் ஆட்சியாளர்களின் உதவியுடன் ஒரு பட்டியல் கொடுத்தனர். அதுதான் புரட்சியின் ஆணிவேர் என்றால் மிகையாகது. தில்லியும், ஆட்சியாளர்களும் ஏன் எந்த ஒரு நாடும் எதிர்பார்க்காத ஒரு கிடுக்கிபிடி. நாலு பக்கமும் சிங்கமா... பூனை போல் சொன்ன இடத்தில் உட்காரும் நிலைக்கு தில்லி ஆட்சியினரை கதி கலங்கவைக்கும் மாபெரும் சக்தி...

தொடர்வோம்....

No comments: