Monday, March 7, 2011

அடையாளம் வாரம் - 4‏

தொண்ணூற்றி ஒரு வயது கிழட்டு சிங்கம் தாமரைக்கண்ணன் வீடு. குழந்தை பிறப்பிற்கு காத்திருக்கும் புது கணவனைப்போல் முற்றத்தில் சுற்றி சுற்றி வந்தார். நல்ல செய்தி கேட்காம இந்த கட்ட வேகாது... மனசுக்குள்ளே பேசிக்கொண்டார்......காதல் கடிதம் குடுத்துவிட்டு காத்திருக்கும் அரும்புமீசை காதலனைப்போல்.... ஆம். நான் சாகமாட்டேன்.... இன்று நான் நினைத்தைது நடக்கப்போகிறது.... தள்ளாதவயதில் தஞ்சையை நோக்கி பயணித்தார்... தானும் ஒரு சாதாரண குடிமகனைப்போல் சட்டசபை அலுவலகம் முன் காத்திருந்தார்...

தி.பி.2139 ம் ஆண்டு சுறவம் மாதம் அறிவன் தினம் தலைப்பு செய்தி வெளிவந்து சரியாக நாளை முப்பது நாட்கள் காலை கதிர் முளைத்தால். கும்பம் மாதம் முதல் நாள். வெற்றிமாறன்.... தேர்ந்தெடுக்கப்பட்ட வானொலி பன்பலைவரிசையிலும், தொலைக்காட்சிகளிலும் புன்முறுவலுடன், கொஞ்சம்கூட பதற்றமின்றி தோன்றினார்.

வணக்கம். கும்பம் மாதம் காலை கதிரவன் உதயதிற்குபின் நாம் ""தமிழகம்""" தனி நாடாக பிரிகிறோம். இந்திய கூட்டச்சியின் கீழ் இருந்தபோது எங்களுக்காக நீங்கள் செய்த சிறு சிறு உதவிகளுக்காக நாங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். தமிழக எல்லை என்பது 1956 ஆம் ஆண்டு வெளியிட்ட மாநில மறுசீர்திருத்த சட்டத்தின் அடிப்படையில் இருக்கும். எங்கள் எல்லைக்குள் இருக்கும் எல்லாவளங்களும் எங்களுக்கு மட்டுமே சொந்தம். எங்கள் எல்லைக்குள் இருக்கும் நடுவணரசின் சொத்துக்களும், பாதுகாப்பு கருவிகளும், துப்பாக்கிகளும், கவசவானங்களும், வான்படைகளும், கடற்படைகளும் எங்களுக்கே சொந்தம். இதில் யாரும் சொந்தம் கொண்டாட உரிமை மறுக்கபடுகிறது. எங்கள் அறிவிப்பை தொடர்ந்து குறைந்தது இருபது நாடுகளாவது எங்களை அங்கீகரிக்கும் என நம்புகிறோம். எனவே எங்களுடன் இந்தியா எதுவும் பேசுவதற்கு முன்வரும் என்றால் இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தையாகவே எடுத்துக்கொள்ளமுடியும். இன்னும் சிறிது வினாடிகளில் இந்தியா தனது வலிமையான ஆயுதங்களினால் எங்களை தாக்க முற்படும் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, அண்டை நாடுகளும், வல்லரசுகளும், மக்களாட்சி நாடுகளும் எங்களை பாதுகாக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். இது எங்கள் மக்களின் நீண்ட கால விருப்பம், வேண்டுமென்றால் ஐ.நா சபை முன்னிலையில் நாங்கள் மக்கள் வாக்கெடுப்பை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இந்திய தலைநகரம். புதுடில்லி. பிரதமர், ஜனாதிபதி முக்கிய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள் என்று பெரும் பட்டாளமே கூடியது தனிதமிழக அறிவிப்பை விவாதிப்பதற்க்காக. விவாதம் என்பதைவிட எள்ளி நகையாடியதுதான் அதிகம், சாம்பார்க்காரனுக்கு கொழுப்பை பார்த்தாயா.. தனிநாடு வேணுமாம்.. சட்டசபையை கலைத்துவிட்டு ராணுவத்தை அனுப்புங்கள், ஆளுனரை மாற்றுங்கள். மாறனையும் அவர் அட்ட்களையும் கைது செய்து திகார் சிறையில் போடுங்கள். இப்படித்தான் பேசப்பட்டது. யாரும் மாறனின் வலிமை என்ன என்பதை கேட்ககூட மறுத்தார்கள் என்பதே உண்மை. கூட்டம் கலைந்தது. சட்டசபை கலைக்கப்பட்டது.

விடிவதற்குள் மாறன் சிறையில் இருப்பார் என வடவர் நம்பினார். மாறாக, தன் அழகான மனைவி போட்டுகொடுத்த காபியை ருசித்துகொண்டிருந்தார். டில்லிக்கு போனது செய்தி. மாறன் காபி குடித்துகொண்டிருக்கிறார் கைது செய்யப்படவில்லை என்று இல்லை.... முடியவில்லையாம். டில்லி ஆட்டுக்கூட்டம் இப்பொழுதுதான் விழித்தது. ஏன் என்று கேட்கையில், மொத்த கட்டுப்பாட்டையும் மாறன் கையில் வைத்திருந்தார். யார் கைது செய்வது... காவல் அதிகாரியா? ஆளுநர் காலை முதல் விமானத்திலேயே டில்லி அனுப்பபட்டுவிட்டார். முதன்மை செயலாளர் முதல் கடைசி காவலர் வரை அனைத்தும் மாறனின் ஆட்கள்.

டில்லி கொஞ்சம் அதிர்ச்சியானது. எப்படி முடியும். சரி நடுவணரசின் கட்டுபாட்டுக்குள்ளிருக்கும் அனைத்துத்தரப்பு அதிகாரிகளையும் முயன்று பார்த்தது, ஒருசில அதிகாரிகள் வடவராக இருதபோதும் பயந்தார்கள். மொத்தம் ஐம்பது குழு கொண்ட ஒரு பெரிய அதிகார வர்க்கத்தை தேர்ந்தெடுத்து அடுத்த இரண்டுமணிநேரத்தில் கட்டுபாட்டை கையில் எடுக்குமாறு உத்தரவு பிறந்தது. அனைவரும் பறக்க தாயாரானார்கள். அதற்குள், கக்கன் ஒரு அவசர அறிவிப்பை வெளிட்டார்... அதில் இந்தியாவே கதிகலங்கியது. இது மாறன் பேசிமுடித்து ஒரு மணிநேரத்திற்குள் நடக்கும் நிகழ்வுகள். அந்த அறிவிப்பானது, நாங்கள் முன்னெடுக்கும் இந்த பயணமாவது எந்த தரப்பினருக்கும் வலிக்காமல், குருதி சிந்தாமல் இருக்கவேண்டுமென நினைக்கிறோம். ஆனால், எங்கள் பழைய கல்வெட்டுகள் சொல்லும் வரலாற்றின் படி இந்தியர்களை நம்புவதற்கில்லை, கழுத்தறுப்பவர்கள். எனவே, உலகின் எந்த மூலையிலிருக்கும் ஒரு தமிழனுக்காவது தனிநாடக பிரிவதை ஒட்டி கன்னடனோ, மலையாளியோ, தெலுங்கனோ அல்லது மற்ற இந்திய இனத்தவர்களாவது வன்முறையில் ஈடுபட்டால், விளைவுகள் நல்லதாக இருக்காது. தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல. எனவே பெங்களூரிலோ, மும்பையிலோ, தில்லியிலோ என் தமிழன் அடிக்கபட்டால்...... இங்கே குடியிருக்கும் மார்வாரிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், வடவர்கள், மராத்தியர்கள் போன்றோரின் பாதுகாப்புக்கு தமிழகம் பொறுப்பாகாது. சுமார் ஒரு கோடிக்கும் மேல் வந்தேறிக்கூட்டம் இங்கே இருக்கிறது... அவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திலோ, பள்ளிகூடத்திலோ பாதுகாப்பாக அழைத்துசென்று அமரவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்துகொண்டிருக்கிறோம். அனைத்து பிரச்சினைகளும் நல்லபடியாக தீர்ந்தபின் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கபடுவார்கள் அல்லது பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கபடுவார்கள். எனவே, கூடுதல் புத்திசாலித்தனமாக இந்தியாவினர் நடந்துகொண்டு அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக ஆக்கவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


காலவரையற்ற அவசரகால அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலி, பண்பலைவரிசைகள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அடுத்த அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படும் என அறிவிப்பு ஒட்டப்பட்டது. கவச வாகனங்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் அணி அணியாக தெருவுக்குள்ளும், சாலைகளிலும் தெரிந்தனர். விமானங்கள், அலுங்கு ஊர்திகள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், தைரியமாக ஒரு விமானம் ஐம்பதுபேர் கொண்ட அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு தரை இறங்க நினைத்தபோது, அறிவிக்கப்பட்டது. தரை இறங்கினால் சுடபடுவார்கள் என்று, ஜன்னல் வழியே விமானி நோக்கியபோதுதான் நிலைமை டில்லிக்கு புரிந்தது. ஐயையோ... சாம்பர்க்காரன் விளையாடிட்டானே என்று. அனைத்து விமான நிலையங்களிலும் கவச வாகனங்களும், விமானத்தை சுட்டுத்தள்ளும் போர்க்கருவிகளும் குவிக்கப்பட்டிருந்தன என்று. ஆனால், இந்தியா, கடல்வழி உள்நுழையும் ஒரு சோதனை இருந்தது. ஐம்பது அதிகாரிகளும் மதிய சாப்பாட்டுக்கு தில்லி திரும்பினார்கள். அதுவரை தமிழகம் மாறனின் கையில் இருந்தது. நேரம் ஆக ஆக மேலும் கட்டுக்குள் வந்தது. பிழை இல்லாமல் போட்ட திட்டம். இந்தியா வேறு வழி இல்லாமல் பேசலாம் என்றது. மாறன் சிரித்துக்கொண்டே தொலைபேசியை வைத்தார். காலம் கடந்துவிட்டது என் இனிய இந்தியாவே.


வழக்கம்போல் உலகப்பெரும் நாடுகள் இந்தியாவுக்கு இனிப்பாக செய்தியை வெளியிட்டது. எதுவாக இருந்தாலும் பேசித்தீர்த்துகொள்ளுமாறு... சில நாடுகள் கண்டனம் கூட செய்ததது. பள்ளிகூடங்களில் தடுத்துவைக்கபட்டிருக்கும் வெளிமாநில மக்களை விடுதலை செய்யும்மாறு பணித்தது. மாறன் மசியவில்லை. எத்தனை ஆண்டுகள் நீங்கள் என் தமிழினத்தை முட்கம்பிவேளிக்குள் குடிக்க கஞ்சி இல்லாமல் தடுத்துவைத்திருந்தீர்கள்... அப்பெல்லாம் எங்கடா போனீர்கள்... நாய்களா.... என்று மனதுக்குள் பேசிக்கொண்டார். மேலும் வாய்கிழிய பேசும் எந்த ஒரு மாநில அரசாவது அந்தந்த மாநிலத்தில் வசிக்கும்  தமிழனுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியுமா? இவர்களை நான் விடுவிக்கிறேன். உங்களை நம்பி எத்தனை தமிழர்களை நாங்கள் காவுகொடுத்தோம். இனியும் நாங்கள் முட்டாள்கள் இல்லை.


ஆட்சியும் கட்டுப்பாடும் கைக்குள் வந்தாயிற்று. இனி எப்படி தக்க வைத்துகொள்வது.... நாம் எத்தனை நாட்களுக்கு தாங்குவோம் வலிமையான இந்தியாவிற்கு முன். படைகளை அனுப்பி மக்களை கொல்ல ஆரம்பித்துவிட்டால்.... எத்தனை நாட்களுக்கு ஒரு கோடி மக்களை பிணை பிடித்து வைத்துக்கொள்ளமுடியும். இரவு ஒருமணி... இன்னும் தூக்கம் வரவில்லை... உலாதிக்கொண்டிருந்தார்...அப்பப்ப... தொலைபேசி உரையாடல்கள்.... அப்பொழுதுதான் ஊடகங்களை சந்திக்கும் முடிவுக்கு வருகிறார். நாளை காலை ஒன்பது மணிக்கு ஊடகங்களை சந்தித்து பேசுகிறார், அதன்பின் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பூட்டியிருந்த ஊடக வாய் திறக்கப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது.

No comments: