Tuesday, February 15, 2011

அடையாளம்‏ - வாரம் 2‏

எந்த ஒரு தகவலுமின்றி மாறாக ஆட்சியை கையகபடுத்தும் நோக்கில் அல்லதுமக்களை துண்புருத்தும் நோக்கில் நடுவணரசு செயல்படும் என்கிற பட்சத்தில்.. அந்த நிலை ஏற்படும் பட்சத்தில் நாங்கள் எல்லாவற்றிருக்கும் குறித்தஏற்பாட்டுடன் இருக்கிறோம். தமிழகம் தன்னை தற்காத்துகொள்ளும் தகுதியுடன், உறுதியுடன் இருக்கிறது.


வெற்றிமாறனின் செவ்வி எந்த ஒரு மாறுதலையும், சலனத்தையும்கொடுக்கவில்லை, மாறாக வடநாட்டு செய்திதாற்க்களில் ஒரு மூலையில்நகைச்சுவையை போல், எள்ளி நகையாடி எழுதியிருந்தார்கள். ஆனால், ஒரே ஒருஇந்தியத்துவா நாளிதழ் மட்டும் எச்சரிக்கை உணர்வுடன் கடுமையாக அரசை சாடிஎழுதியிருந்தது. உலகத்தின் வரலாற்றை ஒருவனின் புத்தி மாற்றப்போகிறதுஎன்பது தெரிந்திருக்குமோ என்னவோ. அதேபோல் தமிழகத்திலும் பெரிய ஒருசலமும் பெரிதாக இல்லை., இல்லை காட்டிக்கொள்ளவில்லை என்பதுதான்உண்மை. இந்த அமைதி ஒரு அரைக்கோடி மக்களின் இறுக்கிவைத்த அழுத்தம்என்பது யாருக்கும் தெரியாது, ஆம், நான் கக்கிவிடபோகிறேன் என்றுசொல்லிவிட்டா கொட்டுகிறது எரிமலைகள்.


ஐயா வணக்கம். எட்டி நோக்கினார் தாமரைகண்ணன். வணக்கத்தை கண்அசைவில் இயம்பினார். நீங்கள் சொல்லியனுப்பிய கைத்தடியும், சாய்நாற்காலியும் ... சரிபார்த்துகொள்ளுங்கள் ஐயா. நீ எந்தகடைகாரனப்பா... ஐயாநான் குருசாமி நாடார் கடைக்காரன். சரி தம்பி.. தண்ணி ஏதாவதுசாப்பிடுகிறாயா...அம்மா கவிதா.. குடிக்க கொண்டுவாம்மா... ஆமாட.. நான் கூடஏதோ சேட்டுக்கடையல வாங்கியாந்துட்டன்னுநெனச்சிட்டேன்..தாமரைக்கண்ணன்.. அசையும் சாய்நாற்காலியில் தானும் சிறிதுஅசை போட்டார்.

ஏறக்குறைய முப்பத்தி ஐந்து ஆண்டுகளிருக்கும்... பள்ளிக்கூட வாசலில் தன்மகிழுந்தை திறக்கும் தருவாயில் கேட்டது ஒரு குரல் "ஐயா வணக்கம்", வணக்கம். சாலமன் மாணிக்கம் என்னை அனுப்பிவைத்தார். ஆமா.. ஆமா எனமுகமலர கூப்பிட்டார்... மின்மடல் பார்த்தேன்... நீங்கள் வீட்டுக்கேவந்திருக்கலாம். ஆமா, வாங்க வீட்டுல போய் சாவகசமா பேசலாம். மாணிக்கம்ஐயா எப்பிடி இருக்காக.. வயசுவேற கூப்பிடுது.. இன்னும் வேலைய குறைக்கவேஇல்லை. கூடவே ஒரு இளங்கன்றை கூட்டிவந்திருந்தார். அது தன் வயதை மீறிஅறிவுத்திமிர் காண்பித்தது. ஐயா.. என் பெயர் பேரறிவாளன், இது மகன்வெற்றிமாறன். வசதி வாய்ப்புக்கு ஒன்னும் கொறை வைக்கல.. ஏதாவது நான்செய்யணுமுன்னு தோனுச்சு...என்னால முடியல..அதேன்..என் மகனைகூட்டியாந்திரிக்கேன்..அறிஞர் குணா புத்தகம், அரிமாவளவன் எழுத்து, இன்னும்சில வலைப்பூக்கள் அறிவு, அப்பறம் கொஞ்சம் மின்மடல் தகவல்கள். இதுமட்டுந்தான் எனக்கு தெரிந்த தமிழ்தேசம், புண்ணிய பூமி. உங்களுக்கு தெரியாததுஇல்ல... காமராசருக்கு அப்பறம்... தமிழனை ஒக்காரவைக்காத ஒதாவாகறைகள்... ஆமா அதுக்கு இந்த வாத்தியார் என்ன செய்யனும் புரியாமல் கேட்டார்தாமரைக்கண்ணன். உங்கள் எழுத்தும், உணர்வும் செயலுக்கு வரணும். அதுக்குஎன் மகன் ஒங்ககிட்ட படிக்கணும். சற்று நேரே உட்கார்ந்து ஆராய்ந்து கேட்டார்.... உங்கள் உணர்வையும், அறிவையும் நீங்கள் கொடுங்கள் நான் என் மகனைதருகிறேன். வரலாற்று ஆசிரியருக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. தொடர்ந்தார்பேரறிவாளன்.. என்னிடம் பணம் இருக்கு... எவ்வளவு வேணுமென்றாலும் தன்குரலை சற்று தாழ்த்தி பேசினார்... நான் சொல்லவரது... என்னன்னா.... தோட்டாவோ..... துப்பாக்கியோ...அத நான் பாத்துகிறேன்....அழகாகமுடித்தார்...பெயருக்கேற்ற சாயலில். ஒரு பெரிய சிரிப்புடன் தாமரைக்கண்ணன்தொடர்ந்தார்... என்னடா குட்டிப்பையா.. நீ ஈக்கிமதிரி இருக்க ஒங்க அப்பாதுப்பாக்கி.. தோட்டான்னு பேசுறாரு. கத்தி செய்யாததை புத்தி செய்யும். அதற்காககத்தி எடுத்த நம் முன்னவர்களை நான் பலிக்கவில்லை. அந்த நாட்டுக்கு, அந்தநேரத்தில் அது சரியாக இருந்தது.. நாம் புத்தியில் ஆரம்பிப்போம்... காலமும், களமும் முடியு செய்யட்டும் எதை பயன்படுத்தவேண்டும் என்பதை. அன்றுவெற்றிமாறனுக்கு முதல் பாடம் கற்றுத்தரப்பட்டது "பிரபாகரனின் வாழ்க்கைவரலாறு". அவன் அங்கேயே ஒரு மாணவர் விடுதியில் தங்கினான் என்பதைவிடஅன்று முதல் தாரைக்கண்ணன் வீட்டிலேயே பெரும்பாலும் கழித்தான்.

வெற்றிமாறன் தான் சார்ந்திருந்த அரசியல் கட்சி தலைவர் தில்லியிலிருந்துகூப்பிட்டார், நம்ம கட்சிதான் மேலயும், கீழயும்... நீ எதுக்குப்பா இந்தமாதிரிபேசிக்கிட்டு திரியிற... எதிர்க்கட்சிக்காரன் ஏதாவது பேசித்தொழய போரானப்பா... டில்லிக்கு வேற தேர்தல் வருது... அப்பறம் வடக்க ஒரு பயலும் ஓட்டுபோடமாட்டங்க... அப்பறம் நீ சென்னையில இருந்து கட்டபஞ்சாயத்து கூட பண்ணமுடியாது... சரி சரி நான் பாத்துகிறேன்..ஒரு பயலும் ஒன்னும் பேசல.. அதஅப்பிடியே விட்டுரு. மாறனும் சரி என்றோ மாட்டேன் என்று பதில்சொல்லவில்லை. இன்னும் சரியாக இருபது நாட்கள் எஞ்சிவுள்ளன.

மாறன் அனைத்து மட்ட தலைவர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் எனஅனைவரையும் அவசரமாக கூப்பிட்டார். அடுத்த நான்கே மணிநேரத்தில் கூட்டம்தொடங்கியது. வணக்கம். இன்னும் இருபது நாட்களே உள்ளன. நாம் எந்தஇலக்கில் இருக்கிறோம். கட்டுபாடுகள் எந்த அளவில் இருக்கிறது என்பதில்தொடங்கி.. சிக்கல்கள்... தீர்வுகள் என ஆலோசனை செய்யப்பட்டது. இங்கேஇன்னும் இரண்டு சிங்கங்களை அறிமுகபடுத்தவேண்டும். ஒருவர் திலீபன். மூத்த கட்டளை தலைவர், வயது வெற்றிமாரனைவிட இரண்டு ஆண்டுகள்மூத்தவர். இரும்பு மனிதர். செயலில் புலி. அரசு அலுவலல்கள் எதிலேயும்இல்லாதவர், ஆனால் கட்சியின் ஆணிவேர். அடுத்து கக்கன்கட்டளைத்தலைவன். முப்பத்தஞ்சு வயது இளம் கன்று. பயமறியாது. கோவக்காரன் என்று பெயரெடுத்தவன். கட்சியின் செல்லப்பிள்ளை. இவனுக்கும்அமைச்சரவையிலோ, அரசு அலுவல்களிலோ எந்த பொறுப்பும் கிடையாது.

இப்பொழுது இருக்கும் நிலவரத்தை பார்க்கும்பொழுது டில்லிக்காரர்கள் மிகவும்சாதரணமாக எடுத்துகொண்டதுபோல் தான் தெரிகிறது, எனவே தி.பி 2139 ம்ஆண்டு, சுறவம் மாதத்தின் கடைசி நாள், நாம் கண்டிப்பாக தனித்தமிழக அறிவிப்புசெய்துவிடும் கட்டயத்திற்கு தள்ளப்படுவோம் என்று தான் தோன்றுகிறது. எனவே என் புலிநிகர் வேங்கைகளே... ஆயத்தப்படுத்திகொள்வோம். நமக்குஎப்படியும் ஈராயிரம் டாங்கிகள், ஆயிரம் மிதுரக போர்விமானங்கள், இருபதாயிரம் துப்ப்பக்கிகாரகள் என தேவைப்படும் என்று நினைக்கிறேன். மேலும் தெளிவான விவரங்களை தம்பி கக்கன் தேவையான ஆட்களுக்கு ஆயத்தபணிகளை முடுக்கிவிடுவான் என்று நான் அறிவிக்கிறேன். இப்போதைக்கு இந்தவிவரங்கள் போதுமானது. இங்கே நடக்கும் விவரங்கள் மற்றும் பேச்சுக்கள்ரகசியம் காக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்வோம்.....................


அன்புடன்,


மாசிலான்

தமிழன் என்பதற்கு சான்று குலம் மட்டுமே

No comments: