Sunday, July 3, 2011

அடையாளம் வாரம் - 16

போர்கள்:

இனி வரும் நாட்களில் துப்பாக்கிகொண்டும், அணுகுண்டுகள் கொண்டும் ஏனைய நாடுகளுடன் போர் தொடுக்கும் வழக்கம் கிட்டதட்ட முற்றுப்பெற்றுவிட்ட நிலையில், மேற்க்குலகமும், இந்தியாவும், இந்தியத் துனை நாடுகளும் நம் தமிழ்க்குடியரசை அச்சுறுத்தப் பயன்படுத்தும் முறை கண்டிப்பாக உளவுப்போரும், பொருளாதரப்போருமாகவே இருக்கமுடியும். இந்த இருவகைப்போரையும் முறியடிக்கும் வகையில், தற்க்காப்பு  ஏற்ப்பாடுகளைத் துரிதப்படுத்த குடியரசு முனையவுள்ளது, எனவே, தமிழ்க்குடியரசு மக்கள் தயவுகூர்ந்து பொறுமையுடனும், நண்பிக்கையுடனும் புதுக்குடியரசுடன் ஒத்துழைக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உளவுப்போர்கள்:

இனி தமிழ் மக்கள் மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாவார்கள் எனவும், பசியும், பிணியும் தமிழ்மக்களை வாட்டும் எனவும், இந்திய உதவி நிறுத்தப்பட்டதால் தமிழ்க்குடியரசு வீழும் எனவும் மக்களின் மனதை பீதிக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று நோக்குகிறோம், இது உண்மைக்கு புறமான செய்திகள், இது போன்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு வகையான போர் முறை, மக்களின் மனதை நோயுரச்செய்து, நாட்டினை சிக்கலுக்குள்ளாக்கும் திட்டம். இது மக்களை சிந்திக்கவிடாமல் செய்யும் போர்முறை. மக்களை திரைப்படம், கிரிக்கெட் விளையாட்டு, மதம் போன்றவற்றில் அடிமையாக்கி, அவர்களுடைய சொந்த பொருளாதாரம், வசதி, குடும்ப சிக்கல், கல்வி, தன் இனத்தின் அடையாளங்கள் போன்றவற்றை மறந்து போகச்செய்யும் வசியம். மது, மாது வகையும் அடங்கும். அதற்க்காக, மக்களை குடிக்கச்சொல்வார்கள் என்பது இல்லை, குடிப்பதற்க்குண்டான வாய்ப்பைக் கூடுதலாக்குவதும், குடிப்பிடங்களை வசீகரமாக்குவது, குடிக்கும் இடங்களில் அழகிய பெண்களை நடனமாடவிடுவதும், மாணவர்களையும், இளைஞர்களையும் பாதைமாற்றிவிடுவதுமே இதன் நோக்கம். இதற்க்கு ஊடகங்களே பெரிதும் துணைபுரிகின்றன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப்படக் கதைகளும் அவ்வாறு களமாக்கப்படுகின்றன, எ.காடாக, தமிழ் கலாச்சாரங்களை கேவலமானதாக காண்பிப்பதும், வடவ, மேலைநாட்டு கலாசாரங்களை மேன்மையாக திரிபுசெய்து காண்பிப்பதும் மக்களின் மனதில் ஒரு மாயையை உருவாக்குகிறது. நகைச்சுவை நிகழ்ச்சிகளின்போதும் தமிழ் வார்த்தைகளை வேண்டுமென்றே தரக்குறைவாக பேசுவதும் திட்டமே ஆகும். திருவிழாக்காலங்களில் கரகம், வில்லுப்பாட்டு போன்ற நிகழ்சிசிகள் இன்றளவில் இல்லாமல் போனதும் இவ்வாறு திரிபுசெய்து காண்பித்ததன் விளைவே.

தமிழ் திருநாட்களை இருட்டடிப்பு செய்வதும், தீபாவளி, ஹோலி போன்ற வடவ திருநாட்களை பெரிதுபடுத்தி விளம்பரங்கள் செய்வதும் சாதாரன செய்கை போன்று காட்சியளித்தாலும் போர்வைத்தமிழ்த் தலைவர்கள் வேண்டுமென்றே நம் அடையாளங்களை ஆணிவேருடன் பிடுங்கியெறிய வேண்டுமென்ற வெறிகொண்ட எண்ணமே. பொதுமக்களுக்கு இதன் விளைவு உடணே புரியாவிட்டாலும் நாள்ப்பட தெளிவுபிறக்கும்போது விளங்குகிறது. எனவே, தொலைக்காட்சி நிகழ்சிகள், திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டபின்னரே பொதுமக்களின் காட்சிக்கு விடப்படும். செய்தித்தாட்களும் தணிக்கை செய்யப்படும். ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லும்போது, ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற ஐயம் உதிப்பது இயல்பே. எ.காட்டாக, 2008ம் ஆண்டில் தமிழ் ஈழத்தலைவர் இறந்துவிட்டார், இறந்துவிட்டார்... எனச் சொல்லிச்சொல்லியே ஈழமக்களை நம்பவைத்து போரின் போக்கை மாற்றியது இலங்கை அரசு. இரண்டாம் உலகப்போரில், ஹிட்லர் இங்கிலாந்தை நோக்கிதான் முதலில் படை அனுப்புவதாக இருந்தது, இங்கிலாந்து தேம்ஸ் ஆற்றில் ஏதோ ஒரு நச்சுப்பொருளை கலந்துள்ளதாகவும், நாசிப்படைகள் ஆற்றை கடக்கும் தருவாயில் அனைத்து வீரர்களையும் இழக்க நேறிடும் எனவும் ஒரு வந்ததியை திட்டமிட்டே  BBC வானொலி ஒலிபரப்பியது, ஹிட்லரும் படையனியை ரஷ்யாவை நோக்கி அனுப்பித் தோற்றார். வதந்தியை நம்பித்தான் ஹிட்லர் தோற்றார் என யாரும் சொல்லமுடியாது என்றாலும், படையயை திசைதிருப்ப மனரீதியான ஒரு பீதியை ஹிட்லரின் மனதில் எற்படுதியதே... அதுதான் உளவுப்போரின் வலிமை.

இந்தியா பெரிய நாடு அதன்முன் போட்டிபோட்டு வெல்லமுடியாது எனவும், பொருளாதார தடையை குடியரசின்மீது சுமத்தினால், தமிழ்க்குடியரசு மிக மோசமான நிலையை அடையும், தொழில்வளம் குறையும், வியாபாரம் மலியும், நிர்வாகம் சீர்குலையும் என்பது போன்ற வதந்திகளையும் எதிர்பார்க்கலாம். சிறிய நாடுகள் வெற்றிபெற முடியாது என்பது மூடத்தனமான பேச்சு, ஏனென்றால், சிங்கப்பூர் சென்னையைவிட சிறிய நகரம், ஆனால், சிங்கையின் பொருளாதாரம் இந்திய மதிப்பைவிட சுமார் ஐம்பது மடங்கு கூடுதல் என்பது இந்தியர்களுக்கே தெரியும். திறம்பட நிர்வாகமும், நேர்த்தியான வழிமுறைகளுமே ஒரு நாட்டின் வெற்றிப் படிக்கற்கள். எனவே நம்மால் முடியாது என்ற எண்ணத்தை மனதிலிருந்து நீக்குக. தமிழ்க்குடியரசின் ஒரு மாவட்டத்தைவிட சிறிய நாடுகளே வெற்றிப்பாதையில் பவனிவரும்போது, நம்மால் ஏன் முடியாது என கேட்டுப்பாருங்கள், வதந்திகள் வெளிப்படும், உண்மை புலப்படும்.

அதனால், தமிழ்குடியரசால் நீடித்து நிற்க முடியாது எனும் பொய்த்தோற்றத்தை உண்டாக்க இந்தியா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எற்பாடு செய்துள்ளன. அவ்வதந்தியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

பொருளாதாரப்போர்கள்:

இந்தியா மற்றும் அதன் நட்பு நாடுகள் பொருளாதர தடையை திணிக்கும் நேரத்தில், குடியரசு எங்கனம் சமாளிக்கும் என்பதை எங்கள் அரசு இப்பொழுதே மக்களுக்கு எடுத்துரைக்கக் கடமைப்பட்டுள்ளோம். உண்மையைச்சொன்னால், பொருளாராதாரத்தடையின்மூலம் தமிழ்குடியரசின் உள் நாட்டுவியாபாரம் பெருகவே செய்யும் என்பது எங்கள் கருத்து. எனென்றால் தடையின் பெயரில் வளர்ந்த நாடுகள் தங்கள் உயரிய தொழில்நுட்பங்களையும், அறிவியல் பாகங்களையும், நம் மண்ணில் கிடைக்கா அரிய பொருட்களையும், யுரெனியம், நிலக்கறி போன்ற எரிபொருட்களைம், அந்தந்த நாடுகள் விற்காமல் நிறுத்திக்கொள்ளும். மேலும் நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கவும் தடை செய்து,  வெளிநாட்டு ஏற்றுமதியை தடைசெய்து, நம் பணவரவை குறைக்கும், இதுதான் பொருளாதாராத்தடையின் மேலோட்டமான அடிப்படை.

இதை உடைத்தெறிந்து, தற்க்காத்து நிலைகொள்வதே எங்கள் அரசின் சவால்.

அடையாளம் வாரம் - 15

தஞ்சை ஆட்சி நகரம்:

வெற்றிமாறனின் தலைமையில் தமிழகத் தனி அரசு, ஆட்சி ஏற்றுக்கொண்டது. தாரை, தப்பட்டைகள் தெருவெங்கும் முழங்கின, வானவேடிக்கைகள், படவெட்டுக்கள் என தமிழகமே திருவிழாக் கொண்டாட்டத்தில் திழைத்தது. ஒவ்வொருவரும் தத்தம் வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டிருந்தனர். இந்த நாளுக்காக எத்தனை ஆண்டுகள், எத்தனை தவம், போராட்டம். எல்லாவற்றிக்கும் சேர்ந்து ஒரேயடியாக விடிந்தது. உலகமெல்லாம் வாழும் தமிழர்கள், ஈழ தமிழர்கள் என கொண்டாட்டம் நீண்டது. ஈழத்தமிழர்கள் தனக்கும் இவ்விடியல் கிட்டாதா என ஏக்கத்தில் காத்திருந்தனர். மாறன் தங்களுக்கு என்ன முடிவை சொல்லப்போகிறார் என எதிர்நோக்கியிருந்தனர். இனியாவது விடியுமா? தங்களுக்கு ஒரு பாசக்கரம் நீளுமா?

இந்தியா என்ற கூரையில் தமிழகம் ஒரு தன்னாட்சி பெற்ற நாடாக இருக்குமா? ""விருப்பமில்லை"" என்று ஒத்தைவரியில் பதில் சொல்லியது, தமிழ்க்குடியரசு. தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு இந்தியாவுடன் பேச ஏற்பாடாகி டில்லி விரைந்தது. இந்தியாவுடன் இருந்த தமிழத்தின் எல்லை அப்படியே, புதிய தமிழ்க்குடியரசின் எல்லையாகத் தொடரும், சொத்துக்கள், இயற்க்கைவளங்கள், இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் எவை எவை தமிழ்க்குடியரசில் அமைந்துள்ளதோ அவை அப்படியே தற்காலிகமாக தமிழத்தின் கட்டுபாட்டில் வரும், அது பற்றி பேச தனித்தனி ஆனைக்குழுக்கள் அமைக்கப்படும்.

தமிழ்க்குடியரசுக்கும் இலங்கைக்குமான கடல் எல்லைகள் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும், கட்சத்தீவின் உரிமையை யாருக்கு கொடுக்கவேண்டும் என்பதை தமிழ்க்குடியரசு மட்டுமே முடிவு செய்யும் எனவும், அது பற்றி புவியியல், அறிவியியல் மற்றும் வரலாற்று பூர்வமான, திடகாத்திரமான பேச்சுக்கு இலங்கையை அழைத்தது. அப்பொழுது, இலங்கை தமிழ் ஆதரவற்றவர்கள் பற்றியும் தமிழ்க்குடியரசு பேசும்.

முறையான அரசமைப்பிற்க்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், மாறனின் தேர்தல் அறிக்கையின் செயல்திட்ட வடிவமே புதிய தமிழ்க்குடியரசின் அடிப்படை வழிகாட்டியாக விளங்கும். அதன் சிறப்பு அங்கமாக, யார் தமிழர்கள் என்ற சமூக அமைப்பை மாறன் தெளிவுபடுத்தினார். அதன்படி, முன்னால் தமிழகம் பட்டியல் செய்திருந்த குல அட்டவணை உடணடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது, புதிய தமிழரசின் கூற்றுப்படி, தமிழர்கள் என்பவர்கள் மண்ணின் மைந்தர்கள் மட்டுமே, அதற்க்கு சான்றாக குலம் (ஜாதி) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், அதாவது, அண்டை மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த மக்கள் இனம்பிரிக்கப்படுவர். தமிழர்கள் தனியாக இனம்கானப்படுவர், குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் என்னும் போர்வையில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் வேற்றார் அட்டவனையிலிருந்து நீக்கப்படுவர், எ.காட்டாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் பெரும்பாலும், ஆதி திராவிடர் என்ற போர்வையில், வேற்றாரே இருக்கின்றனர். கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை உங்கள் பார்வைக்கு, இங்கே சிவப்பில் எழுதியுள்ள அனைவருமே தமிழர்கள் அல்லாதவர்கள், இதுவரை மள்ளர், பறையர், பரவர் போன்றோர் அனுபவிக்கவேண்டிய அனைத்து நலன்களும் வேற்றானால் கூறுபோடபட்டன என்பதே உன்மை, இதனால் நம் மண்ணின் மைந்தர்கள் அப்படியே அமுக்கப்பட்டனர். இது வெறும் சான்று மட்டுமே, இதைபோன்ற போர்வைமுகங்கள் கிழித்தெறியப்படும்.


1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
12. சங்கிலியர், சக்கிலியன்
13. சாலாவாடி
14. சாமார், மூச்சி
15. சண்டாளா
16. செருமான்
17. தேவேந்திர குலத்தார்
18. டோம், தொம்பரா, பைதி, பானே
19. தோம்பன்
20. கொடகலி
21. கொடடா
22. கோசாங்கி
23. ஹொலையா
24. ஜக்கலி
25. ஜம்புவுலு
26. கடையன்
27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
28. கல்லாடி
29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
30. கரிம்பாலன்
31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
32. கோலியன்
33. கூசா
34. கூத்தன், கூடன்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
35. குடும்பன்
36. குறவன், சித்தனார்
37. மடாரி
38. மாதிகா
39. மைலா
40. மாலா
41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
42. மாவிலன்
43. மோகர்
44. முண்டலா
45. நலகேயா
46. நாயாதி
47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
48. பகடை
49. பள்ளன்
50. பள்ளுவன்
51. பம்பாடா
52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
53. பஞ்சமா
54. பன்னாடி
55. பன்னியாண்டி
56. பரையன், பறயன், சாம்பவார்
57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
59. புலையன்
60. புதிரை வண்ணான்
61. ராணேயர்
62. சாமாகாரா
63. சாம்பான்
64. சபரி
65. செம்மான்
66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
67. தோட்டி
68. திருவள்ளுவர்
69. வல்லோன்
70. வள்ளுவன்
71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
72. வாத்திரியன்
73. வேலன்
74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
75. வெட்டியான்
76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

நாங்கள் எப்பொழுதெல்லாம் குலத்தை பற்றி பேசுகிறோமோ , குலப்பிரிவினையை ஏற்ப்படுத்துகிறோம் என்றும் இது தமிழ் தாலிபான் அரசு என்றும் கூச்சலிட ஆரம்பித்துவிடுகின்றனர். இது உன்மைக்கு புறம்பான கூப்பாடு, எங்கே தங்கள் முகத்திரை கிளிந்துவிடுமோ என்ற பயம். புதிய தமிழரசில் யாரும் பயப்படத் தேவை இல்லை என்று உறுதி தருகிறோம், அதே நேரத்தில் ஏமாற்றியும், தங்கள் அடையாளங்களை திரிபு செய்தும் பிழைத்துக்கொண்டிருந்தவர்களுக்
கு இது ஒரு முற்றுப்புள்ளி ஆகும். தமிழ்க்குடியரசில் எல்லோரும் வாழலாம், ஆனால், தமிழன் மட்டுமே ஆள்வான், இது எங்கள் பிறப்புரிமை, எக்காரணத்தைக்கொண்டும் ஆளும் உரிமையை மட்டும் யாருக்கும் விட்டுகொடுக்க மாட்டோம், முன்னூறு ஆண்டுகலுக்கு மேலாக விட்டுகொடுத்ததன் பயனை/விளைவை நாங்கள் நன்றாகவே அனுபவித்துவிட்டோம், போதும்.


தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும் - அனைத்து விவசாய நிலங்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும், அதன் விலையை இருதரப்பு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம். "யார் தமிழர்கள்" என்ற கேள்வி எழும் நிலையில் அவரவர் குலம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இடத்தின் தாய்ப்பத்திரம் முக்கிய ஆதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும் - தமிழகத்தின் அடிப்படை ஆதார வளங்கள் (நீர், நிலக்கரி, சுன்னாம்புத்தாது, பெட்ரொலியம் போன்ற) சார்ந்த தொழில்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும். இதில் வங்கிகளும் அடங்கும்.

அனைத்து பொதுத்துறை/இந்திய அரசு நிறுவனங்கள் தமிழக அரசிற்கு சொந்தமாகும். இதில் அணு/நீர்/அதிவெப்ப மின் நிலையங்களும் அடங்கும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும் - தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு கீழ்: அனைத்து நிறுவங்களிலும் தமிழக அரசு குறைந்தது ஐம்பது பங்குகளை வைத்திருக்கு விரும்புகிறது.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும் - தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு மேல்: அனைத்து நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதற்கு தமிழக அரசு விரும்புகிறது. குறைந்தது முப்பது பங்குகளை அரசு கொள்வளவு செய்ய விரும்புகிறது.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும் - அரை ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் மணை நிலங்கள், தரிசு நிலங்கள் அனைத்தையும் தமிழக அரசு கையகப்படுத்தும்.

இவைபற்றி பேசி முடிவுக்கு வர தனி ஆனையம் ஒன்று அமைக்கப்படும். இது தமிழர் வள மீட்பு ஆனையம் என்ற பெயரில் குடியரசுத்தலைவரின் நேரடி கட்டுபாட்டில் இயங்கும்.

புலம்பெயர் தமிழர்கள் ஆனையம்:
தமிழர்கள் என்று ஆதாரம் வைத்திருக்கும் அனைவருக்கும் தமிழ் குடியரசில் குடியுரிமை வழங்கப்படும், அவர்கள் வேறு நாட்டினர் என்கிற பட்சதில் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும், தங்கள் மனுவை அனுப்பும்போது, தங்கள் கடவுகோப்பு, மற்றும் குல சான்றிதல் இனைத்து குடியுரிமை இயக்ககதிற்க்கு அனுப்பவேண்டும், மேலும் இயக்ககத்திற்க்கு சொந்தமான இனையத்தில் நேரடியாக மின்மனுவை அனுப்பலாம். இலங்கை மற்றும் தமிழீழ மக்களுக்கும் இது பொருந்தும்.

வெளிநாட்டுக் கொள்கை:
எங்களுக்கு எந்த ஒரு நாடும் பகை நாடு அல்ல, இந்தியா உட்பட. அரசின் வழிகாட்டுதலுக்கினங்க ஒருங்கினைந்து செயல்படும் எந்த ஒரு நாடும்/எந்த ஒரு தனி மனிதனும் இங்கே வாணிகம்/தொழில் செய்யலாம், கொள்கை இன்னும் பெயரளவிலே இருப்பதாலும், நாடுகள் இப்பொழுதுதான் அலுவலக ரீதியாக பேசத்தொடங்கியிருப்பதாலும் இதுபற்றி தெளிவான கொள்கை வகுப்பு செய்யப்படும்போது முறைப்படி அனைத்து நாடுகளுக்கும் வரைவு அனுப்பிவைக்கப்படும்.

மத வழிப்பட்டு கொள்கை:
தமிழ் குடியரசு எந்த மதத்தையும் சாராத அரசு. அனைத்து மதங்களையும் மதித்து அரசு செயல்படும்.

கல்வி முறைப்படுத்தும் ஆனையம்:
இந்திய வழி கல்வி (மெக்காலே கல்வித்திட்டம்) முடிவுக்கு கொண்டுவரப்படும். வளர்ந்த நாடுகளில் இருப்பதைப்போல் தாய்மொழிக்கல்வி செயல்படுத்தப்படும், தமிழ் வரலாறு மற்றும் தமிழன் உயர்ந்து நின்ற தருனங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டு மன உறுதியுடன் குழந்தைகள் வளர்க்கப்படுவார்கள். முறையான, சிறப்பான ஆங்கிலம் கற்றுத்தரப்படும்.

அடையாளம் வாரம் - 14

அனணவரும் எதிர்பார்த்தது போலவே, வெற்றிமாறனின் தமிழ் குடியரசு கட்சி அணைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. தமிழ்செல்வனின் தொலைக்காட்சி உரை......"" வணக்கம், தமிழக மக்கள் அணைவருக்கும் நன்றி, இது உலகின் முதல் தமிழ் அரசு., பத்துக்கோடி மக்களின் மனது, ஆளுமை ஏக்கம், ஆன்மை, விருப்பம் இன்று நணவாகியது. இது உங்கள் வெற்றி, உலக தமிழ் மக்களின் வெற்றி. இந்நன்நாளில் நம் வேந்தர், முதல்வர், தமிழரசிற்கு அடிக்கல் இட்ட மாமேதை வெற்றிமாறன் அவர்கள் சிறைவாசமாகியிருக்கிறார், அவரை உடனடியாக இந்திய அரசு விடுதலை செய்யுமாறு, எங்கள் கட்சிக்கு வாக்கிட்ட அணைவரின் சார்பிலும், மக்களின் தீர்ப்பை மதித்து, மக்களாட்சிக்கு வழிவிடுமாறு இந்திய அரசை வலியுருத்துகிறோம்.

இந்நேரத்தில், இந்திய அரசின் கைகளில் எங்கள் கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறோம். இந்திய அரசிற்கு மட்டுமின்றி அணைத்துலக நாடுகளின் தலைவர்களுக்கும் கிட்டியிருக்கும். அக்கடித்ததில், மக்கள் வாக்கெடுப்பு நடந்தவிதம், ஒவ்வொரு சின்னத்திற்க்கும் கிடைத்த வாக்குகள், மொத்தம் கிடைத்த வாக்குகள் என அனைத்து விவரங்களும் உள்ளடக்கி மிக நீண்ட கடிதம் அனுப்பியிருக்கிறோம், கடைசி வரியாக எங்கள் தமிழரசை அனைத்து நாடுகளும் அங்கீகரிக்க வேண்டியுள்ளோம், இந்திய அரசையும் கேட்டுக்கொண்டுள்ளோம். மக்களின் தீர்ப்பை எத்தனை நாடுகள் மதித்து நம்மை ஏற்றுக்கொள்கின்றன என நாமும் பார்ப்போம். நம் தமிழரசு நாளை பதவி ஏற்க்கிறது. வெற்றிமாறன் வரும்வரை நான் குடியரசு தலைவராக இருப்பேன், மேலும் முக்கிய அமைச்சர்கள் பெயர்கள் நாளை வெளியிடப்படும்.

இந்திய அரசு தங்கள் குழுக்களை அனுப்பி பேச முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லை, அரசு, படையனிகள், பொருளாதாரம், சொத்து போன்ற முறைப்படியான பரிமாற்றங்களுகாக நிறைய பேசவேண்டியுள்ளது என்பதை இந்திய அரசே அறியும் என நினைக்கிறோம்.

மீண்டும் ஒருமுறை நன்றிகளை கூறி விடைபெறுகிறேன்""".

அதேநாள் மாலைக்குள், நானூறு பேர் கொண்ட குழு 202 நாடுகளுக்கு, குழுவிற்கு இருவர் வீதம் பறந்தனர். அனைவர் கைகளிலும் ஒரு வரைவு எடுத்துச்சென்றனர். எத்தனை நாள் காத்துக்கிடந்தாவது ஒவ்வொரு நாட்டின் தலைவர்களை சந்த்தித்துவிட்டுதான் வரவேண்டும் என்பது பனிக்கப்பட்ட கட்டளை. வரைவு கூறுவதாவது, ""ஒரு நாட்டின் அங்கீகாரம் என்பது, உருகுவே-வில் இருக்கும் மோண்டிவிடிடோ (1933ம் ஆண்டு) மாநாடு தத்துவப்படி, ஒரு நாடு தனனை ஒரு தனிகுடியரசாக அறிவிப்பதற்க்குண்டான மிக முக்கிய தகுதிகளாக நான்கை வகுத்துள்ளன, அவைகளாவன, 1. வரையருக்கப்பட்ட எல்லைகள் 2. நிரந்தரமான, தொடர்ச்சியான மக்கள் தொகை 3. அரசாங்கம் 4. ஏனைய நாடுகளுடன் பேசுவதற்க்கோ, அலுவலகரீதியான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய தகுதி. இந்த நான்கும் இருந்து, ஏதெனும் ஒரு ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடு தங்களை அங்கீகரிக்கும் என்றால், உலக சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்பது தத்துவம். எனவே, எல்லா தகுதியும் இருக்கும் எங்களுக்கு ஏன் தத்தம் நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது எங்கள் தாழ்மையான வேண்டுகோள்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள், அதனால் தான் என்னவோ சீனா தனது அங்கீகாரத்தை முதலில் கொடுத்தது, அதனை தொடர்ந்து பாகிஸ்தான், ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளும் (அசர்பைஜான், கஜகஸ்தான், துர்க்மினிஸ்தான்,கிரைகிஸ்தான்)
, யுகோஸ்லொவியாவிலிருந்து பிரிந்த நாடுகளும் (சுலொவெனியா, குரொசியா, போஸ்னியா, மோண்டிநிக்ரோ, கொசொவா) உடனடியாக அங்கீகரித்தன. மேற்குலகமும், ஜப்பானும், இங்கிலாந்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுரை கூறின. இதுவரை வாய் திறவாமல் மௌனித்துக்கொண்டிருந்த இந்தியா, பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மட்டுமில்லாமல், உடனடியாக வெற்றிமாறனை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்க்கு ஒத்துக்கொண்டது. அதன் கருப்பொருளாக, இந்தியா என்ற கூரையில் தமிழகம் ஒரு தன்னாட்சி பெற்ற நாடாக விளங்கும், எ.காட்டாக தைவான், ஸ்காட்லாந்து, ஹாங்க்காங்க் போன்ற நாடுகளை சுட்டிக்காட்டியது.

இப்பொழுது, பந்து தமிழரசின் கோட்டையில்.......

அடையாளம் வாரம் - 13

நாங்கள் இரத்தின சுருக்கமாக சொல்லவிரும்புகிறோம் நாங்கள் பார ஹோதியில் மட்டும் இருந்து செயல்படவில்லை, நீங்கள் எங்கள் மண்ணை கட்டுக்குள்  கொண்டுவந்துவிட்டோம் என்ற ஆர்ப்பரித்தவுடன் நாங்கள் எங்கள் கள நடவடிக்கைகளை மாற்றிவிட்டோம், எங்கள் மண்ணை நீங்கள் ஆட்சி கொள்ள இயலாது, எங்களை கட்டிவைத்திருக்கவும் முடியாது, எங்கள் விலங்குகளை அவிழ்த்துவிடுவீர்கள். இனி நாங்கள் அடிமைகள் அல்ல. எங்கள் ஆட்கள், உங்கள் படையணிக்குள் புகுந்திருக்கிறார்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றுள்ளோம். அதற்குள், நீங்கள் சின்ன கணக்கு ஒன்றை போட்டுவிடுங்கள், எங்களின் எல்லா ஆட்களையும் கட்டுக்குள் கொண்டுவர எத்தனை நாழிகை அல்லது நாட்கள் பிடிக்கும், அதுவரை நாங்கள் பொறுமை காத்துகொண்டிருப்போம் என நீங்கள் கணவு ஏதும் காணவேண்டாம், நான்கு மணிக்குள் வாக்குபெட்டிகள் நகர ஆரம்பிக்கவேண்டும் இல்லையென்றால் எங்கே வெடிக்கும் என எங்களுக்கே தெரியாது, இனி வெடிக்கப்போவது வெறும் காகிதங்களும், செய்திகளும் அல்ல என்பதை நினைவுபடுத்தவிரும்புகிறோம்.

ஒருதுளி குருதிகூட சிந்தாமல் எங்கள் உரிமையை பெற்றுவிடுவதுதான் எங்கள் நோக்கம், அதே நேரத்தில் மக்களின் எண்ணங்களை தொட்டுப்பார்க்க விரும்பாமல், பயந்துகொண்டு... எங்கே அனைத்து மக்களும் இந்திய ஆட்சியை வேண்டாம் என கூறிவிடுவார்கள் என பயந்துகொண்டு, தேர்தலை நடத்தவிடாமல் இடையூறு செய்ய நினைக்கும் மனிதாபிமானமற்ற அரசை இசையவைப்பதற்க்காக, எங்கள் இனத்தை கூறுபோடும்போது வேடிக்கை பார்த்துகொண்டிருந்த மக்களில் சிலரின் குருதியோ, உயிரோ போய்த்தான் ஆகவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை செய்வதற்கு சிறிதும் கவலைப்படமாட்டோம், மேலும் எங்களைவிட இந்தியர்கள் மீது உங்களுக்குத்தான் அக்கரைவேண்டும். உலகின் அதிக மக்கள்தொகை உங்கள் நாட்டில் இருப்பதால், உங்கள் மக்களின் உயிர் மீது உங்களுக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு பரிதாபம் இருக்கிறது. எனவே அந்த ஒரு நிலைக்கு, முடிவெடுப்பதற்கு இந்திய அரசு எங்களை தள்ளப்படும் பட்சத்தில் இந்திய மக்களிடமும், உலக சமுதாயத்திடமும் நாங்கள் மன்னிப்புகேட்கிறோம்.


நாங்கள் கேட்பது மக்களை முடிவு எடுக்கவிடுங்கள்...என்பதுதான். உங்கள் ஆட்சி மீதும், உங்களின் ஒருமைப்பாட்டின் மீதும் உங்களுக்கு நன்பிக்கை இல்லையா? உலக நாடுகளே ஏன்
மௌனித்திருக்கிறீர்கள்? இந்தியாவின் மாபெரும் வியாபார சந்தை வேண்டுமென்றா? உலக நாடுகளே உங்களின் குரல் உரக்க ஒலிக்கும் என நாங்கள் காத்திருக்கிறோம்.

தமிழக தேர்தல் களம்:
இந்திய படையணிகள் மேலும் தாக்குதல் முகம் கொள்ளாது இருந்ததால் காலை ஏழுமணிக்கெல்லாம் மக்கள் வரிசைவரிசையாக வர ஆரம்பித்தனர். கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. மாறனின்
செயல்வீரர்கள் பத்து மணித்துளிகளுக்கு ஒருமுறை தேர்தல் நல்லபடியாக நடக்கும், அனைவரும் வாருங்கள், பயப்படவேண்டாம், தேர்தல் நடக்க ஒத்துழைப்பு கொடுக்குமாறும் அறிவிப்பு செய்துகொண்டே இருந்தனர். 07.30 மணிக்கெல்லாம் வாக்குப்பெட்டி வந்தது, அடுத்த பத்து மணித்துளியில் சின்னங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு மக்கள் சரியாக எட்டு மணிக்கெல்லாம் வாக்களிக்க ஆரம்பித்தனர். அனைத்து வாக்கு பதிவுகூடங்களும் நேரலை செய்யப்பட்டன, பதிவும் செய்யப்பட்டன. ஒரு மணிக்கொருமுறை பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்யப்பட்டன. அனைத்தும் நேரலை செய்யப்பட்டது.
மாலை 5.00 மணி. சராசரியாக 92 விழுக்காடு வாக்குகள் பதிவு
செய்யபட்டிருந்தது, 120 தொகுதிகளில் 100 விழுக்காடு பதிவு செய்யபட்டிருந்தது. வெற்றிமாறன் தேர்தல் அறிவிப்பிற்கு பின் கைது செய்யப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்கமுடியவில்லை. தேர்தல் முடிந்ததும் வாக்குகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்யப்பட்டது, அதன்பின் ஒரு அறிவிப்பில், இந்திய அரசின் உதவிக்கு நன்றி எனவும், வாக்கு எந்திரங்களை வாக்குகள் எண்ணும்வரை தாங்கள் வைத்திருக்க நினைப்பதாகவும், அதற்க்கு இந்திய அரசின் உதவி தேவை எனவும் முறைப்படி கேட்கப்பட்டது, விருப்பமில்லைஎன்றால் வாக்கு எந்திரங்களை உடனே திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டது. இந்திய அரசு எந்த முடிவும் எடுக்காததால் பேட்டிகள் அனைத்தும் இரவு, பகல் நேரலை செய்யப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டது.
நாளை அதிகாலை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது