Wednesday, October 28, 2009

தீபாவளி கூத்து

ஒருவழியாக இந்த தீபாவளி கூத்து முடிந்துவிட்டது. வாழ்த்துக்கள் அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
தைப்பொங்கல், கபடி, கரகாட்டம், வில்லுப்பாட்டு, வெள்ளைவேட்டி, குலதெய்வம் கோயில் - இவை எல்லாத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. தமிழனின் அடையாளங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதெல்லாவற்றையும் விட, இதெல்லாம் நாகரீகமற்ற செயல் அல்லது கௌவ்ரமல்லாத செயல். கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

தைப்பொங்கல்:
கரும்பு சுமந்து, வாசலில் கோலமிட்டு, தெருவில் பொங்கல் வைத்து, குலதெய்வத்திற்கு படைத்து... அட.. அதெல்லாம் யாருங்க இந்தக்காலத்துல செய்யுறா .. பேசாம பொங்கல் வச்சு தாரேன்.. சாப்பிட்டு டி.வில விஜயகாந்த் படம் போடுவாங்க பாருங்கன்றேன்.. வயசான காலத்துல.... இதுதான் நம் வீட்டில் நடக்குற எதார்த்தம்.

கபடி: ஏதாவது மொரட்டுத்தனமா வெளாண்டு.. கையக்கால ஒடச்சிக்கிடாத. ஏண்டா நம்ப பக்கத்துவீட்டு நாயக்கர் மகனெல்லாம் ஏதோ கிரிக்கெட்டுன்னு வேலையாடுராண்டா, நீ ஏன்டா கபடி கபடின்னு ஆடுற.

கரகாட்டம், வில்லுப்பாட்டு: டேய்.. மாரியம்மன் கோயில் திருழா வருது, ராத்திரில போய் கள்ளகுடிச்சுபுட்டு, கரகாட்டம் பாக்க போயிராதடா. அவிங்க என்னடா பேசிக்கிறாங்க அசிங்க அசிங்கமா, அரைப்பாவடை போட்டுக்கிட்டு ஆடுறதும், கொஞ்சம்கூட நாகரீகமா இல்லைடா. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. (அப்படின்னா பார்ல போய் பீரகுடிச்சிட்டு, கேபரே டான்ஸ் பாக்கலாமான்னு.. இந்த நாகரீகத்தை ஒத்துக்குவீங்களான்னு...மகன் மனசுக்குள்ளயே சொல்வது அந்த அம்மாவுக்கு கேக்குதோ என்னமோ..)

வெள்ளைவேட்டி: ஏங்க.. எங்கசொந்தக்காரங்கல்லாம் வராங்க.. ஒழுங்கா.. பேன்ட், சட்டை போட்டுக்கிட்டு வாங்க. வேட்டிகட்டிகிட்டு வரதா இருந்தா.. நீங்க வரவே வேண்டாம். அவருக்கு ஒடம்பு சரியில்லைனு நான் சாக்கு சொல்லிக்கிறேன்.

குலதெய்வம் கோயில்: இந்தவருசம் எப்படியாது சபரிமலைக்கு போய் நேந்துகிரனும். அப்பா... நம்ப கொலசாமி கோயில்.. அட அங்க போனா என் பங்காளிக கூட மல்லுகட்டிக்கிட்டுதானப்பா வரணும்.. அதேன் அந்தப்பக்கம் காலே வைக்கிறது இல்லை. (குறிப்பு: குலதெய்வ வழிபாடுகள் நம் தமிழர் கடைப்படிக்கும் முக்கிய வழக்கம், ஆனால் நாளைடைவில், அங்கே பூணூலும், கற்பக விநாயகர் சந்நிதியும், அய்யங்கார் (அய்யர் அல்ல, பார்ப்பான் அல்ல, நாமம் போட்ட (வினைத்தொகை)-நாமம் போட்ட, போட்டுகொண்டிருக்கிற, போடப்போகிற-எல்லாக்காலங்களிலும்) பூஜையும் நிறைய புகுந்துவிட்டன. இதில் சாதிப்பாகுபாடே கிடையாது. பார்ப்பனன் என்னை அமுக்கிவிட்டான் எனகுறைப்பட்டுக்கொள்ளும் பள்ளர், பறையர், நாடர், ஆசாரி, தேவர், அகமுடையார் என யாரும் விதிவிலக்கல்ல. எனென்றால் நமக்கு குலதெய்வ வழிபாடு ஒரு கௌவ்ர குறைச்சலாக போய்விட்டது.

சொல்வதெல்லாம் உண்மைதான், இல்லைஎன்று சொல்லவில்லை. நாம் காலங்காலமாக பழகிவிட்டோம் என்பதுதான் கடைசியில் கூறும் பதில்.
ஏற்றுக்கொள்கிறோம். ஏன் மாறக்கூடாது. தமிழ் அடையாளங்களை தேர்ந்தெடுத்து அளிக்கும் ஒரு கூட்டம் செய்கிற வேலைதான். இதை செய்வது பார்ப்பானை விட விசமான கூட்டம்தான் """போர்வைத்தமிழர்கள்"". நாங்களும் தமிழர்கள்தான் எனக்கூறிக்கொள்ளும் வந்தேறிகள். தமிழன் யார் என்பதற்கு தராசு சாதியாக மட்டுமே இருக்கமுடியும். ஆம். சாதித்தமிழன் மட்டுமே தமிழன்.

அன்புடன்,

இரா.த. ஜெயக்குமார்

1 comment:

பாக்கியராஜ் said...

அய்யா - உங்கள் கருத்து உதவி தேவை - தொடர்புகொள்ளவும்
pakkiyarajaa@gmail.com .

நன்றி